பாதுகாப்பு செய்திகள்
வாழ்த்துச் செய்தி
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம்.
ஊடக அறிக்கை
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துமுகமாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை முப்படை நிவாரணக் குழு மியான்மாரில் மனிதாபிமான நடவடிக்கைகளில் மும்முரத்துடன் ஈடுபட்டு வருகிறது
முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, அண்மையில் மியான்மாரில் ஏட்பட்ட பூகம்பத்ததை தொடர்ந்து நடந்து வரும் அனர்த்த நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
புதிய பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பதவியேற்பு
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரியான பிரிகேடியர் ஏ.கே.டி. அதிகாரி, இன்று (ஏப்ரல் 09) சுப நேரத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுக்கு 'Clean Sri Lanka' திட்டம் குறித்து
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
பாதுகாப்பு அமைச்சின் கீழ் (MoD) உள்ள நிறுவனங்களின் நிர்வாக மட்டம் அல்லாத பணியாளர்களுக்கு 'Clean Sri Lanka' திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைச் பெற்றுக்கொள்ள நோக்கமாகக் கொண்ட தொடர் நிகழ்ச்சிகளின் முதல் கட்டம் இன்று (ஏப்ரல் 8) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கையின் பிரதி பாதுகாப்பு
அமைச்சரைச் சந்தித்தார்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய போல் ஸ்டீபன்ஸ், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில்
இலங்கை முப்படைப் படையினர் மும்முரம்
மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அனர்த்த நிவாரண மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்ட, முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, மியான்மரில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கடற்படை கப்பல் சஹ்யத்ரி வருகையுடன் இந்தியா-இலங்கை பாதுகாப்பு
ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டது
இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயத்துடன் இந்த நிகழ்வு இணைந்திருப்பது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது நமது இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் வளமான மற்றும் பாதுகாப்பான இந்து சமுத்திர பிராந்தியத்திற்கான நமது தலைவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இலங்கையின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணக் குழு
மியான்மாரை வந்தடைந்தது
மியன்மாருக்கான இலங்கையின் சிறப்பு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவி அனர்த்த நிவாரணக் குழு, சனிக்கிழமை (ஏப்ரல் 05) யங்கோன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அனர்த்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் சிறப்புக்
குழு மியான்மருக்கு சென்றது
சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம் ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது.
இலங்கை கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை ஆகியவை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு பங்களிக்கின்றன
அதன்படி, 2025 ஏப்ரல் 03, அன்று, ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் கடற்படையினர், கொழும்பு காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையை சுத்தம் செய்வதற்காக கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் போர் பொறியாளர்கள்
கருத்தரங்கு 2025 இல் சிறப்புரை நிகழ்த்தினார்
‘விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய சவால்களால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், தகவமைப்பு என்பது ஒரு தேவையாக மாறியுள்ளது.’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வியாழக்கிழமை (ஏப்ரல் 3) கொழும்பில் உள்ள கிராண்ட் மெய்ட்லண் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பொறியாளர்கள் கருத்தரங்கில் சிறப்புரையாற்றும்போது தெரிவித்தார்.
இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்து வழங்கும் உதவிகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்
‘இந்து சமுத்திரத்தில் அதன் மூலோபாய அமைவிடம் காரணமாக, பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வில் (MDA) கடல்சார் பாதுகாப்பு உத்தி முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது’.
நல்லெண்ணப் விஜயம் மேட்கொண்டு ஜப்பான் JMSDF கப்பல்கள் கொழும்பு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு ஜப்பானிய கடற் படை (JMSDF) கப்பல்களான Bungo மற்றும் Etajima செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) இலங்கையை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தாய் வந்தடைந்த இக்கப்பல்களுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய இலங்கை கடற்படையினால் வரவேற்பலிக்கப்பட்டதாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் வரவு செலவு திட்ட அமலாக்கம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது
மார்ச் 21 அன்று பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் வரவு செலவுத் திட்ட அமலாக்கம் தொடர்பான கூட்டமொன்று புதன்கிழமை (மார்ச் 26) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம், ஜனாதிபதியின் தொலைநோக்கு பார்வை மற்றும் தேசியக் கொள்கையுடன் வரவு செலவுத் திட்டத்தை ஒன்றிணைத்து செயல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாட நடைபெற்றது.
புதிய NCC இயக்குனர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
தேசிய மாணவர் படையின் (NCC) புதிய இயக்குனர் பிரிகேடியர் ரஜித பிரேமதிலக்க, வியாழக்கிழமை (மார்ச் 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களை சந்தித்தார்.
இலங்கை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) கேர்னல் டெரன் வூட்ஸ், செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொலும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் பங்களாதேஷில் 54வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தை கொண்டாடியது
இலங்கையில் உள்ள பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் புதன்கிழமை (மார்ச் 26) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் பங்களாதேஷின் 54வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தைக் கொண்டாடியது.