பாதுகாப்பு செய்திகள்
பலஹருவ பிரதேசத்தில் சூட்சமமான முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சா செய்கை இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது தனமல்வில, பலஹருவ பிரதேசத்தில் சூட்சமமான முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சா செய்கை கண்டுபிடிக்கப்பட்டது.
இராணுத்தினரால் வாழ்வாதார மற்றும் மெகா பயிர்ச் செய்கை திட்டம் முன்னெடுப்பு
ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” என்னும் கொள்கைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பங்களிப்பு செய்யும் விதமாக இராணுவ தளபதியின் “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் படையினர் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலாண்மை மற்றும் கால்நடை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இத்திட்டங்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமை இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ் ராஜபக்ச அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராக லெப்டினன் கேர்ணல் நளின் ஹேரத் பொறுப்பேற்பு
இலங்கை இராணுவத்தின் கவச வாகன படையணியைச் சேர்ந்த லெப்டினன் கேர்ணல் நளின் ஹேரத் பாதுகாப்பு அமைச்சின் கடமை நிறைவேற்று புதிய ஊடக பணிப்பாளராக அமைச்சிலுள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் (செப்டம்பர், 15) கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடலோர பாதுகாப்பு படை சர்வதேச பயிற்சியை வழங்குகிறது
மேற்கு ஆப்பிரிக்க நாட்டு படைவீரர்களுக்கு, விஜயம் மேற்கொண்டு, தரித்திருந்து, தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்துபறிமுதல் செய்யும் பயிற்சி நெறியின் ஆரம்ப கட்ட பயிற்சி, அண்மையில் கடலோர பாதுகாப்பு படையினரால்,மிரிஸ்ஸ, உயர் பயிற்சி மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
தலைமன்னார், உருமலைப் பிரதேசத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர்,14) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின்போது ஒரு தொகை ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
சிவில் பாதுகாப்புப்படை திணைக்களம் தனது 15வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகின்றது
தனது விவசாயத் திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ள சிவில் பாதுகாப்புப்படை திணைக்களம் இன்று (செப்டம்பர், 13) அதன் 15 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
எருக்கலம்பிட்டியில் 72,000ற்கும் மேற்பட்ட கடலட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 72,542 கடலட்டைகள் நேற்றைய தினம் (செப்டம்பர்,12) கைப்பற்றப்பட்டது.
மொஸ்கோவின் ‘இராணுவ விளையாட்டு -2021’ இல் ‘சிறந்த அணிக்கான கிராண்ட் பிரிக்ஸ்’ விருது இராணுவ கலைஞர்களுக்கு
முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மொஸ்கோவின் 'VII சர்வதேச இராணுவ விளையாட்டு -2021' போட்டிகளின் கலாசார பிரிவின் சிறப்பான அணிக்கான விருது மற்றும் சிறந்த குழுவிற்கான கிராண்ட் பிரிக்ஸ் விருது உட்பட பல விருதுகளை இலங்கை இராணுவ நடனக் கலைஞர்களின் குழுவினர் பெற்றுக்கொண்டனர். அதற்கமைய வெளிப்படைத் தன்மையான மற்றும் உண்மைத் தன்மை கொண்ட மேடைப் படங்கள் மற்றும் அவற்றின் கலாசார பிரதிபலிப்பு என்பவற்றில் சிறந்த அணிக்கான விருதையும், வாத்திய போட்டிகளில் (டூயட்) முதலிடத்தையும், கலாச்சார ஆடைக்காக இரண்டாமிடத்தையும் பெற்றுகொண்டனர்.
நுவரெலியா வனப்பகுதியில் காணாமல்போன யுவதி படையினரால் மீட்பு
நுவரெலியா டின்சின் தோட்ட வனப்பகுதிக்குள் கடந்த 5ம் திகதி காணாமல் போன யுவதி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார்.
1136 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், குருநகர், மற்றும் சிலாவதுரை, அரிப்பு, ஆகிய கரையோர பிரதேசங்களில் கடற்படையினரால் செப்டம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1136 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறாமீனின் பாகங்களை கொண்டுசென்ற லாெறிவண்டி கடலோர பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது
சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட சுறா மீன்களின் உடற் பாகங்களை லொறி வண்டியில் கொண்டு செல்வதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நடவடிக்கை உடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன - பாதுகாப்பு செயலாளர்
பாதுகாப்பு அமைச்சும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஹெரோயின் உட்பட பாரியளவிலான பல்வேறு போதைப் பொருள்களும், பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
தொற்றுநோய் நிலைமைகள் தொடர்ந்தாலும், நாம் நாட்டின்
அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டும் - பாதுகாப்பு செயலாளர்
தொற்றுநோய் நிலைமைகள் தொடர்கின்ற போதிலும் தேசத்தினை நெருக்கடி நிலைக்குள்ளாக்காமல், தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அபிவிருத்தி இலக்குகளுடன் கூடிய ஸ்திரதன்மை அடைய நாம் எப்போதும் பணியாற்ற வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (செப்டம்பர்,09) தெரிவித்தார்.