--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் கம்பஹா சாம விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது

கம்பஹா சாம விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஆகஸ்ட், 13) விஹாரையிலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிப்பு

தேசிய தடுப்பூசி ஏற்றல் திட்டத்தின் மேலும் ஒரு படியாக  இலங்கை இராணுவத்தினரால் மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி திட்டத்தை இன்று (12) ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இம்மாகாணத்தில் உள்ள முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அங்கவீனமுற்றோர் மற்றும் பலவீனமான வர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் களனி ரஜமஹா விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது

களனி ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து  சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை  ஏந்திய வாகன பவனி இன்று காலை   (ஆகஸ்ட், 12) விஹாரையிலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு மைக்கேல் எட்வேர்ட் அப்பள்டொன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஓகஸ்ட், 11) சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் கொரதோட்ட ரஜமஹா விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது

கொரதோட்ட ரஜ மஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை   (ஆகஸ்ட், 11) விஹாரையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை துரிதமாக வழங்கும் ஒன்லைன் சேவை ஆரம்பம்

நாட்டின் அனைத்து பிரஜைகளும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கமும் கோபுரத்தின் மூன்றாம் நாள் பவனி ஆரம்பம்

பெல்லன்வில ராஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை  ஏந்திய வாகன பவனி இன்று காலை தனது பயணத்தை ஆரம்பித்தது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கமும் கோபுரமும் பொதுமக்கள் வழிபாட்டிற்காக நளை கொரதோட்ட ரஜமஹா விஹாரையில்

சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை  ஏந்திய வாகன பவனி நேற்று (ஓகஸ்ட், 08) மாலை பெல்லன்வில ராஜமஹா விஹாரையை வந்தடைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படையினரால் 5300 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5372 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள், சிலாபம் பகுதியில் வைத்து கைமாற்றப்படும் வேளையில் கடலோர பாதுகாப்பு படையின் சுரக்ஷா கப்பலின் படைவீரர்களினால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் பொதுமக்கள் வழிபாட்டிற்காக

சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை  ஏந்திய வாகன பவனி இன்று (ஓகஸ்ட், 08) மாலை பெல்லன்வில ரஜமஹா விஹாரையை வந்தடைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' ஐ ஏந்திய வாகன பவனி ஆரம்பம்

கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிரு சேய தூபியின்  ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' என்பவற்றை  ஏந்திய வாகன பவனி பெளத்த  சமய சம்பிரதாயங்களுடன் சுபவேளையில் நாடு தழுவிய தனது பயணத்தை இன்று (ஓகஸ்ட் ,08) ஆரம்பித்தது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப் படையின் புதுப்பிக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் விமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம் அங்குரார்ப்பணம்

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் முப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் விமானப்படையின் புதுப்பிக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் விமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரத்த தானம் வழங்கும் நிகழ்வு படைவீரர்களினால் முன்னெடுப்பு

நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் இரத்த மாதிரிகளுக்கு ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்வதற்காக விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நேற்றையதினம் (ஆகஸ்ட் 05) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தேசிய இரத்த மாற்று சேவையுடன் இணைந்து இரத்த தான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' என்பன தரிசிப்புக்காக இன்று முதல் கங்காராமவில் காட்சிக்கு

மகா சங்கத்தினரின் மத ஆசிர்வாதங்களுடன் சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம் ' என்பன பொதுமக்கள் வழிபாட்டிற்காக கொழும்பு, கங்காராம விஹாரையில் இன்று (ஆகஸ்ட், 05) வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கற்பிட்டியில் 820 கிலோ கிராம் கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கற்பிட்டி, கீரிமுந்தலம் கடற்கரை பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 16 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 820 கிலோ கிராம் கடலட்டையுடன் சந்தேகநபர்கள் ஏழு பேர்  கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள்  பயன்படுத்திய இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை மேலும் ஊக்குவிக்கும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஐந்தாவது தேசிய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம், இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளது உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே இராணுவ தலைமையகத்தில் நேற்று (ஓகஸ்ட், 04) இடம்பெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் சுகாதார அதிகாரிகளிடம் கையளிப்பு

கொவிட் -19 நோயாளிகளின் பயன்பாட்டிற்கென இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் தெல்தெனிய ஆதார வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு இலங்கை விமானப்படை கையளித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லேரியா வைத்தியசாலையில் புதிய வார்டு வளாகம் விமானப்படையினரால் நிர்மாணம்

இலங்கை விமானப்படை முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் புதிய வார்டு வளாகத்தின் நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு சுகாதார அமைச்சர் கெளரவ. பவித்ராதேவி வன்னியாராச்சியிடம் நேற்று (ஆகஸ்ட் 3) கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (ஆகஸ்ட் 3) ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.