பாதுகாப்பு செய்திகள்
மன்னாரில் 68 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
மன்னார், நறுவிலிக்குளம் பகுதியில் கடற்படையினரால் நேற்றைய தினம் (செப்டம்பர், 21) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 228 கிலோ கிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இராணுவத்தினருக்கு சேதன பசளை உற்பத்தி குறித்த விழிப்புணர்வு திட்டம் முன்னெடுப்பு
வெலிஓயா பிரதேசத்தில் சேதன பசளை உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இராணுவத்தினரால், மகாவலி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு படையினரால் ஏனைய படைவீரர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி
இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்களினால் இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களுக்கு அடிப்படை நிலை உயிர்காக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறித்த பயிற்சி நெறி பலபிட்டியவில் அமைந்துள்ள கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பு பயிற்சிப் பாடசாலையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
காயமடைந்த இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்
பல நாள் மீன்பிடிக்கு கடலுக்கு சென்றிருந்தத படகில் பலத்த காயமடைந்த இரண்டு மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையின் உதவியுடன் கடற்படையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.
கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலைய நீர் மட்ட அளவினை சீர்செய்ய மணல் மூட்டை நீர்வழி அமைப்பு
கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் மட்டம் குறைந்ததையடுத்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, மகாவலி ஆற்றிலிருந்து கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வசதி செய்வதற்காக இராணுவத்தினரால் கந்தளாய் நீர்வழியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது.
வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கான வன சஞ்சார போரிடல் பயிற்சி மற்றும் ஹெலிகொப்டர் மூலமான போரிடல் பயிற்சிகள் நிறைவு
இலங்கை விமானப்படை, பங்களாதேஷ், மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கான இல.02 வன சஞ்சார போரிடல் பயிற்சி மற்றும் ஹெலிகொப்டர் மூலமான போரிடல் பயிற்சி என்பவற்றை உள்ளடக்கிய பயிற்சிநெறியை மொரவெவ விமானப்படை நிலையத்தில் உள்ள சிறப்புப் பயிற்சிப் பாடசாலையில் நடத்தியது.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பிற்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது - பாதுகாப்பு செயலாளர்
கடற்படை, பொலிஸ் புலனாய்வு பிரிவுடன் ஒன்றினைந்து இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில், 1,575 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 170 கிலோகிராமிற்கும் மேற்பட்ட ஹெராேயின் போதைப்பொருளை எடுத்துச் சென்ற வெளிநாட்டு மீன்பிடி படகினை கைப்பற்றி (செப்டம்பர், 18) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மற்றொருதொகுதிஹெராேயின் போதைப்பொருள் ஏற்றப்பட்ட கப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
170 கிலோ 866 கிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றினை இலங்கை கடற்படை கைப்பற்றியதுடன் அதனை இன்று காலை (செப்டம்பர், 18) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்தது.
இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துகிறது
ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நேற்றைய தினம் (செப்டம்பர், 16) வேரஹெராவில் நவீன வசதிகளை உள்ளடக்கிய புதிய விடுதி கட்டிடத்தின் நிர்மாணப் பணியைத் தொடங்கியுள்ளது.
மேலும் ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
நீர்கொழும்பு மா ஓயா நீரேந்துப்பகுதியில் நேற்றயை தினம் (செப்டம்பர், 16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது, நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரியளவிலான (1,162 கிலோ கிராமிற்கும் அதிகம்) உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
எகிப்திய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
எகிப்து அரேபிய குடியரசின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் அதிமேதகு ஹுசைன் எல் சஹார்தி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (செப்டம்பர், 17) இடம்பெற்றது.
கட்டுநாயக்க விமான நிலையம் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொது மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை பாதுகாப்பு செயலாளர்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் பாணியில் கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொது மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் விமானப்படை குத்துச்சண்டை வீரர்கள்
58 வது உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை விமானப்படை பெண்கள் குத்துச்சண்டை அணியின் நான்கு பெண் வீராங்கனைகள் இன்று (செப் 16) ரஷ்யாவின் மாெஸ்கோ நகரிற்கு பயணமானார்கள்.