பாதுகாப்பு செய்திகள்
இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு
இலங்கை சமிக்ஞை படையணியின் கேர்னல் கொமடாண்ட் மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய, இராணுவத்தின் 56வது பிரதம அதிகாரியாக தனது கடமைகளை இராணுவத் தலைமையகத்தில் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளை பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு செய்தார்
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தலைமையில் மீளாய்வு செய்யப்பட்டது.
இராணுவ சேவா வனிதா பிரிவு தனக்கென முகநூல் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் சேவா வனிதா பிரிவு தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான நிகழ்வு ஜயவர்தனபுரயிலுள்ள, இராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவா வனிதா அலுவலகத்தில் நேற்று பிற்பகல் (டிச. 15 ) நடைபெற்றது.
இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் கந்தளாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இலகரக பயிற்சி விமானம் கந்தளாய், சூரியபுர பிரதேசத்திலுள்ள வயல் காணியில் இன்று (15) விழுந்து விபத்துக்குள்ளானது.
படை வீரர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கான நன்கொடை நிதியினை ரணவிரு சேவா அதிகாரசபை பெற்றுக்கொண்டது
ரணவிரு சேவா அதிகார சபைக்கு நிதி உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாள் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருமான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.
சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட உளர்ந்த மஞ்சள் படையினரால் கைப்பற்றப்பட்டது
மன்னார் பள்ளிமுனை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1560 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மன்னாரை தளமாகக் கொண்டுள்ள 54 ஆவது படைப்பிரிவின் படைவீரர்கள் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்ன சிப்பிகுளம் பிரதேசத்தில் இராணுவத்தினரால் 300 மரக்கன்றுகள் நடுகை
சின்ன சிப்பிகுளம் பகுதியில் இராணுவத்தின் 213 ஆவது பிரிகேட் படையினரால் சுமார் 300ற்கு மேற்பட்ட வேம்பு, நாகை, மா ஆகிய மரங்கள் நடுகை செய்யப்பட்டன.