பாதுகாப்பு செய்திகள்
வவுனியா ஆயுர்வேத வைத்தியசாலை இராணுவத்தினரால் இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றியமைப்பு
வவுனியாவில் உள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலை, 100 கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய சகல மருத்துவ வசதிகளும் கொண்ட புதிய இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றி அமைக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளிடம் அன்மையில் ஒப்படைக்கப்பட்டது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) முகமம்து சாத் கட்டாக் இன்று (ஜூன் 22) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) சந்தித்தார்.
படையினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட வசதிகள் விரிவாக்கம்
கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள கொவிட் - 19 தொற்றை கண்டறிவதற்கான ஆய்வுக்கூடத்தை புதுபிக்கும்மற்றும் விரிவுபடுத்தும் பணிகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
இடைநிலை பராமரிப்பு நிலையமாக வகையில் மாநாட்டு மண்டபம் இராணுவத்தினரால் மாற்றியமைப்பு
கொழும்பிலுள்ள புகழ்பெற்ற கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை கொவிட்- 19 தொற்றாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினர் மாற்றியமைத்து அதனை சுகாதார அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்தனர்.
பிரேசில் பிரதித் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் பிரியாவிடை சந்திப்பு
தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்த பிரேசில் குடியரசின் இலங்கைக்கான பிரசில் குடியரசின் பிரதி தூதுவர் வின்ஸ்டன் அலெக்சாண்டர் சில்வா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் (ஓய்வு) தனது பிரியாவிடை சந்திப்பை மேற்கொண்டார்.
52 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம் தொண்டமானாறு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 174.05 கிலோ கிராம் கேரள கஞ்சா,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு சகிதம் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை, ஜப்பான் கடற்படை கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன
இரண்டு ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைபயிற்சி கப்பல்கள், மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்து, இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி நடவடிக்களை மேற்கொண்டன.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் ஜென் இசட் எனும் முதல் மாணவர் பிரிவாக செயல்படும்
இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் 45 வது ஆண்டுவிழாவையொட்டி “ஜென் இசட்” எனும் இணையவழி கருத்தரங்கு இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் முதல் மாணவர் பிரிவாக ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி பீடத்தில் இன்று (மே,20) இடம்பெற்றது.
சிலாபம் கடற்பரப்பில் 23 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சிலாபம் முக்கு தொடுவாவ கடற்பரப்பில் மிதந்த நிலையில் காணப்பட்ட 23.1 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் இன்று (ஜூன், 20) கைப்பற்றப்பட்டது.
அம்பதாண்டேகம காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினர் மும்முரம்
பண்டாரவளை, தோவ அம்பதாண்டேகம மலைப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை இராணுவத்தினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
சீதுவை இடைநிலை சிகிச்சை மையத்திற்கு நன்கொடைகள் வழங்கிவைப்பு
சீதுவை இடைநிலை சிகிச்சை மையத்தில் பயன்படுத்துவதற்கும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காகவும் ஒரு தொகை நன்கொடை பொருட்கள் நன்கொடையாளர்களினால் இராணுவத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளன.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில்
ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர் வரும் 21ஆம் திகதி அதிகாலை 4.00. மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நடவடிக்கை இராணுவத்தினரால் ஆரம்பம்
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 5வது இராணுவ மகளிர் படையணி வீராங்கனைகள், படை முகாம் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கழிவுகளையும் குப்பைகளையும் பயன்படுத்தி 160,000 கிலோ கிராம் சேதன பசளையை உற்பத்தி செய்தனர்.
39 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
ஊர்காவற்துறை, கரம்பன் பிரதேசத்தில் 130.76கிலோகிரம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சுரேஷ் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) இன்று சந்தித்தார்.
உலர்ந்த மஞ்சள் மற்றும் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சிலாவத்துறை, கொண்தம்பிட்டி, மன்னார் மற்றும் அரிப்பு ஆகிய கடற்கரைப் பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 370.6 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 294.1 கிலோகிராம் பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத கஞ்சா செய்கையஇராணுவத்தினரால் சுற்றிவளைப்பு
தனமல்வில பிரதேசத்தில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கையினை அதாவது இலங்கை சிங்க படையணியின் படைவீரர்கள் அன்மையில் சுற்றிவளைத்தனர்.