--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நுவரெலியா வனப்பகுதியில் காணாமல்போன யுவதி படையினரால் மீட்பு

நுவரெலியா டின்சின் தோட்ட வனப்பகுதிக்குள் கடந்த 5ம் திகதி காணாமல் போன யுவதி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

1136 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், குருநகர், மற்றும் சிலாவதுரை, அரிப்பு, ஆகிய கரையோர பிரதேசங்களில் கடற்படையினரால் செப்டம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1136 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறாமீனின் பாகங்களை கொண்டுசென்ற லாெறிவண்டி கடலோர பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட சுறா மீன்களின் உடற் பாகங்களை லொறி வண்டியில் கொண்டு செல்வதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நடவடிக்கை உடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன - பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு அமைச்சும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஹெரோயின் உட்பட பாரியளவிலான பல்வேறு  போதைப் பொருள்களும், பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தொற்றுநோய் நிலைமைகள் தொடர்ந்தாலும், நாம் நாட்டின்
அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டும் - பாதுகாப்பு செயலாளர்

தொற்றுநோய் நிலைமைகள் தொடர்கின்ற போதிலும் தேசத்தினை நெருக்கடி நிலைக்குள்ளாக்காமல், தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அபிவிருத்தி இலக்குகளுடன் கூடிய ஸ்திரதன்மை அடைய நாம் எப்போதும் பணியாற்ற வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (செப்டம்பர்,09) தெரிவித்தார்.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட காணி, பிராந்திய அரச அதிகாரிகளிடம் கையளிப்பு

முல்லைத்தீவு, கராச்சி பிரதேச செயலகத்தில் உள்ள பரவிபாஞ்சன் கிராமத்தில் உள்ள 36.8 பெர்ச் காணியை இராணுவம் பிராந்திய அரச அதிகாரகளிடம் அண்மையில் கையளித்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படைவீரர்களுக்கு தீர்ப்பாயம் தொடர்பான பயிற்சிகள்

அண்மையில் மிரிஸ்ஸாவில் உள்ள உயர் பயிற்சி மையத்தில், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்ட அதிகாரிகளினால், இலங்கை கடலோர பாதுகாப்புபடை வீரர்களுக்கு ‘தீர்ப்பாயம் தொடர்பாக பயிற்சி’ அளிக்கப்பட்டன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி 02/2021 இனை பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் வழங்கும் வைபவம் திருகோணமலையில்

கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி 02/2021 இன் நிறைவு தின வைபவம் திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப்பிரிவு தலைமையகத்தில் செப்டம்பர் 02ம் திகதி நடைபெற்றது. இதில் பயிற்சிநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த படை வீரர்களுக்கான சான்றிதழ் அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை தலைமையிலான கூட்டு நடவடிக்கையில் ரூ. 3,100 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டது

கொழும்பு துறைமுகத்திற்கு ஜனாதிபதியின் பிரதிநியாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு),  இலங்கையின் தென் பிராந்தியத்திற்கு  அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்து சுமார் ரூ.3,100 மில்லியன் ரூபா பெறுமதியான 336 கிலோகிராம் ஹெராேயின் போதைப்பொருளை கொண்டு வந்த வெளிநாட்டு மீன்பிடி படகினை இன்றைய தினம் (செப், 04)  கைப்பற்றிய இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைகளுக்கு ஜனாதிபதி  பாராட்டுக்களை தெரிவித்ததாக  குறிப்பிட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2021ம் ஆண்டுக்கான 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி XI ஆரம்பம்

இராணுவத்தின் ஏற்பாட்டில் முப்படையினர் ஒன்றினைந்து மேற்கொள்ளும் களமுனைப்போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி XI - 2021 மின்னேரியாவில் நேற்று (செப், 03) ஆரம்பமானது,


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐநா நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு வெடிபொருள் செயலிழப்பு உபகரணங்கள் நன்கொடை

ஐ.நாவின் மாலி அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் போர்கள போக்குவரத்து குழுவிற்கான வெடிப்பொருள் செயலிழக்கும் கருவிகளை நல்லெண்ண அடிப்படையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை இராணுவத்திடம் நன்கொடையாக வழங்கியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

களுத்துறை சிறைச்சாலையில் இராணுவத்தினரால் பாதுகாப்பு கேமரா நிறுவப்பட்டது

களுத்துறை சிறைச்சாலையில் இலங்கை இராணுவத்தினரால் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. பாதுகாப்பு கேமராக்களை நிறுவும் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ அறிவைப் பயன்படுத்தி குறித்த கேமராக்கள் பொருத்தப்பட்டு அவைகள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அலெக்ஸி ஏ. போண்டரேவ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) சந்தித்தார்.