பாதுகாப்பு செய்திகள்
ரணவிரு சேவா அதிகாரசபைக்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்
போர் வீரர்களுக்கு பாதுகாப்பு போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். ரணவிரு சேவா அதிகாரசபைக்கு இன்றைய தினம் மேற்கொண்ட விஜயத்தின் போது ரணவிரு சேவா அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (08) கூடியது.
பணயக்கைதிகள் மீட்புப் பணிகள் தொடர்பாக இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பு
பணயக்கைதிகளை மீட்டல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளல் பாடநெறி மற்றும் போர் நடவடிக்கைகளில் மோப்ப நாய்களை பயன்படுத்தல் தொடர்பான உயர் தர பாடநெறிகளை வெற்றிகரமாத பூர்த்தி செய்த இலங்கை இராணுவ கொமாண்டோ படையணியின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் நேற்று (ஏப்ரல் 7) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்களுக்கான அடையாள சின்னத்ததைப் பெற்றுக்கொண்டனர்.
சட்டவிரோத குடியேற்றகாரர்கள் கடற்படையினரால் கைது
சிலாவத்துறை, கொண்டச்சிகுடா தெரு மேற்கொள்ளப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிலிருந்து புறப்பட தயாராக இருந்த சட்டவிரோத குடியேற்றகாரர்கள் 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கொழும்பு மலேய் வீதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு இன்று (ஏப்ரல் 05) விஜயம் செய்தார்.
பரிசுத்த வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாக்குதலின் இரண்டாவது ஆண்டினை நினைவுகூறும் அதேசமயம், 2021 ஏப்ரல் 4ம் திகதி இடம்பெறவுள்ள உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் மற்றும் பரிசுத்த வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ்; அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுதப்பட்டுள்ளது.
வெடி பொருட்களை கண்டறியும் மோப்ப நாய்களுக்கான மிருக வைத்தியசாலை திறப்பு
வெடி பொருட்களை கண்டறியும் இராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய்களுக்காக கள பொறியியல் படையணியின் கே9 பிரிவில் ஸ்தாபிக்கப்பட்ட மிருக வைத்தியசாலை கள பொறியியல் படையணி பிரதம பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகரவினால் திறந்துவைக்கப்பட்டது.