--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கைப்பற்றப்பட்ட 6 மெட்றிக் தொன் கஞ்சா விமானப்படை
ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது

விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாவிலிருந்து சுமார் 6 மெட்றிக் தொன் கஞ்சா விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குட்டிகலை பிரதேசத்தில் இராணுவத்தினரால் மர முந்திரிகை செய்கை

ஏற்றுமதிக்கான பயிர்செய்கையை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவித்து, அந்நிய செலாவணியை ஈட்டும் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இராணுவப் பொதுச் சேவைப் படையணியினால், குட்டிகலை பிரதேசத்தின் உள்ள படைமுகாம் வளாகத்திற்குள் சுமார் 700 முந்திரிகை மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டம் ஆரம்பித்து வைக்க க்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு விமானப்படை ஊடாக
விமான நிலையத்தில் தடுப்பூசி

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கென பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விஷேட கொவிட்-19 தடுப்பூசி மையம் ஒன்றை இலங்கை விமானப்படை ஸ்தாபித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய தாதியார் இளங்கலை பட்டதாரிகள் பதவியேற்பு விழா

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் 35 மற்றும் 36 வது ஆட்சேர்ப்பு தாதியர் இளங்கலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு , கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி, 04), பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவு சிறுவர் இல்லங்களுக்கு இராணுவத்தினரால் அத்தியாவசியப் பொருட்கள் அன்பளிப்பு

லவ்ட் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் இராணுவத்தினரால் முல்லைத்தீவில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு அத்தியாவசிய வீட்டுப்பாவனைப் பொருட்களுடன் ஒரு தொகுதி உலருணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நீர்க்கசிவு ஏற்பட்ட குளக்கட்டு இரானுவத்தினரால் புனரமைப்பு

அண்மையில் பெய்த கன மழை காரணமாக பக்மீகம கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பக்மீகம குளத்தின் குளக்கட்டில் ஏற்பட்ட நீர்க்கசிவு புனரமைப்பு செய்யப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் நிறுவனங்களின் முதல் வேலை நாள் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன, மலர்ந்துள்ள 2022ஆம் ஆண்டின் முதலாவது வேலை நாளன்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் முக்கிய நிறுவனங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்த ஆண்டை மேலும் பலனளிக்கும் வகையில் புதிய நம்பிக்கையுடன் தொடங்குவோம் - பாதுகாப்பு செயலாளர்

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ச்சியான சேவையை வழங்குவதில் பாதுகாப்பு அமைச்சு வெற்றியடைந்துள்ளதுடன், இந்த சவாலான சூழ்நிலையில் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்காக சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளித்து அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இணைய நூலக வசதி அறிமுகம்

பாதுகாப்பு அமைச்சு அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk இல் இணைய நூலக வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளதை உலகளாவிய பார்வையாளர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படைக்கு அரச துறையின் சிறந்த ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான வெள்ளி விருது

அரச துறைகளில் 2019 ஆம் ஆண்டின் நிதியாண்டிற்கான ‘ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான’ வெள்ளி விருது விமானப்படைக்கு வழங்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை மற்றும் இந்திய விமானப்படை பதவிநிலை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்திய விமானப்படை பதவிநிலை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இம்மாதம் 28ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு நாட்டு விமானப்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் 10வது தடவையாக இடம்பெறுகின்றது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்காக விமானப்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை மையமாகக் கொண்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுகந்திபுரத்தில் கடற்படையினரால் நேற்றையதினம் (டிசம்பர், 30) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நான்கு கடற்படை வீரர்களுக்கு சர்வதேச கடல்சார் நிறுவனத்தினால் அங்கீகாரமளிப்பு

நான்கு கடற்படை வீரர்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான கடலில் சாகசம் மிகுந்த துணிச்சலுக்கான ஐஎம்ஓ விருது வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. கடற்படை வீரர்களின் துணிச்சலைக் கருத்தில் கொண்டு சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ வினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாகும் – பாதுகாப்புச் செயலாளர்

தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக இராணுவத்தின் 8வது குழுமத்தின் முதற்குழு தென் சூடான் நோக்கி பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக தென்சூடானில் நிறுவப்பட்டுள்ள 2ம் நிலை இராணுவ பராமரிப்பு வைத்திசாலையான சிறிமெட் வைத்தியாலையில் பணியாற்றுவதற்காக தயாராகவுள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் 8 வது இராணுவ படைக் குழுவின் முதலாவது குழுவினர் இன்று (டிசம்பர், 29) அதிகாலை தென்சூடான் நோக்கி பயணமானார்கள்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு தேவையான குடும்பத்திற்கு கையளிப்பு

இலங்கை இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, மட்டக்களப்பு, கெவிலியா மடு, மங்களகமவில் உள்ள திருமதி ஏ.எம்.நந்தினி குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது. இதற்கமைய அண்மையில் இடம்பெற்ற புதுமனை குடிபுகு விழாவின் போது இந்த வீட்டின் சாவி கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறியால் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகளை கடற்படை தொடர்கிறது

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புக்களின் ஒரு பகுதியாக கடற்படையினரால் பானம  மற்றும் அதனை அண்டியுள்ள சதுப்பு நிலப் பரப்புக்களில் கண்டல் தாவரங்கள் உட்பட  1200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மர நடுகை திட்டம் நேற்றையதினம் (டிசம்பர், 27) முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குட்டிகலவில் 200 ஏக்கர் பரப்பளவில் இராணுவத்தினரால் தென்னைப் பயிர்ச்செய்கை

குட்டிகலவில் உள்ள இராணுவ பொது சேவைப் படைப்பிரிவினால் தென்னைப் பயிர்ச்செய்கை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தென்னைப் பயிர்ச்செய்கை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தென்னம் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ருவாண்டா மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பு திட்டங்களில் தகுதிவாய்ந்த ருவண்டா மாணவர்களை அனுமதிக்ககோரும் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ருவாண்டா குடியரசு புதுப்பித்துள்ளது.