பாதுகாப்பு செய்திகள்
களத்தில் கடலோர பாதுகாப்பு படை
தீ காரணமாக சேதமடைந்த கப்பலிலிருந்து வெளியாகி கடற்கரையோரங்களில் தேங்கியிருந்த சுமார் 5,000 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கழிவு பொருட்கள் இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப் படுத்தப் பட்டுள்ளது.
களத்தில் கடலோர பாதுகாப்பு படை
தீ காரணமாக சேதமடைந்த கப்பலிலிருந்து வெளியாகி கடற்கரையோரங்களில் தேங்கியிருந்த சுமார் 5,000 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கழிவு பொருட்கள் இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப் படுத்தப் பட்டுள்ளது.
வைரஸ் பரவலைக் தடுக்கும் பொலிஸாருக்கு இராணுவ ரைடர்ஸ் உதவி
கொவிட் - 19 பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண தடையை மீறி செயல்படும் நபர்களை கண்டறிய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாருக்கு உதவும் வகையில் இலங்கை இராணுவத்தின் ரைடர்ஸ் அணியில்
உள்ள இராணுவ வீர, வீராங்கனைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இராணுவத்தினரால் கைது
யாழ், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான மீன்பிடித் துறையில் புதைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு உள்ளிட்ட ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் யாழில் உள்ள இராணுவ வீரர்களினால் நேற்று (மே, 28) கைது செய்யப்பட்டார்.
சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க இராணுவம் கைகோர்ப்பு
படையினர் தீ அனர்த்தத்திற்குள்ளான கப்பலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன் கடலோர பாதுகாப்புக்கான ஏற்பாட்டை மேற்கொண்டது.
கப்பல் குப்பைகள் குறித்து அதிகாரிகளால் கடலோர குடியிருப்பாளர்களுக்கு விளக்கமளிப்பு
இலங்கை கடற்படை மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை என்பன தீ விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன் இலங்கை கடலோர பாதுகாப்பு படையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொண்டது.
கடல் சுற்றுச்சூழலை சேதமடைந்த கப்பலின் இருந்து பாதுகாக்க பாடுபடுங்கள் - ஜனாதிபதி
சேதமடைந்துள்ள எம்வி எக்ஸ்- பிரஸ் போர்ள் கப்பலினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு படைகள், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பிற பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மண்சரிவு அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும்
வங்காள விரிகுடாவின் கொந்தளிப்பான தன்மை காரணமாக மே 26 வரை நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மண்சரிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய அனர்த்தங்கள் பதுல்ல, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்னபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், கேகாலை மற்றும் கண்டி மாவட்ட எல்லைகளுக்கு அருகிலுள்ள குருனாகல் மாவட்ட எல்லை பிரதேசங்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானப்படையினரால் இரசாயன கலவைகள் தெளிப்பு
இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர்கள் 425 கிலோ தீயணைப்புகாக பயன்படுத்தப்படும் உலர் இரசாயனக் கலவைகளை இன்று காலை 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' கப்பலில் மீது தூவியதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களின் புனித வெசக் நோன்மதி தினச் செய்தி
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசக் நோன்மதி தினம் பௌத்தர்களான எமது அதி உன்னத சமய பண்டிகையாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி , பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) இன்று (மே, 25) சந்தித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்புக்காக இராணுவம் பொலிஸாருக்கு உதவி
பொலிஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேல் மாகாணத்தில் பெரும்பாலும் நெரிசலான பகுதிகளில் விசேட அதிரடிப் படை வீரர்களுடன் இராணுவ விரைவு செயலாற்றுகை குழுக்கள், விஷேட ரைடர் குழுக்கள் மற்றும் இராணுவ ட்ரோன் பட்டாலியன் படைவீரர்களை இராணுவம் அனுப்பியுள்ளது.
நாட்டில் கணத்த மழை மற்றும் வேகமான காற்று வீசக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்
கிழக்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த “யாஸ்” (“YAAS”) சூறாவளியானது மேலும் வலுவடைந்து ஒரு மிகப்பாரியசூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் இரத்த தானம்
இலங்கை தேசிய இரத்த மாற்றீட்டு சேவை, அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் நிலவும் இரத்த மாதிரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும் நாடு முழுவதிலும் உள்ள இலங்கை கடற்படையின் கடற்படை கட்டளையகங்களில் இரத்ததானம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.