பாதுகாப்பு செய்திகள்
கல்வி முகாமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இராணுவத்தினரால் தடுப்பூசியேற்றம்
ஆசிரியர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இலங்கை இராணுவ மருத்துவ குழுக்கள் அண்மையில் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் 350 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசியேற்றப்பட்டன.
பெட்டி வடிவத்திற்குள் கப்பல் ஓட்டும் கடல் சார் கடற்படையின் பயிற்சிநெறி
பெட்டி வடிவத்திற்குள் கப்பல் ஓட்டுதல் எனும் கடற்படையின் பயிற்சிநெறி, சிறப்பு படகுப் பிரிவு தலைமையத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன முன்னிலையில் அங்குராப்பனம் செய்துவைக்கப்பட்டது.
சேதனப் பசளை உற்பத்தியை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம்
சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தின் போது மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு), அதிமேதகு ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக சேதனப் பசளை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்காவினால் 2021.07.06 அன்று விடுக்கப்பட்ட இலங்கைக்கான பயண எச்சரிக்கை தொடர்பான ஊடக அறிக்கை
2021 மே, 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ம் நிலை பயண எச்சரிக்கை ஜூலை, 06ம் திகதி முதல் 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் மஞ்சள் செய்கை அறுவடை
குட்டிக்கல பிரதேசத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் செய்கை இராணுவத்தின் 1வது பொது சேவைகள் படையணி வீரர்களால் அறுவடை செய்யப்பட்டது.
15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டமை தொடர்பான ஊடக அறிக்கை
15வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர், பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தினரால் சமூக தடுப்பூசி நிலையங்கள் அமைப்பு
ஜனாதிபதியின் பணிப்புரையை அடுத்து இன்று (ஜூலை 5) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சினோஃபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறுவதற்காக மேற்கு மாகாணத்தில் புதிய சமூக தடுப்பூசி நிலையங்களையும், மாவட்ட அடிப்படையிலான நிலையங்களையும் இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அதிமேதகு தாரிக் முஹம்மட் ஆரிபுல் இஸ்லாம், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஜூலை, 05) சந்தித்தார்.
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் இராணுவத்தினரால் கைது
திருகோணமலை சிற்றாறு பிரதேசத்தில் அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 18 பேர் இராணுவத்தின் உதவியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இராணுவத்தினரால் தியதலாவையில் சேதனப் பசளை உற்பத்தி ஆரம்பம்
தியதலாவையில் உள்ள 1வது பொது சேவைகள் படையினரால் சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இராணுவத்தின் பொது சேவைகள் படையணியின் கேர்ணல் நிலை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ஹந்துமுள்ளவின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் தேவையுடைய மக்களுக்கு இராணுவத்தினரால் ஆறு வீடுகள் நிர்மாணிப்பு
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல்களுக்கமைய இலங்கை இராணுவம் கிளிநொச்சியில் தேவையுடைய மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 442 பேர் கடற்படையினரால் கைது
அண்மையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 152 மீன்பிடி படகுகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களுடன் 442 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கொவிட் தடுப்பு இயக்கத்திற்கான மருத்துவ சாதனங்களை தர்ம விஜய அறக்கட்டளை பரிசளிப்பு
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தர்ம விஜய அறக்கட்டளை மற்றும் பெளத்த விஹாரை ஆகியன இணைந்து கொவிட் -19 கட்டுப்பாட்டு பணிகளுக்காக இலங்கைக்கு நேற்று (ஜூலை 01) ஒரு தொகை மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
மன்னாரில் 2000 கிலோவிற்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் படையினரால் கைப்பற்றப்பட்டது
மன்னார், அச்சங்குளம்,நறுவிலிக்குளம் மற்றும் சவுத் பார் பிரதேசங்களில் ஜூன் 29,30 மற்றும் ஜூலை 01ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 2021.4 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஆறு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அம்பகமுவவில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை இராணுவத்தினரால் அழிப்பு
அம்பகமுவ மற்றும் தனமல்வில பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அவை பொலிஸாரின் மேற்பார்வை கீழ் அழிக்கப்பட்டன.
'நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2021' கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படையினர் பங்கு கொண்ட "நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2021" கூட்டுப் பயிற்சி நடைவடிக்கை நேற்றையதினம் (ஜூன் 30) வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இந்திய கடலோர பாதுகாப்பு படை இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு உதிரி பாகங்கள் வழங்கி உதவி
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் திரு வினோத் ஜேக்கப், இலங்கை கடலோர பாதுகாப்புப்படை பிராந்திய தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன் போது அவர் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சுரக்ஷா கப்பலுக்கான உதிரிபாகங்களை உத்தியோக பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
சர்வதேச விளையாட்டுக்களில் கௌரவத்தை சேர்த்த இராணுவ விளையாட்டு வீரர்கள்
அண்மையில் நடைபெற்ற ‘76 வது செஸ் மியோர் நினைவு தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில்’ இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று இராணுவத்துக்கும், நாட்டுக்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.