--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் ரூ. 55.7 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது

பூணேரி, பள்ளிக்குடா கடற்கரைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 185.575 கிலோகிராம் கேரள கஞ்சா 54வது பிரவில் கடமைபுரியும் படைவீரர்களினால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் குறைந்த வசதிகள் கொண்ட 08 பாடசாலைகள் இலங்கை கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது

இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளை 2021 ஆம் ஆண்டில் அபிவிருத்தி செய்து நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உகந்த சூழலையாக உருவாக்கும் கடற்படை சமூக சேவை திட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு, தென்கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய கடற்படை கட்டளைகளில் 2021 ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கப்பட்டது. இந்த சமூக சேவை திட்டத்திற்கான நிதி பங்களிப்பு அனைத்து கடற்படை அதிகாரிகளும் மாலுமிகளும் தங்கள் மாத சம்பளத்தை தானாக முன்வந்து வழங்குகிறார்கள், மேலும் இந்த கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மனிதவளத்தையும் கடற்படை வழங்குகிறது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்காக பயணமாகும் படைக் குழுவினர் வழியனுப்பி வைப்பு

ஐக்கிய நாடுகள்  அமைதிகாக்கும் பணிகளுக்காக மாலி நோக்கி பயணமாகும்  படைக் குழுவினர் வான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் (ஏப்ரல், 21) வழி அனுப்பி வைக்கப்பட்டனர். அமைதிகாக்கும் பணிகளுக்காக விஷேடமாக தொழில்முறை ரீதியாக பயிற்சிபெற்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 243 படை வீரர்களே இவ்வாறு வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போர் வீரர்களுக்கு புதிய நம்பிக்கையளிக்கும் புத்தாண்டு

“சுபீட்சத்தின் நோக்கு” எனும் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேசமயம், திறமையாக செயல்படுவதற்கும், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் எமது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதற்கும் நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.











செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெலு ஓயாவில் காணாமல் போனதாகக் கூறப்படும் இருவரின் உடல்கள் படையினரால் மீட்பு

ஹல்டும்முல்லவில் உள்ள வெலு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் தந்தை மற்றும் அவரது மகனின்
உடல்கள் படையினரால் இன்று (ஏப்ரல் 16) காலை மீட்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரொஷான் அபேசுந்தர அடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டார்

விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர கோப்ரல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவினால் நேற்றைய தினம் (ஏப்ரல்,15) அவர் கோப்ரலாக தரம் உயர்த்தப் பட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ரன்விஜய் 'மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை நேற்று (ஏப்ரல்,14) வந்தடைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமானதாக சிங்கள, தமிழ் புத்தாண்டு அமையட்டும் என பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழில் உள்ள குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கையளிப்பு

யாழ் கிராண்ட் பஸார் பகுதியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு இந்து சமய சம்பிரதாயங்களுக்கு அமைய இடம்பெற்ற சிறிய வைபவத்தின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.