பாதுகாப்பு செய்திகள்
இலங்கை தொடர்பான தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் இலங்கை கோரிக்கை
காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸ் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) அவர்களால் 2021 மே 18ஆந் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச். ஆர்.இ.எஸ். 413 என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அவர்களினூடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினர் மீட்பு
மாவனெல்லை, தெவனகல பகுதியில் தொடர்ச்சியான மழை மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
களனி கங்கை கரையோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்று வரும் மழைவீழ்ச்சி காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் அடுத்த 6 முதல் 16 மணி நேரத்திற்குள் ஹன்வெல்ல நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் 9.0 மீட்டர் வரையும் நகலகம் வீதி தே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 6.60 அடி வரையும் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிஞ்சாக்கேணிஆயுர்வேத வைத்தியசாலை இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைப்பு
திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினராலும் அன்மையில் மாற்றி அமைக்கப்பட்டது.
முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்கள் இராணுவத்தினரால் தொற்று நீக்கம்
நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கூடும் இடங்களை தொற்று நீக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைய முழங்காவில் பொலிஸ், பொது சுகாதார பிரிசோதகர்கள் மற்றும் பிரதேச சபை இராணுவத்தினருடன் இணைந்து முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம்
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபத்தில் உலர்ந்த மஞ்சள் மற்றும் வெங்காயம் விதைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சிலாபம் வட்டக்கல்லிய பிரதேசத்தில் நேற்றைய தினம் 362.95 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571.4 கிலோ கிராம் வெங்காய விதை என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.