பாதுகாப்பு செய்திகள்
கடற்படை சேவா வனிதா பிரிவினால் மரம் நடுகை திட்டம்
சர்வதேச வன தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவின் நாடு முழுவதும் மரம் நடுகை செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
71 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் பறிமுதல்
யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியில் நேற்றையதினம் (மார்ச் 22) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை டிப்பர் லொரி மூலம் கொண்டு சென்ற 02 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தஹிரு சேய தூபிக்கான புதையல் பொருட்களை அன்பளிப்பு செய்ய மேலும் ஆறு நாட்கள் அவகாசம்
அனுராதபுரம், சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்பு செய்வதற்காக கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் பெரும் தொகையான புதையல் பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளதுடன் இவற்றை ஒப்படைப்பதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான ஆறு நாட்கள் கால அவகாசம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய கடற்படை பிரதம அதிகாரி நியமனம்
இம்மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரியர் அட்மிரல் ருவன் பெரேரா இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகுரேகொட பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்
அகுரேகொடவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் பொருட்டு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (மார்ச் 21) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
உயிர் காக்கும் மனிதாபிமான திட்டத்திற்கமைய இராணுவம் இரத்ததானம்
கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நலன்கருதி கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள கிளிநொச்சி இராணுவ தள வைத்தியசாலையில் இலங்கை இராணுவத்தினரால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அபி வெனுவென் அபி திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு வீடுகள் கையளிப்பு
தாய்நாட்டுக்காக தம்மை அர்பணித்த படைவீரர்களின் சொந்த வீடு எனும் கனவை நானவாக்கும் அபி வெனுவென் அபி திட்டத்தின் மூலம் பகுதி அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு படைவீரர்களின் வீடுகளுக்கு நிதி மற்றும் ஆளணி உதவிகளை வழங்கி அவர்களின் வீடுகளை முழுமை அடையச் செய்து அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (மார்ச், 20) மாத்தறை, வெவஹமன்துவயில் இடம்பெற்றது.
சந்தஹிரு சேய தூபியில் வைப்பதற்காக புனித பொருட்கள் அன்பளிப்பு
சந்தஹிரு சேய தூபியில் வைப்பதற்காக ஒரு தொகை பெறுமதிவாய்ந்த புனிதப் பொருட்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) இன்று (மார்ச், 19) கையளிக்கப்பட்டது.
'தீகவாபிய அருண' நம்பிக்கை நிதியத்திற்கு 2.65 மில்லியன் ரூபா நன்கொடை
'தீகவாபிய அருண' நம்பிக்கை நிதியத்திற்கு நேற்று (மார்ச் 18) வைத்தியர் பிரியங்கி அமரபந்துவினால் 2.65 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
21 பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் 15 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட் சாதனங்களை வெற்றிகரமாக மீட்பு
மாலியில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ. நா. பலபரிமாண ஒருங்கிணைந்த பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் இலங்கை படைக்குழுவினர் மார்ச் 15ம் திகதி வரை மேற்கொண்டுள்ள 21 பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் 15 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட் சாதனங்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது.
கிழக்கு மாகாண பொஷன் போய தின நிகழ்வுகள் புகழ்பெற்ற தீகவாபி தளத்தில்
இந்த வருடத்திற்கான கிழக்கு மாகாணத்தின் பொஷன் போய தின பிரதான நிகழ்வுகள் பௌத்தர்களின் முக்கிய புனித வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகத் திகழும் தீகவாபி புண்ணிய ஸ்தலத்தில் இடம்பெற உள்ளதாக பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
‘சந்தஹிரு சேய’ தூபியில் பெறுமதிவாய்ந்த புதையல் பொருட்களை வைப்பு செய்யும் மகோட்ஷவம்
நாட்டின் நான்காவது பெரிய தாதுகோபுரமான சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்பு செய்யும் மகோட்சவம் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
கடற் படையினரால் கரையோரங்களில் கண்டல் தாவரங்கள் நடுகை
கடல் தாவர சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் இலங்கை கடற்படையினரால் நேற்று பொன்னாலை கடற்கரை பிரதேசத்தில்கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
6 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை படைவீரர்களினால் அழிப்பு
அம்பாறை பக்மிடியாவ பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 1வது கொமாண்டோ படைப்பிரிவு வீரர்களினால் நேற்று (மார்ச் 14) சோதனையிடப்பட்டது.