பாதுகாப்பு செய்திகள்
பொதுமக்களின் பணத்திலிருந்து பராமரிக்கப்படும் சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறல் அவசியம் - பாதுகாப்புச் செயலாளர்
நீங்கள் இணைந்து கொண்டுள்ள இந்த துறையில் உங்களின் திறன்களை அதிகரித்துக் கொள்வதும் அதற்கேற்ப செயற்படுவதும் அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலாளர் கடற்படை தளத்திற்கு விஜயம்
திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்ன இன்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
தேவையுடைய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணம்
இலங்கை இராணுவம் சீகிரிய, கிம்பிஸ்ஸ பிரதேசத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு புதிதாக வீடொன்றை நிர்மாணித்துள்ளது.
ஆயுதப் படையினர்; தேசத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை வழங்க வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
மூன்று தசாப்தங்களாகக் காணப்பட்ட பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை பாதுகாப்புப் படையினர் வழங்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்தார்.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,260 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 538 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,612 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 14,336 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 697 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,074 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை கப்பல்கள் காலி முக திடலில் காட்சிக்கு
‘இது உங்கள் கடற்படை’ மற்றும் ‘உங்கள் கடற்படையை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ், கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கொண்டு இலங்கை கடற்படையின் மூலதனக் கப்பல்கள் காலிமுகத்திடல் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐநா அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட உள்ள ஐந்தாவது படைக்குழுவின் 2வது குழுவினர் இன்று பயணம்
தென் சூடான் குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் 5வது படைக் குழுவில் இணைந்து கொள்ளவுள்ள இலங்கை விமானப்படையின் 2வது குழுவினர் நாட்டிலிருந்து இன்று பயணமானார்கள்.
இலங்கை விமானப்படை கதிரியக்க உபகரண தொகுதியை பெற்றுக்கொண்டது
சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி அமைச்சர் கெளரவ . துமிந்த திசானாயக்க விஷேட கதிரியக்க பொருள் கண்டறிதல் மற்றும் கதிரியக்க அளவீட்டு கருவி தொகுதி ஆகியவற்றை இலங்கை விமானப்படைக்கு வழங்கி வைத்தார்.
ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யூரி மெட்டரி பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன வை பாதுகாப்பு அமைச்சில் இன்று (9) சந்தித்தார்.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,257 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 798 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 29,377 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களில் 100 மிமீ அளவிலான மழைவீழ்ச்சி கிடைக் பெறும் - வளிமண்டலவியல் திணைக்களம்
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.