பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் கடற்படை கப்பல் PNS ASLAT கொழும்பு வருகை

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) ASLAT உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இன்று காலை (​பெப்ரவரி 01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைதந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேட்பளிக்கப்பட்டதாக கடற்படை ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘அமான் - 2025’ பல்முக பயிற்சியில் பங்கேற்பதற்காக விஜயபாகு கப்பல் இலங்கையை விட்டு வெளியேறியது

பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட AMAN-2025 பல்முக பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படையின் பிரதிநிதியாக, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு இன்று (2025 ஜனவரி 30) கொழும்பு துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு இன்று புறப்பட்டது. கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு புறப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, இன்று (ஜனவரி 30) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

77வது தேசிய சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும்
தயார் நிலையில் உள்ளன

77 ஆவது தேசிய சுதந்திர தின விழா நாட்டின் ஒரு புதிய சதாப்தத்தை ஆரம்பிக்கும் சுதந்திர தின நிகழ்வாக அமையும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன இன்று (ஜனவரி 30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சுதந்திர விழா குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மக்களின் உரிமைகளை நிலைநிறுத்தி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலை நிறுவுவதற்கான முயற்சியின் ஆரம்பமாக இது அமையும் என் கூறினார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெளிவுபடுத்தல்

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதன் விளைவாக எழுந்துள்ள நிலைமை குறித்து தெளிவுபடுத்த, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோரின் தலைமையில் இன்று (ஜனவரி 29) பாதுகாப்பு அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் அன்டணி சி. நெல்சன் (அமெரிக்க இராணுவம்) உட்பட அமெரிக்க தூதரகத்தின் சில அதிகாரிகள் இன்று காலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போரில் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்த போர் வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் தொடர்பில் மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது

நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான கூட்டமொன்று, இன்று (ஜனவரி 28) பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க (ஓய்வு), இன்று (ஜனவரி 28) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை மியான்மார் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கையில் உள்ள மியான்மார் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின், கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 28) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாக எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை விமானப்படையின் (SLAF) புதிய தளபதியாக எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, WWV, RWP, RSP மற்றும் மூன்று பார்கள், USP, Fndu (சீனா), psc, qhi அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பில் அவுஸ்திரேலிய தின நிகழ்ச்சி நடைபெற்றது

ஜனவரி 26ஆம் திகதி நிகழும் அவுஸ்திரேலிய தினத்தைக் முன்னிட்டு கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் நேற்று (ஜனவரி 27) அவுஸ்திரேலிய தின நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ Dr.நளிந்த ஜயதிஸ்ஸ இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படைத் தளபதி பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

ஒய்வு பெரும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, திங்கட்கிழமை (ஜனவரி 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம்
விமானப்படைத் தளபதி சந்தித்தார்

சேவையை விட்டு ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இன்று (ஜனவரி 27) ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் 76வது இந்திய குடியரசு தின விழா நடத்தப்பட்டது

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) கொழும்பு Indian Houseல் இந்தியாவின் 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க (ஓய்வு), இன்று (ஜனவரி 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் சாதனை படைத்த மிட்ஷிப்மேன் தென்னகோனை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் (PNA) நடைபெற்ற 122வது மிட்ஷிப்மேன் மற்றும் 30வது குறுகிய சேவை ஆணைய (SSC) பாடநெறியின் அதிகாரமளிப்பு விழாவின் போது, Sword of Honour விருதை பெற்ற இலங்கை கடற்படையின் மிட்ஷிப்மேன் T M I விமுக்தி தென்னகோனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

26வது ASEAN பிராந்திய மன்ற பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்களின் தலைவர்களின் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

26வது ASEAN பிராந்திய மன்ற பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்களின் தலைவர்களின் கூட்டம் (ARF HDUCIM) ஜனவரி 23ஆம் திகதி கொழும்பு Galle Face ஹோட்டலில் ஆரம்பமாகியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுத்தமான இலங்கை திட்டம் குறித்த மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது

"சுத்தமான இலங்கை" திட்டம் குறித்து அமைச்சின் ஊழியர்களுக்கு அறிவுறுத்த மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சில இன்று (ஜனவரி 24) மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கமைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்களை ஊக்குவித்தல் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட முக்கிய சமூக-பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ASEAN பிராந்திய மன்றம் - HDUCIM நிகழ்வில் பாதுகாப்பு கல்வி மற்றும் பிராந்திய
ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 26வது ASEAN  பிராந்தியத்தின் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் (ARF-HDUCIM) உரையாற்றுகையில், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்பவும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும் பாதுகாப்பு கல்வியின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

CSD ற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் KHP பாலித்த பெர்னாண்டோ (ஓய்வு), இன்று (ஜனவரி 23) தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

DSCSC யின் கட்டளை அதிகாரி பாதுகாப்பு செயலாளரை
மரியாதையை நிமித்தம் சந்தித்தார்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் HHKSS ஹேவகே, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 22)சந்தித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை
ஒழுங்குபடுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல்

தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களினால் செயல்படுத்தப்படும் வேலைகள் மற்றும் அவை தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை ஆராய்வதற்கும், அச்சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வழிமுறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று திங்கள் கிழமை (ஜனவரி 20) பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏட்பட்டுள்ள அனர்த்த நிலைமை
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது

அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டு தொகை 250,000 ரூபாயிலிருந்து 1 மில்லியன் ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது