பாதுகாப்பு செய்திகள்
புதுப்பொலிவுடன்மீண்டும் காட்சியளிக்கவுள்ள லாஹுகல ‘நீலகிரி தூபி’
வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நீலகிரி மகா தூபி’யின் புனரமைப்புப் பணிகளை இன்று (ஜனவரி, 16) பாதுகாப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள ‘தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணி’யின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
இராணுவ ஸ்குவாஷ் வீர, வீராங்கனைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றி
சிரேஷ்ட தேசிய ஸ்குவாஷ் போட்டி மற்றும் PSA (தொழில்முறை ஸ்குவாஷ் சங்கம்) போட்டி நிகழ்வுகள் ஜனவரி 6-9 திகதிகளில் எஸ்எஸ். ஸ்குவாஷ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை இராணுவ வீரர்கள் சாம்பியன்ஷிப் நிகழ்வின் போது பின்வரும் வெற்றிகளைப் பெற்றனர்.
புதிய பாதுகாப்பு சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் எதிர்கால இராணுவத் தலைவர்கள் தமது தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
• முப்படைகளின் இடைநிலை அதிகாரிகளுக்கான தலைமைத்துவ கருத்தரங்கில் பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை
எகிப்தின் புதிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவர் அதிமேதகு மஜித் மொஸ்லே இன்று (ஜனவரி, 12) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
வடக்கில் பசுமை விவசாயத் திட்டம்
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பசுமை விவசாயம்’ அடிப்படையாகக்கொண்ட சேதனப் பசளை உற்பத்தித் தளத்திற்குச் சென்று உற்பத்தி செயல்முறைகளை ஆய்வு செய்தனர். இந்த விஜயத்தின் போது செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர் கைகோர்ப்பு
மேல்மாகாணத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர், கம்பஹா, குருநாகல், புத்தளம், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய விஷேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தனர்.
கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமையொட்டி சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நிகழ்வு முன்னெடுப்பு
இலங்கை கடற்படையினரால் உஸ்வெட்டகையாவ பிரதேசத்தில் அண்மையில் (ஜனவரி, 09) கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமையொட்டி இந்த சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரினால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிய பீடமும் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட பிரதான நுழைவாயிலும் திறந்துவைப்பு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், தனது 10வது பீடமான தொழில்நுட்ப பீடத்தை இன்று (ஜனவரி, 10) இரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது ஆரம்பித்து வைத்தது. இந்த நிகழ்வு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட பிரதான நுழைவாயிலை திறந்து வைக்கும் நிகழ்வுடன் ஆரம்பானது.
18 மணிநேரம் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் மீட்பு
பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை நேற்று (ஜனவரி, 09) மீட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 6 மெட்றிக் தொன் கஞ்சா விமானப்படை
ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது
விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாவிலிருந்து சுமார் 6 மெட்றிக் தொன் கஞ்சா விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
குட்டிகலை பிரதேசத்தில் இராணுவத்தினரால் மர முந்திரிகை செய்கை
ஏற்றுமதிக்கான பயிர்செய்கையை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவித்து, அந்நிய செலாவணியை ஈட்டும் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இராணுவப் பொதுச் சேவைப் படையணியினால், குட்டிகலை பிரதேசத்தின் உள்ள படைமுகாம் வளாகத்திற்குள் சுமார் 700 முந்திரிகை மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டம் ஆரம்பித்து வைக்க க்கப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு விமானப்படை ஊடாக
விமான நிலையத்தில் தடுப்பூசி
வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கென பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விஷேட கொவிட்-19 தடுப்பூசி மையம் ஒன்றை இலங்கை விமானப்படை ஸ்தாபித்துள்ளது.
புதிய தாதியார் இளங்கலை பட்டதாரிகள் பதவியேற்பு விழா
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் 35 மற்றும் 36 வது ஆட்சேர்ப்பு தாதியர் இளங்கலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு , கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி, 04), பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு சிறுவர் இல்லங்களுக்கு இராணுவத்தினரால் அத்தியாவசியப் பொருட்கள் அன்பளிப்பு
லவ்ட் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் இராணுவத்தினரால் முல்லைத்தீவில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு அத்தியாவசிய வீட்டுப்பாவனைப் பொருட்களுடன் ஒரு தொகுதி உலருணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.
நீர்க்கசிவு ஏற்பட்ட குளக்கட்டு இரானுவத்தினரால் புனரமைப்பு
அண்மையில் பெய்த கன மழை காரணமாக பக்மீகம கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பக்மீகம குளத்தின் குளக்கட்டில் ஏற்பட்ட நீர்க்கசிவு புனரமைப்பு செய்யப்பட்டது.