பாதுகாப்பு செய்திகள்
நத்தார் தின வாழ்த்துச் செய்தி
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும்.
ஆட்கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் தலைமையின் கீழ் அரசாங்கத்தினால்
கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை
ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு சேவைகளுடன் ஒருங்கிணைந்த உயர் ரக நிறுவன பொறிமுறையை நிறுவும் நோக்கில், அமைச்சரவையினால் இவ்வாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் தலைமைத்துவனது, நீதி அமைச்சிலிருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றப்பட்டது.
ஊடக அறிக்கை
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பங்களாதேஷுக்கான கடல் பயணத்தின் போது திடீரென ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசரநிலையை எதிர்கொண்ட பாரிய படகு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த படகு அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியிடப் பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் கடற்படையினரால் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுதாய நல பணிகளின் ஒரு பகுதியாக தலசீமியா நோய்க்கான 23 சிகிச்சைக் கருவிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சுகாதார அமைச்சிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று (டிசம்பர், 15) கையளிக்கப்பட்டது.
கடலோரப் பாதுகாப்பு படை பணிப்பாளருடன் ஜய்கா நிறுவன தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் (ஜய்கா) தலைவர் யமடா டெட்சுகா மற்றும் கடலோரப் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவுக்கிடையிலான சந்திப்பு அண்மையில் (டிசம்பர் 14) சமுத்ர ரக்ஷா கப்பலில் இடம்பெற்றது.
லெபனானிலுள்ள இலங்கை படையினருக்கு பதக்கங்கள் அணிவிப்பு
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைகளுடன் இணைந்து பணியாற்றிவரும் இலங்கை படையினரின் முன்மாதிரியான சேவைகளை பாராட்டி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு லெபனானின் நகோரா நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிகாக்கும் படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்
“கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள்” என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இந்த ஊடகச் சந்திப்பை வழிநடத்தினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை மற்றும் ஜப்பான் எதிர்பார்ப்பு
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேதகு மிசுகோஷி ஹிடேகி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்,15) சந்தித்தார்.
பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி-2021 இல் விமானப்படைவீரர்கள் பிரகாசிப்பு
உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி-2021இல் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முல்லைத்தீவில் தேவையுடையோருக்கு இராணுவம் உதவி
முல்லைத்தீவு பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மனிதாபிமான மற்றும் சமூக அடிப்படையிலான திட்டங்கள் பல முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.