பாதுகாப்பு செய்திகள்
தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் கடற்படையினரால் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுதாய நல பணிகளின் ஒரு பகுதியாக தலசீமியா நோய்க்கான 23 சிகிச்சைக் கருவிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சுகாதார அமைச்சிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று (டிசம்பர், 15) கையளிக்கப்பட்டது.
கடலோரப் பாதுகாப்பு படை பணிப்பாளருடன் ஜய்கா நிறுவன தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் (ஜய்கா) தலைவர் யமடா டெட்சுகா மற்றும் கடலோரப் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவுக்கிடையிலான சந்திப்பு அண்மையில் (டிசம்பர் 14) சமுத்ர ரக்ஷா கப்பலில் இடம்பெற்றது.
லெபனானிலுள்ள இலங்கை படையினருக்கு பதக்கங்கள் அணிவிப்பு
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைகளுடன் இணைந்து பணியாற்றிவரும் இலங்கை படையினரின் முன்மாதிரியான சேவைகளை பாராட்டி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு லெபனானின் நகோரா நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிகாக்கும் படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்
“கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள்” என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இந்த ஊடகச் சந்திப்பை வழிநடத்தினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை மற்றும் ஜப்பான் எதிர்பார்ப்பு
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேதகு மிசுகோஷி ஹிடேகி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்,15) சந்தித்தார்.
பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி-2021 இல் விமானப்படைவீரர்கள் பிரகாசிப்பு
உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி-2021இல் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முல்லைத்தீவில் தேவையுடையோருக்கு இராணுவம் உதவி
முல்லைத்தீவு பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மனிதாபிமான மற்றும் சமூக அடிப்படையிலான திட்டங்கள் பல முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்குதே எமது இலக்கு - பாதுகாப்புச் செயலாளர்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கேரிக்கை விடுத்தார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த ஆய்வு கருத்தரங்கு பாதுகாப்பு செயலாளரினால் அங்குரார்ப்பணம்
பத்தரமுல்லவில் அமைந்துள்ள வாேட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் 11வது ஆண்டு ஆய்வு கருத்தரங்கு - 2021 இல் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பண்டிகை காலத்துக்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துங்கள் – ஜனாதிபதி தெரிவிப்பு…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
சர்வதேச கடற்பிராந்தியத்தில் சுமார் 250 கிலோ போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு மீன்பிடிகப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சர்வதேச கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேடதேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு மீன்பிடி கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதன்போது வெளிநாட்டு சந்தேக நபர்கள் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பாரியளவிலான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டது.