பாதுகாப்பு செய்திகள்
திவுலபிட்டிய வைத்தியசாலை வார்ட் இராணுவத்தினரால் புனரமைப்பு
திவுலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் பழுதடைந்திருந்த கோவிட் 19 வார்ட்டின் புனரமைப்புப் பணிகளை இலங்கை இராணுவம் நிறைவு செய்து, வைத்தியசாலை அதிகாரிகளிடம் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளித்தது.
இலங்கையில் உள்ள ‘அவுஸ்திரேலிய இல்லத்தில்’ 107வது (அன்சக் போர்வீரர் நினைவேந்தல் நடைபெற்றது
ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ராணுவப் படைகளின் (அன்சக்) 107வது ஆண்டு நினைவு தினம் நேற்று (ஏப்ரல் 25) ‘ஆஸ்திரேலியா இல்லத்தில்’ நடைபெற்றது.
கடற்படை லாஜிஸ்டிக்ஸ் மாநாடு 2022 நடைபெற்றது
இலங்கை கடற்படை லாஜிஸ்டிக்ஸ் மாநாடு 2022 திருகோணமலையில் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற்றது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நடப்பு ஆண்டிற்கான முதுகலை பட்டப்படிப்புகள் ஆரம்பம்
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) பட்டதாரி கற்கைகள் பீடம் 2022 ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டப்படிப்புகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்தது.
மாலையுடன் கூடிய காலநிலை தொடரும்
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கக்கூடும். வானிலை ஆராச்சி திணைக்களம் இன்று (ஏப்ரல் 22) நண்பகல் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி நாடு முழுவதும் நிலவும் மாலையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்.
புதிய அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி ஜே. சுங் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று (ஏப்ரல் 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து சந்தித்தார்.
ஊடக அறிக்கை
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர்களின் கவனத்திற் கொள்ளும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வினால் அவரது முகநூலில் இடப்பட்ட பதிவுக்கு பாதுகாப்பு அமைச்சு பதிலளித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் 2022 ஏப்ரல் 11ஆம் திகதி
வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டபூர்வமான சேவை நீடிப்பின்றி அந்த நியமனத்தில் சேவையாற்றுவதக சமூக ஊடக தளங்களில் பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியாக புனையப்பட்டு பரப்பப்பட்டு வரும் தகவலை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பாதுகாப்பு செயலாளரினால் 2022 ஏப்ரல் 11 ஆம் திகதி
மேற்கொள்ளப்பட்ட விஷேட அறிக்கை
மிரிஹானையில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அத்தகைய எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.