பாதுகாப்பு செய்திகள்
பாதுகாப்பு செயலாளர், இராணுவ தலைமையகத்திற்கு
தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தலைமையகத்திற்கு இன்று (அக்டோபர் 28) விஜயம் செய்தார்.
பாதுகாப்புத் தலைமையக வளாகத் திட்டத்தில் கட்டுமானப் பணிகளை
பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார்
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அகுரேகொடவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிட தொகுதிகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயவென அப்பகுதிக்கான கண்காணிப்பு வியமொன்றினை இன்று ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொண்டார்.
பாதுகாப்பு செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் லெப்டினண்ட் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டியவினால் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவுக்கு (ஓய்வு) இன்று (அக் 25) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் 'இராணுவ கண்டுபிடிப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான அதன் பங்களிப்புகள்' எனும் தலைப்பில் விரிவுரையை நடத்தியது
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS), "இராணுவ கண்டுபிடிப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான அதன் பங்களிப்புகள்" என்ற தலைப்பில் இன்று (அக்டோபர் 24, 2024) பாதுகாப்பு அமைச்சின் "நந்திமித்ர கேட்போர் கூடத்தில்" பொது விரிவுரை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
இலங்கை விமானப்படை தலதா மாளிகையில் வருடாந்த மருத்துவ முகாமை நடத்தியது
இலங்கை விமானப்படை (SLAF) திங்கட்கிழமையன்று (அக்டோபர் 21) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் தனது வருடாந்த மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தியது. மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா சங்கத்தினர், மாணவர் பிக்குகள் மற்றும் ஆலய ஊழியர்களின் நலனுக்காக 6வது முறையாக இம்மருத்துவ முகாம் நடத்தப்பட்டதாக விமானப்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கைக்கான மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் இன்று (அக்டோபர் 23) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
இலங்கை கடற்படையினால் மினுவாங்கொடை வைத்தியசாலையின் ஹீமோடையாலிசிஸ் பிரிவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ தர நீர் சுத்திகரிப்பு (RO) இயந்திரம் திறந்து வைப்பு
மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையின் ஹீமோடையாலிசிஸ் பிரிவுக்காக இலங்கை கடற்படையினரால் வடிவமைக்கப்பட்ட மருத்துவ தர நீர் சுத்திகரிப்பு (RO) இயந்திரம் நேற்று (அக் 21) திறந்து வைக்கப்பட்டது. கடற்படை தகவல்களுக்கமைய, இது கடற்படை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்ட 30வது மருத்துவ தர RO நீர் சுத்திகரிப்பு இயந்திரமாகும் ஆகும்.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி (DSSC)
தூதுக்குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
கேர்ணல் லாரா தெரேஸ் ட்ராய் தலைமையிலான ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி (DSSC) தூதுக்குழு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (அக் 21) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தது.
இலங்கை கடற்படை 4 FAF படையணியின் முன்னாள் யுத்த வீரர்கள் கௌரவிப்பு
இலங்கை கடற்படையின் (SLN) 4வது ஃபாஸ்ட் அட்டாக் புளோட்டில்லா (4 FAF) படையணி அதன் முன்னாள் யுத்த வீரர்களை பாராட்டி கௌரவித்துள்ளது. கடற்படை தகவல்களுக்கமைய, திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள 4 FAF போர் போர் நினைவகத்தில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 19) முதற் தடவையாக நடத்தப்பட்ட இவ்விழாவில் யுத்தத்தின் போது காயமடைந்த (WIA) 4 FAF வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்திய கடற்படை கப்பல் ‘கல்பணி’ இலங்கை வருகை
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இந்திய கடற்படையின் விரைவுத் தாக்குதல் கப்பல் (FAC), INS கல்பனி (T-75) சனிக்கிழமையன்று (அக்டோபர் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் (DGCSD) பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவை (ஓய்வு) இன்று (அக்டோபர் 18) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தார்.
ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவன் S. சகர்யான் (Levan S. Dzhagaryan) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (அக்டோபர் 18) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதிமேதகு ஜூலி சுங் இன்று (அக்டோபர் 16) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தமான சந்தித்தார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை தளபதி
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவை (ஓய்வு) இன்று (அக்டோபர் 16) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை என கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்
"நாங்கள் யுத்தத்தின் தாக்கத்தைப் கண்டுள்ளோம், மேலும் அமைதியின் குணப்படுத்தும் சக்தியையும் அனுபவித்திருக்கிறோம். உங்கள் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கும் தருணம், நமது தேசம் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களை உங்களுடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தெரிவித்தார்.
ஆயுதப்படையினர் வெல்ல நிவாரண பணிகளில் மும்முரம்
நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதப்படை மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் நிவாரணாப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் சிறிய நிலச்சரிவுகள் ஏட்பட்டுள்ள நிலையில் பல பிரதேசங்களில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆயுதப்படை மீட்புக் குழுக்கள் அனர்த்த முகாமைத்து நிலையத்துடன் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய உயர் பாதுகாப்பு முகாமைத்துவக் பாடநெறி (HDMC)
தூதுக்குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
கப்டன் வைபவ் ஜன்பந்து தலைமையிலான இந்திய உயர் பாதுகாப்பு முகாமைத்துவக் பாடநெறி தூதுக்குழு (HDMC) இன்று (அக் 14) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில், இலங்கை பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
முப்படைகளின் உதவி தொடரும்
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை நிவாரணக் குழுக்கள் ஏற்கனவே செயற்பட்டு வருகின்றன.
சீனத் தூதுவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் அதிமேதகு கி ஜென்ஹோங், இன்று (அக். 11).
துருக்கிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
துருக்கி குடியரசின் தூதுவர் மேதகு செமித் லுட்ஃபு துர்குட் அவர்கள் இன்று (அக்டோபர் 11).