பாதுகாப்பு செய்திகள்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்குதே எமது இலக்கு - பாதுகாப்புச் செயலாளர்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கேரிக்கை விடுத்தார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த ஆய்வு கருத்தரங்கு பாதுகாப்பு செயலாளரினால் அங்குரார்ப்பணம்
பத்தரமுல்லவில் அமைந்துள்ள வாேட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் 11வது ஆண்டு ஆய்வு கருத்தரங்கு - 2021 இல் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பண்டிகை காலத்துக்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துங்கள் – ஜனாதிபதி தெரிவிப்பு…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
சர்வதேச கடற்பிராந்தியத்தில் சுமார் 250 கிலோ போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு மீன்பிடிகப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சர்வதேச கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேடதேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு மீன்பிடி கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதன்போது வெளிநாட்டு சந்தேக நபர்கள் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பாரியளவிலான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் விரோத சக்திகள் மற்றும் சமூகவிரோதிகள் செயற்படுகின்றனர் -பாதுகாப்பு செயலாளர்
போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் சில விரோத சக்திகள் மற்றும் சமூகவிரோதிகள் செயற்படுபடுவதுடன் இனங்களுக்கு மத்தியில் அவநம்பிக்கை மற்றும் பிளவு மனப்பாங்கை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (டிசம்பர் 10) தெரிவித்தார்.
செனகல் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
புது டில்லி மற்றும் இலங்கைக்கான செனகல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மாலிக் தியாவ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்,10) சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.
விபத்தில் உயிரிழந்த இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி இந்தியா பயணம்
கடந்த புதன்கிழமையன்று (08) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (டிச.10) புது தில்லிபுறப்பட்டுச் சென்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு…
எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச் சுட்டிக்காட்டினார்.
இரங்கல் செய்தி
இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் திருமதி மதுலிகா ராவத் ஆகியோரின் துயர மரணத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்கள் மற்றும் இலங்கை முப்படையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை (டிசம்பர் 08, 2021) தமிழ்நாடு குன்னூரில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறார்கள்.
ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் சபை கூட்டம்
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை, நேற்றையதினம் (டிசம்பர், 07) பிற்பகல், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில் கூடியது.
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலன்புரி சேவைகளின் ஒரு பகுதியாக வவுனியாவில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று அன்மையில் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
யாழ் இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் குழுவிற்கு உயிர்காப்பு பயிற்சிப் பாடநெறி அண்மையில் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் காரைநகரில் அமைந்துள்ள எலார கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று கலந்துகொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் டேவிட் அஷ்மான், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
82 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம், மதகல் கடல் பகுதியில் கடற்படை நடத்திய விஷேட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு சந்தேக நபர்களுடன் 82 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
புதிய இராணுவத பிரதம அதிகாரி நியமனம்
இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகப்பு செயலாளருடன் சந்திப்பு
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கைக்கான இத்தாலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் (கடற்படை) பப்ரிஸியோ பல்ஸி, கொழும்பில் உள்ள இத்தாலியத் தூதுவர் மேதகு ரீட்டா கியுலியானா மன்னெல்லாவுடன் இணைந்து பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (டிசம்பர் 06) சந்தித்து கலந்துறையாடினார்.