பாதுகாப்பு செய்திகள்
ஆசிரியர்கள் சமூகத்தை உருவாக்குபவர்கள் – பாதுகாப்பு செயலாளர்
தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த மற்றும் கீழ்ப்படிதலுள்ள எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் பாடசாலை ஆசிரியர்கள் பெரும் பங்களிப்பை வழங்குவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2022” நிகழ்வு
இலங்கை விமானப்படையால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2022” ஓட்ட நிகழ்வு இன்று ( பெப்ரவரி, 20) காலை கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிராந்திய விடயங்கள் தொடர்பாக இலங்கை அவுஸ்திரேலிய ஆராய்வு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் உலக விவகாரப் பிரிவின் உதவி செயலாளர் டொம் மெனடு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இராணுவ வைத்தியசாலைகளில் 50 புதிய இராணுவ தாதியர்கள் சேவை தொடங்க உள்ளனர்
அனுராதபுரம் இராணுவ தாதியர் பாடசாலையில் பொது தாதியியலில் மூன்று வருட நிபுணத்துவ டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 50 தாதியர்கள் தமது சேவை அடையாளமன தாதி தொப்பியினை பெற்றுக்கொண்டனர்.
நான்காவது கொழும்பு கடற்படைப் பயிற்சி நிறைவு
இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட நான்காவது கொழும்பு கடற்படை பயிற்சி – 2022 திங்கட்கிழமை (பெப்ரவரி, 14) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த கடற்படை பயிற்சி இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது.
பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் சிகிச்சை நோயாளிகளுக்கான உள்ளக வார்டு திறப்பு
வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் மருத்துவ நோயாளிகளுக்கான உள்ளக வார்டு வசதி அப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் 2022 பெப்ரவரி 15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
6.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடந்படையினரால் கைது
பருத்தித்துறை நெல்லியடி பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 817 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளுக்கு விமானப்படையினரால் குறைந்த செலவில் நெல் அறுவடைத் திட்டம்
இலங்கை விமானப்படை, குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் அறுவடைச் செலவைக் குறைக்கும் நெல் அறுவடைத் திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் துருக்கி எயார்கிராஃப்ட் நிறுவனத்துடன் ஒன்றினைவு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், துருக்கிய எயார்கிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ் காேர்ப்பரேஷனுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஜப்பானிய கடலோர பாதுகாப்புபடை மற்றும் ஜெய்கா நிறுவனத்தினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய் கசிவு தடுப்பு திறன்கள் மதிப்பீடு
ஜப்பானிய கடலோர பாதுகாப்பு படை மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (ஜெய்கா) குழுவொன்று நேற்று (பெப்ரவரி, 13) வெள்ளவத்தையில் உள்ள இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் தலைமையகத்திற்கு வருகை தந்தது.
மாலியில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படைக்குழுவின் விலைமதிப்பற்ற சேவைகளுக்கு பாராட்டு
ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படைக்குழுவின் விலைமதிப்பற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற பதக்க அணிவகுப்பு நிகழ்வில் ஐ.நா பொதுச்செயலாளரின் விஷேட பிரதிநிதியும், மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த பல பரிமாண நடவடிக்கையின் தலைவருமான திரு. எல்-காசிம் வான் கலந்து கொண்டார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமெரிக்கா லா ஜொல்லா கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமெரிக்காவின் லா ஜொல்லா கல்வி நிறுவனத்துடன் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்க்கி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 11) சந்தித்தார். இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெளிவிவகார அமைச்சரினால் விரிவுரை
வெளிவிவகார அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸினால் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் விரிவுரை நேற்று (பெப்ரவரி, 10) நிகழ்த்தப்பட்டது. ‘ஆயுதப்படைகள், மனித உரிமைகள் சட்டம் மற்றும் ஜெனீவா செயல்முறை’ எனும் தலைப்பில் இந்த விரிவுரை இடம் பெற்றது.
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின்
ஐந்தாவது வருடாந்த கல்வி அமர்வு
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் ஐந்தாவது வருடாந்த கல்வி அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (பெப்ரவரி, 10) அத்திடிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
கிளிநொச்சி ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
கிளிநொச்சியில் உள்ள படையினர் பிராந்தியத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு அண்மையில் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். கிளிநொச்சியில் வசிக்கும் தகுதியுடைய 42 குடும்பங்களுக்கு வாரயிறுதியில் (பெப்ரவரி, 05) கண்ணன் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யூரி மேட்டேரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 09) சந்தித்தார்.
யாழில் பாதுகாப்பு படையினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
சுகாதார அதிகாரிகளின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினர், ஆகையால் நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் என்பவற்றை முன்னெடுத்தனர்.