பாதுகாப்பு செய்திகள்
யாழில் 109 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ் தொண்டமானாறு முதல் மண்முனை வரையான கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 109.15கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
படையினரைதொழில்முயற்சியாளர்களாக மாற்றியமைத்தமைக்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டு
படைவீரர் ஒருவர் தனக்கு வழங்கப்படும் எந்தவொரு பணிகளையும் செய்யத் தயார் நிலையில் உள்ளதால் அவர்களால் செய்ய முடியாது என்று ஒன்றுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தார்.
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக சமூகத்தில் பரப்பப்ட்டுள்ள விடயம் முற்றிலும் தவறானது - பாதுகாப்பு செயலாளர்
மனித மூலதனம், வளங்கள் மற்றும் அறிவு என்பவற்றின் அதிகபட்ச பயன்பாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மூலம் பயன்படுத்தப்படும்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இராணுவப் போர் வீரர்கள்
டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் - 2021 இல் முதலாம் இலக்க சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க இலங்கையின் மாற்றுத்திறனாளி வீரர் சார்ஜென்ட் டி.எச்.ஆர் தர்மசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
குளங்களை புனரமைக்கும் பணியில் இராணுவத்தினர்
200 குளங்களை புனரமைப்பு செய்யும், ஜனாதிபதியின் "வாரி செளபாக்ய" திட்டத்தின் கீழ் வெலிஓயா, மகாவலி-எல் வலயத்தில் அமைந்துள்ள 4 குளங்களை புனரமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
சந்தஹிருசேய தூபியின் ‘சூடாமாணிக்கம்’ பதிப்பு மற்றும் ‘மினாரா' நிர்மான பணிகள் ஆரம்பம்
சந்தஹிருசேய தூபியில் பதிக்கப்படவுள்ள சூடா மாணிக்கம் மற்றும் நிர்மாணிக்கப்படவுள்ள மினாரா கோபுரம் என்பவற்றை பொதுமக்கள் வழிபடும் வகையில் நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மின்னிதழ் வெளியீடு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பல்லொழுக்காற்று கற்கைகளின் மின்இதழ் (Journal of Multi disciplinary Studies ) வெளியீடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் நேற்றைய தினம் (ஜூலை, 28) உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.
சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு
ரணவிரு சேவா அதிகாரசபைக்கு ஒரு தொகுதி அங்கவீனமுற்றோருக்கான உபகரணங்களை வழங்கி வைத்தமைக்காக களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மஹிந்த சரணபாலவுக்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 417 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம் மடகலிலிருந்து பருத்தித்துறை வரையிலான கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 417.2 கிலோகிராம் கேரளா கஞ்சா, கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு சகிதம் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடலோர பாதுகாப்பு படையினரால் 108 கடல் ஆமைகள் கடலுக்குள் விடுவிக்கப்பட்டன
இலங்கை கடலோர பாதுகாப்பு படை, கடல் ஆமைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 108 கடல் ஆமைக் குஞ்சுகளை அண்மையில் கடலுக்குள் விடுவித்தது.
கிளிநொச்சியில் தேவையுடைய இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு
கிளிநொச்சி பிராந்தியத்தில் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக, இப்பிராந்திய பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் தேவையுடைய இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டன.
யாழில் 65 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம், காங்கேசந்துறை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 216.750 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.