திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நேற்று (29) பல நாள் மீன்பிடிநடவடிக்கைகளை மேற்கொள்ளும் படகு ஒன்றில் ஏற்பட்ட தீயினை கடற்படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஊடக அறிக்கை
ஓமந்தை, இலைமறந்தான் குளம் பிரதேசத்தில் உள்ள மரையிலுப்பைக் குளத்தில் ஏற்பட்ட நீர்க்கசிவினை தடுத்து நிறுத்த இராணுவத்தினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். நீர்கசிவு காரணமாக குளக்கட்டு உடைப்பெடுப்பதை தவிர்க்கும் வகையில் இராணுவத்தினரால் மக்கள் நலன் கருதி இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
Tamil
இலங்கை வரலாற்று ஏடுகளில் ஒரு புதிய அத்தியாயமாக, சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல் பொருட்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் இன்று (மார்ச் 28) புனித நகரமான அனுராதபுரத்தில் தூபி அமையப்பெற்றுள்ள வளாகத்தில் மகா சங்கத்தினரின் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் தின விழாவில், இலங்கை இராணுவத்தின் விஷேட படையணி பரசூட் வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினருடன் இணைந்து பரசூட் சாகசங்களை வெளிப்படுத்தினர்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு, யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) இன்று (மார்ச் 26) சந்தித்தார்.
புனித சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் வைப்புச் செய்வதற்காக டிபி ஜயசிங்க குரூப் ஒப் கம்பெனிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி டிபி ஜயசிங்கவினால் ஒரு தொகுதி புதையல் பொருட்கள் இன்று (மார்ச், 26) கையளிக்கப்பட்டன.
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'இலங்கையின் தேசிய பாதுகாப்பில் துறைமுக நகரத்தின் செல்வாக்கு' எனும் தலைப்பிலான விரிவுரை பத்தரமுல்லையில் இன்றைய தினம் (மார்ச் 26) இடம்பெற்றது.
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் மன்னந்தல் தமிழ் ஆரம்ப பிரிவு பாடசாலையில் கல்வி கற்கும் முல்லைத்தீவை சேர்ந்த 50 மாணவர்களுக்குபாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
சர்வதேச வன தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவின் நாடு முழுவதும் மரம் நடுகை செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியில் நேற்றையதினம் (மார்ச் 22) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை டிப்பர் லொரி மூலம் கொண்டு சென்ற 02 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம், சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்பு செய்வதற்காக கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் பெரும் தொகையான புதையல் பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளதுடன் இவற்றை ஒப்படைப்பதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான ஆறு நாட்கள் கால அவகாசம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரியர் அட்மிரல் ருவன் பெரேரா இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.