பாதுகாப்பு செய்திகள்
விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் ஓட்டப் போட்டி வெற்றிகரமாக நிறைவு
விமானப்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “குவான் ஹமுதா பாபபெதி சவாரிய-2022” சைக்கிள் ஓட்டப் போட்டி இம்மாதம் 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை நடைபெற்றது.
ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹயத சமிதி நிறுவனத்தின் செயற்கை கால்கள் வழங்கும் நடவடிக்கைக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு தெரிவிப்பு
போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ரணவிரு சேவா அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘செயற்கை கால் பொருத்தும் முகாம்’ இனது நிறைவு விழா இன்று (மார்ச்,07) ராகமவில் அமைந்துள்ள ரணவிரு செவனவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
“சயுரல” கப்பல் இந்தியாவில் மிலன்-2022 கடற்படை பயிற்சியில் பங்கேற்பு
• சிலினெக்ஸ் இருதரப்பு பயிற்சியிலும் கடற்படை பங்கேற்பு
கடலோர பாதுகாப்பு படை இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு அதிக பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறது
பலப்பிட்டியில் உள்ள கடலோர பாதுகாப்புப்படை உயிர்காப்பு பயிற்சிப் பாடசாலையில் கடலோர பாதுகாப்புப்படையின் உயிர்காப்பு பயிற்றுவிப்பாளர்கள் குழுவினால் பயிற்சியளிக்கப்பட்ட உயிர்காப்பு பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த கடலோர பாதுகாப்பு படை, இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
தீகவாப்பி தூபியில் புனித சின்னங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன
தீகவாப்பி மஹா தூபியின் அரைக்கோளக் குவிமாடத்தில் புனித சின்னங்கள் வைக்கும் நிகழ்வு அம்பாறை தீகவாப்பிய ரஜமஹா விஹாரை வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள 'தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவ ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இன்று (மார்ச், 06) இடம்பெற்றது.
28 புத்த சிலைகள் சந்தஹிரு சேய வளாகத்தில் இன்றைய தினம் திரைநீக்கம்
28 புனித புத்த சிலைகள் வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் சமய கிரிகைகளுடன் அநுராதபுரம், சந்தஹிரு சேய வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இன்று (மார்ச், 05) மாலை இடம்பெற்றது.
28 புத்தர் சிலைகளை ஏந்திய வாகன பவனி இன்று நா உயனவில் இருந்து அனுராதபுரத்திற்கு பயணமானது
சந்தஹிரு சேய வளாகத்தில் வைக்கப்படவுள்ள புனித 28 புத்தர் சிலைகளை தாங்கிய வாகன பவனி இன்று காலை (மார்ச் 4) மெல்சிறிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. ஹஷேம் அஷ்ஜசாதே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 03) இடம்பெற்றது.
தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 03) இடம்பெற்றது.
ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
ஜப்பானிய கடற் படைக்கு சொந்தமான இரண்டு போர் கப்பல்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடற் படையின் 'யுரகா' மற்றும் 'ஹிராடோ' ஆகிய கப்பல்களே இவ்வாறு வருகை தந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை விமானப்படை தனது 71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
இலங்கை விமானப்படை இன்று (மார்ச் 03) தனது 71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தனது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது.
ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கான இரண்டாவது குழு லெபனான் பயணம்
லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் இரண்டாவது குழு லெபனான் நோக்கி பயணமானது. இதற்கமைய, இலங்கை இராணுவத்தின் 2 அதிகாரிகள் மற்றும் 48 படைவீரர்கள் அடங்கிய 13 ஆவது பாதுகாப்பு குழு அமைதி காக்கும் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை (27) லெபனானுக்கு புறப்பட்டது.
இந்திய கடற்படை கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
இந்திய கடற்படையின் சுழியோடல் ஆதரவுக் கப்பலான "ஐஎன்எஸ் நிரீக்ஷக்" திங்கள்கிழமை (பெப்ரவரி, 28) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.