பாதுகாப்பு செய்திகள்
அஹங்கமை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இலங்கை விமானப்படை உதவி
குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அஹங்கம கொரஹெதிகொட சுனாமி கிராம மக்களுக்காக கொக்கலை விமானப்படை நிலையத்தினால் விமானப்படை சேவா வனிதா பிரிவின் அனுசரணையுடன் அப்பிரதேசத்திற்கான நீர் விநியோக திட்டம் மறுசீரமைக்கப்பட்டு அண்மையில் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு நியமனம்
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு ஜூன் மாதம் 8ஆம் (2022) திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத்தினருக்கான புதிய தங்குமிட விடுதித் தொகுதி திறந்து வைப்பு
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் சேவையாற்றும் இராணுவத்தினருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிட விடுதித் தொகுதியை இன்று (08) திறந்து வைத்தார்.
கடலோர காவற்படை யினரால் மற்றொரு தொகுதி கடலாமை குஞ்சிகள் கடலில் விடுவிப்பு
கடலோர காவல்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாட்டின் பல இடங்களில் அடைகாக்கப்பட்ட 222 முட்டைகளிருந்து பொரித்த நூற்று முப்பத்து நான்கு (134) கடலாமை குஞ்சுகள் சமீபத்தில் கடலில் விடப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தேசிய இரத்த வங்கிக்கு இலங்கை இராணுவ வீரர்கள் இரத்த தானம் செய்தனர்
அண்மையில் நடைபெற்ற இரத்ததான முகாம் ஒன்றில் பெருமளவான இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர். இலங்கை இராணுவ ஊடகங்களின் படி, 120 இராணுவ மற்றும் இராணுவத்தில் சேவையாற்றும் சிவில் உறுப்பினர்கள் மத்திய இரத்த வங்கிக்கு இந்நிகழ்வின் போது இரத்தம் வழங்கினர்.
எலிசபெத் மகாராணியின் பவள விழா நிகழ்வில் இலங்கை முப்படையினர் பங்கேட்பு
ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், கடந்த ஞாயிறன்று (ஜூன் 05, 2022) நடைபெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பவள விழா நிகழ்வில் இலங்கையின் முப்படைகளின் குழுவொன்று பங்கேற்றது.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு எயார் கொமடோர் அக்தார் இம்ரான் சத்தேசய் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவை ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (ஜூன் 6) இடம்பெற்றது.
கடலோர காவற்படையினரின் பங்களிப்புடன் ஐந்து நாள் எண்ணெய் கசிவு எதிர்கொள்ளல் பயிட்சி செயலமர்வு ஏட்பாடு
இலங்கை கடலோர காவற்படையினரின் பங்களிப்புடன் ஏட்பாடு செய்யப்பட்ட ஐந்து நாள் எண்ணெய் கசிவு பதில் பயிற்சி செயலமர்வின் தொடக்க விழா இன்று (ஜூன் 6) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை விமானப்படை தேசிய உயிர்காக்கும் வெற்றிக்கிண்ண போட்டி 2021/2022 களில் வெற்றி
இலங்கை விமானப்படை (SLAF) ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சமீபத்தில் நடைபெற்ற 70வது தேசிய உயிர்காக்கும் வெற்றிக்கிண்ண போட்டி - 2021/2022 இல் வெற்றி பெற்றன.
ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து நாயாருவில் ‘காஸ்ட் மாஸ்டர்’ பாடநெறியை நடத்தின
இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைகள், இலங்கை விமானப்படையுடன் இணைந்து ‘காஸ்ட் மாஸ்டர்’ பாடநெறியை நாயாறு மற்றும் முல்லைத்தீவு சிறப்புப் படைகளின் பயிற்சி கல்லூரியில் அண்மையில் நடத்தியது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனர்த்த தயார்நிலையை பாதுகாப்பு செயலாளர் மதிப்பாய்வு செய்தார்
கொழும்பு, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு இன்று (03) விஜயம் மேட்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அதன் பேரிடர் தயார்நிலை மற்றும் முன்கூட்டிய திட்டமிடல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவம் உதவி
நாட்டின் சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் இலங்கை இராணுவத்தின் 12 வது பொறியியல் படை துருப்புக்கள் துரித நடவடிக்கை எடுத்தனர்.
ஒரு வலுவான பாதுகாப்பு கொள்கை அத்தியாவசியம் பாதுகாப்பு செயலாளர்
தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதை வரையறுப்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு எந்திரங்களை ஏற்றுக்கொள்ளவும், அதன் மக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று(ஜூன்(2) தெரிவித்தார்.
புதிய இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
புதிய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (ஜூன் 02) சந்தித்தார்.
பாதுகாப்பு படைகளின் பிரதானி பாதுகாப்பு செயலருக்கு ‘ஸ்டோர்ம் ஒப் வொரியர்ஸ்’ புத்தகத்தை வழங்கி வைத்தார்
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னர் (ஜூன் 02) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் ‘ஸ்டோர்ம் ஒப் வொரியர்ஸ்’ எனும் புத்தகத்தை வழங்கி வைத்தார்.
புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்பு
லெப்டினன்ட் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே இராணுவத் தலைமையகத்தில் இன்று (ஜூன் 1) இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது 24ஆவது இராணுவத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வெச்சரிக்கை இன்று (ஜூன் 01) மாலை 4.30 மணி வரை செல்லுபடியாகும்.
தொடரும் சீரற்ற காலநிலையில் கடற்படை குழுக்கள் வெல்ல நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபாடு
தட்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படை பல நிவாரண குழுக்களை ஈடுபடுத்தியது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ள அபாயப் பகுதிகளில் தற்பொழுது 13 கடற்படை நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.