பாதுகாப்பு செய்திகள்
பொசன் வாழ்த்துச் செய்தி
இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது. மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம்.
கிளிநொச்சி மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கரப்பந்தாட்ட பயிற்சி
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இலங்கை இராணுவத்தின் 57 ஆவது காலாட்படைப் பிரிவு கிளிநொச்சி பிரதேச மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் கரப்பந்தாட்டப் பயிற்சிப் பட்டறையொன்றை நடத்தியது.
இராணுவப் போர்க்கருவி தொழிற்சாலையை மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆராய்வு
இராணுவ போர்க்கருவி தொழிற்சாலை அதன் சொந்த தொழில்நுட்பம் மற்றும் தொழில் நிபுணத்துவத்தை உபயோகித்து இராணுவத்தின் தேவைகளில் கணிசமான வற்றை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் இராணுவம் பாரிய பங்களிப்பை வழங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் பாராட்டினார்.
முல்லைத்தீவில் இராணுவம் பயன்படுத்திய காணிகள் விடுவிப்பு
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் இதுவரை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை (மே 19) மேலும் சுமார் 08.178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் இன்று (மே 26) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பலைத் தேடும் மற்றும் மீட்கும் பணிக்காக இலங்கை கடற்படை பங்களித்தது
இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பங்களிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்களின் படி இலங்கை கடற்படைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலுடன் கடற்படையின் சுழியோடி குழவொன்று சீன மீன்பிடி கப்பல் விபத்துக்குள்ளான கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.
ஜப்பான் - இலங்கை நட்புறவு சங்கம் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது
ஜப்பான் இலங்கை நட்புறவுச் சங்கம் திங்கட்கிழமை (மே 22) நடைபெற்ற வைபவத்தில் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு வாகனம் மற்றும் இரண்டு ஏணிகளையும் அன்பளிப்பு செய்துள்ளது.
ஓவியர் ஒருவரினால் தேசிய போர் வீரர்களின் நினைவேந்தலை முன்னிட்டு ஓவியங்கள் கண்காட்சி
போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தற்போது இத்தாலி நாட்டின் நேப்லெஸில் பணிபுரிந்துவரும் ஓவியரான செனவிரத்ன தசநாயக்க அவர்களின் ஓவியக் கண்காட்சி மே 21இல் சென். அந்தோணி சர்வதேச பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி நடத்தப்பட்ட 'ஜெய பிரித்' ஆசிர்வாத நிகழ்வு நிறைவு பெற்றது
நாடு, நாட்டு மக்கள், உயிர்த் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் வருடாந்த ‘ஜெய பிரித்’ பாராயணம் செய்யும் நிகழ்வு சந்தஹிரு சேயா வளாகத்தில் இடம்பெற்றது.
14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு ஜனாதிபதியின்
பங்களிப்புடன் இடம்பெற்றது
14வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (மே 19) முப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவிடத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்காக சமூகப் புலனாய்வுப் பிரிவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
நாட்டில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோத சம்பவங்களில் இருந்து குறிப்பாக சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சமூகப் புலனாய்வுப் பிரிவொன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவும் நோக்கோடு உலகளாவிய ரீதியில் பங்களிப்பு செய்யக்கூடியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை உருவாக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
நமது அனர்த்த முகாமைத்துவ துறையை உலக தரத்திற்கு இணையாக மேம்படுத்த விரும்புகிறோம்; எனவே, பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை.