பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (ஜனவரி 02) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். வைஸ் அட்மிரல் பானகொட கடற்படையின் 26வது தளபதியாக பதவியேற்றதன் பின்னர் பாதுகாப்பு பிரதி அமைச்சருடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி கடமைகளை பொறுப்பேற்பு

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு)  தனது நியமனக்கடிதத்தினை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடமிருந்து  (ஓய்வு)  இன்று (ஜனவரி 01) பெற்றுக் கொண்டார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய நீர்வரைவியல் அலுவலகத்தின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் கூட்டம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (டிசம்பர் 31) இலங்கை தேசிய நீர்வரைவியல் அலுவலகத்தின் (SLNHO) தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், நீர்வரைவியல் சபையின் தலைவர் (NHC), இலங்கை கடற்படையின் பிரதான நீர்வியலாளர் மற்றும் SLNHO இன் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து
பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் (CRD) மற்றும் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, தேசிய பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (டிசம்பர் 31) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம்

இலங்கை இராணுவத்தின் (SLA) 25 வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ RSP, psc, IG, MA in SSS (USA), MSc in SSS (KDU) அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படையின் தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்

வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, RSP, USP, ndc, psc, MMaritimePol, MBA in HRM, PG Dip in HRM, BMS, Dip in Mgt, AFIN இலங்கை கடற்படையின் (SLN) 26வது தளபதியாக அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க அதிகபட்ச முயற்சிகளை
எடுத்து வருகிறோம் - பாதுகாப்புச் செயலாளர்

புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் நமது பாதுகாப்புப் படைகளை நவீனமயப்படுத்த அதிகபட்ச முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2004 சுனாமியின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) இன்று (டிசம்பர் 26) நடைபெற்ற ‘தேசிய பாதுகாப்பு தினம்’ நினைவு விழாவின் போது, ​​35,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட 2004 சுனாமி பேரழிவின் 20வது ஆண்டு நிறைவு நிகழ்வும் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போர் வீரர்களின் நலன் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் போரில் காயமடைந்து அங்கவீனமுற்ற போர்வீரர்கள் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சபையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (டிசம்பர் 26) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்கள் வலுவான அர்ப்பணிப்பு நாட்டிற்குத் தேவை - இராணுவ கெடெட் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்

"ஒரு நாட்டின் மிகப் பெரிய பொக்கிஷம் அதன் குடிமக்கள், அவர்களைப் பாதுகாப்பதே உங்களின் முதல் மற்றும் முக்கியக் கடமை. இந்தப் பொறுப்பு உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். அவர்களின் உயிரைப் பாதுகாப்பது உங்கள் தலையாய கடமையாகும்," என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் கொலன்னாவை வெள்ளத் தடுப்பு
பணிகளில் கவனம் செலுத்தினார்

கொலன்னாவ பிரதேசத்தில் நிலவி வரும் தாழ்நில வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2024 ஆம் ஆண்டின் மூளை ஆரோக்கிய வாரத்தின்
‘ஆதரவு தினம்’ KDU இல் நடைபெற்றது

மூளை சுகாதார வாரம் 2024 இன் ‘ஆதரவு தினம்’ இன்று (டிசம்பர் 19) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) நடைபெற்றது.