பாதுகாப்பு செய்திகள்
உணவுப் பாதுகாப்பு துறைக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவை முக்கியமானது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவை மிகவும் முக்கியமானதாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது.
விபத்தில் சிக்கிய உள்ளூர் மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்
திருகோணமலை கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு பாறையுடன் மோதி விபத்துக்குள்ளான நான்கு (04) உள்ளூர் மீனவர்களை கடற்படை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.
பங்களாதேஷ் மற்றும் நேபாளம் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வருகை
பங்களாதேஷ் மற்றும் நேபாளம் வெளியுறவு அமைச்சர்கள் இன்று (பெப்ரவரி 02) இலங்கை வந்தடைந்தனர்.
சவூதி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் (கலாநிதி) முகமது எஸ்ஸா எச் அல்ஹர்பி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை மரியாதை நிமித்தம் பாதுகாப்பு அமைச்சில் இன்று (பெப்ரவரி 02) சந்தித்தார்.
யுத்தத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் – ஜனாதிபதி
போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகார சபையின் பணிப்பாளராக ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் 2023 ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வரும் படி இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை
பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை நிலையம் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (ஜனவரி 31) பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
முப்படை வீரர்களுக்கு சலுகை விலையில் சீமெந்து வழங்க இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
முப்படை வீரர்களுக்கு சலுகை விலையில் சீமெந்து வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதற்கமைய இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று இன்று (ஜனவரி 30) பாதுகாப்பு அமைச்சில் கையெழுத்திடப்பட்டது.
இலங்கை கடற்படை செல்ல கதிர்காமத்தில் 951வது நீர் சுத்திகரிப்பு
நிலையத்தை நிறுவியது
செல்ல கதிர்காமத்தில் இலங்கை கடற்படையால் (SLN) நிர்மாணிக்கப்பட்ட புதிய ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் (RO) நீர் சுத்திகரிப்பு நிலையம் அங்கு வசிக்கும் சுமார் 450 குடும்பங்களின் நீண்டகால தேவையான சுத்தமான குடிநீரை இலகுவாகப் ற்றுக்கொள்ள உதவியாக அமையும்.
யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் போர்வீரர்கள் நினைவேந்தல்
இலங்கையில் 1987-1990 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த இந்திய அமைதி காக்கும் படையின் வீரர்களின் நினைவேந்தல் மற்றும் அவர்களின் தியாகங்கள் இந்திய குடியரசு தினத்தை ஒட்டி வியாழக்கிழமை (ஜன. 26) பலாலியில் உள்ள இந்திய அமைதிப் காக்கு படை நினைவு தூபியில் நினைவுகூரப்பட்டது.
சந்தஹிரு சேயவின் நிர்வாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அனுராதபுரத்திலுள்ள சந்தஹிரு சேய ஸ்தூபியின் புதிய நிர்வாக கட்டிடம் இன்று (ஜனவரி 28) திறந்து வைத்தார்.
SRIMED’ 9 வது குழு தெட்கு சுடானுக்கு புறப்பட தயாரக உள்ளது
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தெட்கு சூடான் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் சிறிமெட் 9 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் புதன்கிழமை (25) வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையக மைதானத்தில் அமைப்பின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
75 ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன்
கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்
குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலதிக அதிகாரங்களுடன் மேலும் பலப்படுத்தப்படும் - பாதுகாப்பு செயலாளர்
வரும் ஆண்டில், முன்மொழியப்பட்டுள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன சட்டத்தின் மூலம் கூடுதல் அதிகாரங்களுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் வலுப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வின்யார்ட் எடுகேஷன் நிறுவனத்துடன் உயர் கல்வி தொடர்பில் கலந்துரையாடல்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மற்றும் வின்யார்ட் எடுகேஷன் (Vineyard Education) ஆகியவை சமீபத்தில் சர்வதேச மாணவர்களுக்கான
மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர் இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
தேசிய மாணவர் படையணியின் (NCC) புதிய பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ். பொன்சேகா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை இன்று (ஜனவரி 25) கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.
மேற்கு பாதுகாப்பு 300 படையினரால் இரத்த தானம்
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 300 படையினரால் திங்கட்கிழமை (23) பனாகொடை ஸ்ரீ போதிராஜராமயில் இடம் பெற்ற இரத்த தான நிகழ்வில் நோயாளர்களின் நலன் கருதி இரத்த தானம் வழங்கப்பட்டது.
நந்திக்கடல் மாணவர்களுக்கு இராணுவம் பூப்பந்து மைதானத்தை பரிசாக வழங்கியது
நந்திக்கடல் மாந்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பூப்பந்து ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை வேண்டுகோளின் பேரில் 652 வது காலாட் பிரிகேட் படையினர் பூப்பந்து மைதானத்தை நிர்மாணித்து புதன்கிழமை (ஜன. 18) திறந்து வைத்தனர்.