பாதுகாப்பு செய்திகள்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை
இராணுவத்தின் பலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றன. அவை ஒன்றாக இருந்த போதிலும் ஒன்றுடன் ஒன்று வெளிப்படையாக தென்படுவதில்லை.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கைக;கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு காலித் நாசர் சுலைமான் அல்அமெரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கிரிக்கட் வீராங்கனைக்கு புதிய வீடு நிர்மாணிப்பு
அண்மையில் தேசிய மட்டத்தில் சாதனைகளை புரிந்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம் சுள்ளிபுரத்திலுள்ள விக்டோரியா கல்லூரியைச் சேர்ந்த செல்வராசா கிரிஸ்டிகாவுக்கு இராணுவத்தினரால் புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இராணுவத்தினரால் யால சரணாலயத்தில் 60,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் முன்னெடுப்பு
வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சினால் யால சரணாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மர நடுகை திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழுள்ள 121 வது பிரிகேடின் 20 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 18 வது கெமுனு ஹேவா படையினர் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தை ஆற்றிய மகத்தான சேவைகளை போற்றுமுகமாக மற்றும் அவரின் விண்ணேற்றத்தை குறிக்குமுகமாக இன்று (05 ஜனவரி) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பணித்துள்ளார்.
கடற்படையின் புதிய தலைமை அதிகாரி பதவி ஏற்றார்
ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன 2022 டிசம்பர் 23 முதல் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்காவில் நடைபெற்ற நான்காவது தெற்காசிய செபக் டக்ரா போட்டியில்
இராணுவ வீரர்கள் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்
அண்மையில் பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 4வது தெற்காசிய செபக் டக்ரா போட்டியில் இலங்கை தேசிய செபக் டக்ரா குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு 5 வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் இணையதளம் ஆரம்பித்து வைக்கப்பட்டது
பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கான www.disastermin.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களினால் கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (ஜன. 02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இராணுவத்தினர் கும்புறுப்பிட்டி கிராமத்தில் புதிய நீர்
சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தனர்
கிழக்கு (SFHQ-E) பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 17 ஆவது இலங்கை தேசிய காவலர் (SLNG) படையினர்களினால் அண்மையில் கும்புறுப்பிட்டியில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.