பாதுகாப்பு செய்திகள்
எகிப்து தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. மஜித் மொஸ்லே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச், 16) இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்பு
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கௌரவ சமல் ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச், 16) இடம் பெற்ற வைபவத்தின் போதே அவர் வணக்கத்துக்குறிய மகா சங்கத்தினரின் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாலைதீவில் இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாடு, 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் நிறைவு
ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஸ்தாபக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 மார்ச் 09 மற்றும் 10ம் திகதி மாலைதீவுக் குடியரசில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மாலைதீவு, இந்தியா, இலங்கை மற்றும் மாநாட்டின் புதிய உறுப்பு நாடான மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அதேவேளை, பங்களாதேஷ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
சேதமடைந்த ஊஞ்சல் பாலம் இராணுவத்தினரால் புனரமைப்பு
புறாக்கள் தீவை மாத்தறை நகருடன் இணைக்கும் சேதமடைந்த ஊஞ்சல் பாலத்தின் திருத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், அதற்கான தற்காலிக மாற்றுப் பாலத்தை நிர்மாணிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு வெளிநாட்டு கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை
பிரான்ஸ், பங்களாதேஷ் மற்றும் இந்திய நாட்டு கடற்படைகளுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இம்மாதம் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடைந்தன.
அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு விமானப்படையினரால் மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு
இலங்கை விமானப்படை அண்மையில் அக்குரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலைக்கு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்களை கையளித்தது. விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட இந்த ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம். விதானபத்திரனவிடம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 08) கையளிக்கப்பட்டதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் ஓட்டப் போட்டி வெற்றிகரமாக நிறைவு
விமானப்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “குவான் ஹமுதா பாபபெதி சவாரிய-2022” சைக்கிள் ஓட்டப் போட்டி இம்மாதம் 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை நடைபெற்றது.
ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹயத சமிதி நிறுவனத்தின் செயற்கை கால்கள் வழங்கும் நடவடிக்கைக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு தெரிவிப்பு
போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ரணவிரு சேவா அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘செயற்கை கால் பொருத்தும் முகாம்’ இனது நிறைவு விழா இன்று (மார்ச்,07) ராகமவில் அமைந்துள்ள ரணவிரு செவனவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
“சயுரல” கப்பல் இந்தியாவில் மிலன்-2022 கடற்படை பயிற்சியில் பங்கேற்பு
• சிலினெக்ஸ் இருதரப்பு பயிற்சியிலும் கடற்படை பங்கேற்பு
கடலோர பாதுகாப்பு படை இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு அதிக பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறது
பலப்பிட்டியில் உள்ள கடலோர பாதுகாப்புப்படை உயிர்காப்பு பயிற்சிப் பாடசாலையில் கடலோர பாதுகாப்புப்படையின் உயிர்காப்பு பயிற்றுவிப்பாளர்கள் குழுவினால் பயிற்சியளிக்கப்பட்ட உயிர்காப்பு பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த கடலோர பாதுகாப்பு படை, இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
தீகவாப்பி தூபியில் புனித சின்னங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன
தீகவாப்பி மஹா தூபியின் அரைக்கோளக் குவிமாடத்தில் புனித சின்னங்கள் வைக்கும் நிகழ்வு அம்பாறை தீகவாப்பிய ரஜமஹா விஹாரை வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள 'தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவ ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இன்று (மார்ச், 06) இடம்பெற்றது.
28 புத்த சிலைகள் சந்தஹிரு சேய வளாகத்தில் இன்றைய தினம் திரைநீக்கம்
28 புனித புத்த சிலைகள் வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் சமய கிரிகைகளுடன் அநுராதபுரம், சந்தஹிரு சேய வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இன்று (மார்ச், 05) மாலை இடம்பெற்றது.
28 புத்தர் சிலைகளை ஏந்திய வாகன பவனி இன்று நா உயனவில் இருந்து அனுராதபுரத்திற்கு பயணமானது
சந்தஹிரு சேய வளாகத்தில் வைக்கப்படவுள்ள புனித 28 புத்தர் சிலைகளை தாங்கிய வாகன பவனி இன்று காலை (மார்ச் 4) மெல்சிறிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.