பாதுகாப்பு செய்திகள்
உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் -ஜனாதிபதி
உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடு திரும்பும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கையில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் இயன் கெய்ன் இன்று (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி (ஓய்வு) இன்று (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
எகிப்திய தூதுவர் இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு மாஜித் மோஸ்லே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 13) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
கடும் மழை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கொழும்பு அவசர செயற்பாட்டு மையத்தில் விசேட கலந்துரையாடல்
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்பான அவசரகால நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தனர்.
இலங்கை உயர் மட்டத்தை நோக்கிய நம்பிக்கையான பயணத்தில் உள்ளது - பாதுகாப்பு செயலாளர்
இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் எமது ஆயுதப் படைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்த நாட்டின் வரலாற்றில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நீடித்த கொடூரமான பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டத்தில், வெற்றிகரமான இராணுவத் தலைமைகளிலும் சில சமயங்களில் போர்க்களத்தில் பலவீனமான சூழ்நிலைகளிலும் பல அனுபவங்களை பெற்றுள்ளோம்.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.
73வது 'கடற்படை தினத்தை' கொண்டாடும் இலங்கை கடற்படையினருக்கு வாழ்த்துகள்
இலங்கை கடற்படை தனது 73வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது. நாட்டின் முதல் தற்காப்பு வரிசையாக அறியப்படும் இலங்கை கடற்படையானது, சமாதானத்தின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதில் இன்றியமையாத பங்கை ஆற்றியுள்ளது.
நாட்டின் இளைஞர்களை இணையத் தீவிரமயமாக்களிலிருந்து பாதுகாக்க ஒன்றுபட்ட முயற்சி தேவை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன்
தெற்காசிய பிராந்தியத்தில் இளைஞர்களின் இணையத்தள தீவிரமயமாக்கல் என்பது ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ளது. முறையான கல்வி, ஒத்துழைப்பு, சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் மேம்படுத்துவதன் மூலம், தீவிரவாத சிந்தனைகளை எதிர்க்க நமது இளைஞர்களை வலுப்படுத்த முடிவதுடன் பிராந்தியத்தில் அமைதியும் இணக்கப்பாடும் நிலவ வழிகோலும்.
ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான உறுதிமொழிகளை
இலங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது
அக்ரா கானாவின் '2023 ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் அமைச்சர்கள்' கூட்டம் 2023 டிசம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறப்புப் பிரதிநிதி/விசேட தூதுவர் கௌரவ ரோஹித போகொல்லாகம ஆகியோர் கலந்துகொண்டு, ஐ.நாடு அமைதி காக்கும் பணியில் இலங்கையின் கூட்டு அர்ப்பணிப்பு, இலங்கையின் நாட்டு அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான உறுதிமொழிகளை வழங்கினர்.
மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் சரிம் அஸீஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 07) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இராணுவத்தினரால் வடக்கில் சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
இலங்கை இராணுவத்தின் யாழ். 4வது இலங்கை இராணுவ மருத்துவப் படையனியின் 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் முகாம் வளாகத்தில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர்.