பாதுகாப்பு செய்திகள்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானி ஆகியோர் மிஹிந்து செத் மெதுரவில் போர் வீரர்களுடன் எண்ணங்கள் பகிர்வு
கௌரவ. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஜனாதிபதி பணிக்குழு பிரதானியும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க ஆகியோர் வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் நலன்புரி நிலையமான அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு அவர்களின் நலன்அறிவதற்கு விஜயம் செய்தனர்.
இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர்களின் சேவைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆகியோர் பாராட்டினர்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 24) மொரட்டுவ கட்டுபெத்தவில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
பாதுகாப்பு சேவைகளின் மோட்டார் சைக்கிள்
சாம்பியன்ஷிப் போட்டி - 2023 வெலிசரயில்
இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்திருந்த 12வது பாதுகாப்பு சேவைகளின் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி - 2023 எனும் விருவிருப்பான மோட்டார் சைக்கிள் போட்டி அண்மையில் வெலிசரயில் உள்ள கொழும்பு சுப்பர் கிராஸ் ஓடுதளத்தில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு கல்லூரியில் சுற்றாடல் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான விரிவுரை
பேராசிரியர் சரத் கொட்டகம அவர்களினால் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கற்கை நெறிகளில் பங்கேற்பாளர்களுக்கான விருந்தினர் விரிவுரை அண்மையில் (மார்ச் 22) கொழும்பு 03, காலி வீதியிலுள்ள கல்லூரி வளாகத்தில் நிகழ்த்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவத்தினருக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் (மார்ச் 19) இடம்பெற்றது.
வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை உலக வங்கியின் உதவியுடன் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது -
இராஜாங்க அமைச்சர் தென்னகோன்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகள் பொருளாதார அம்சங்களின் பல துறைகளில் வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த துறைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.
இராணுவத்தின் முதலாவது மகளிர் கண்ணிவெடி அகற்றும் படையினருக்கான சின்னங்கள் அணிவிப்பு
இலங்கை இராணுவத்தின் முதல் தொகுதி மகளிர் கண்ணிவெடி அகற்றும் படையணியின் சின்னம் அணிவிப்பு நிகழ்வு கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரேவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கை ஐ.நா. அமைதி காக்கும் படையணியின் மாலி படைக்குழுவின் மேலதீக படையினருக்கு நம்பிக்கையினை வழுப்படுத்தும் ஐ.நா முன்பணி குழு
தற்போது இலங்கை வந்துள்ள ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் உயர்மட்ட குழு போர் போக்குவரத்து உபகரணங்களின் தொழில்நுட்ப தரம் மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்கும் விரைவில் பணியமற்றுவதற்காக உருவாக்கப்பட்டுளள் போர் போக்குவரத்து பீ-1 குழுவின் செயற்பாட்டு தயர் நிலையினை மதிப்பீடு செய்தவற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த குழு செவ்வாய்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தது.
பாரதிபுரம் மாணவர்களுக்கு இலங்கை இராணுவத்தினரின் நிவாரண பொருட்கள் உதவி
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை கடலோரப் பாதுகாப்புபடை அதிக கடலாமை குஞ்சுகளை கடலில் விடுவித்தது
இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினர் ஆமை முட்டைகளை பாதுகாத்து 2600க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை கடலில் விடுவித்ததாக கடலோரப் பாதுகாப்புபடை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை விமானப்படையினரால் இரத்த தானம்
கொழும்பு இலங்கை விமானப்படை தளத்தின் 63வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
இலங்கை இராணுவ வீரர்களின் சேவைகளை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டினார்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு இன்று (மார்ச் 21) விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரி தனது கடமைகளை பொறுப்பேற்பு
பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர ஆர்எஸ்பி யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்கள் தனது கடமைகளை இன்று (மார்ச் 21) பொறுப்பேற்றுக்கொண்டார்.
தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாப்பா கடமைகள் பொறுப்பேற்பு
பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள், கொழும்பு 3 இல் அண்மையில் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் இரண்டாம் தளபதியாக வியாழக்கிழமை (மார்ச் 16) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
பருத்தித்துறை பொதுமக்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தினறால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தினறால் அண்மையில் முனை, பருத்தித்துறை, சுப்பர்மடம் மற்றும் சாக்கோட்டை ஆகிய கரையோரப் பகுதிகளில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரால் கிராமப்புற மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு
இலங்கை இராணுவத்தினரால் பெரியமடு முஸ்லிம் பாடசாலை மற்றும் தச்சன்மரடமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகை பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் அண்மையில் பெரியமடு முஸ்லிம் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது விநியோகிக்கப்பட்டன.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
பதுளை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின்
மாணவர் அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (DSCSC) மாணவர் அதிகாரிகள் இன்று (மார்ச் 17) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்தனர்.
தமது நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு இலங்கை இராணுவம் வழங்கும் பயிற்சி வசதிகளை மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார்
இலங்கையிலுள்ள இராணுவப் பயிற்சி நிறுவனங்களினால் மாலைதீவு பாதுகாப்புப் படைகளினருக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் பாராட்டு தெரிவித்தார்.
மழையுடனான காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இத்தாலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவர் அதிமேதகு ரிடா ஜூலியானா மன்னெல்லா இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கை இராணுவ வீரர்களின் இரத்ததான நிகழ்வு
கிழக்கு மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 100 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் அண்மையில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இரத்த தானம் செய்தனர்.