பாதுகாப்பு செய்திகள்
போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களினது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான புதிய மார்க்கம்
போர் வீரர்கள் எதிர்நோக்கும் பிரதேச செயலகங்கள் / மாவட்ட செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய தங்கள் பிரச்சினைகளை மத்தியஸ்தம் செய்து தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ்" பொது பிரிவு" ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
வாடா மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்பு செயலாளர் விஷேட உரை
பாதுகாப்பு செயலாளரும், உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன...
அனுராதபுரத்தில் படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான நடமாடும் சேவை
முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்ட சமயம் உயிர்நீர்த்த, அங்கவீனமுற்ற மற்றும் ஓய்வுபெற்ற படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கருத்திக்கொண்டு ரணவிரு சேவை அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை மற்றும் உத்தம பூஜா பிரணாம பதக்கம் வழங்கும் நிகழ்வு 2020 ஒக்டோபர் மாதம் 03 திகதி காலை 0800 மணி முதல் மாலை 0500 மணி வரை பாதுகாப்பு செயளாலர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் சாலியபுர கஜபா ரெஜிமன்ட் தலைமையகத்தில் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
உலக சிறுவர் தினம் செரிக் நிலையத்தினால் கொண்டாடப்பட்டது
கொழும்பு நாரஹேன்பிட்டியவிலுள்ள செனஹசே கல்வி வள ஆய்வு மற்றும் தகவல் நிலையத்தில் இன்று (ஒக்டோபர்,1) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் முதல் பெண்மனி அயோம ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி
தேசத்தின் எதிர்காலம் எமது குழந்தைகள் என அதிமேதகு ஜனாதிபதி தனது உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரால் 49 செயற்கை கால்கள் திருகோணமலை சிவிலியன்களுக்கு அன்பளிப்பு
இலங்கை இராணுவத்தின் 221 படைப்பிரிவினால் திருகோணமலை மாவட்டத்தில் தேவையுடைய பொதுமக்களுக்கு 49 செயற்கை கால்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் திருகோணமலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
கடலோர பாதுகாப்பு படையின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள கொமடோர் அனுர ஏக்கநாயக்க பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர், 29) சந்தித்தார்.
கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் பாதுகாப்பு செயளாலருடன் பிரியாவிடைச் சந்திப்பு
பிரியாவிடைபெற்றுச்செல்லும் கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர், 29) சந்தித்தார்.
இளம் ‘கவிஞர்’ செவ்மினி கவ்சல்யா பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
எதிர்வரும் இலங்கை இராணுவத்தின் 71ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கொடுகொட ஸ்ரீ ராஹுல மஹா வித்தியாலய மாணவியான செவ்மினி கவ்சல்யா எழுதிய “கெலே காகி” எனும் சிங்கள கவிதை தொகுப்பு பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) மேஜர் ஜெனரல் கமல் குணரத்தனவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (28) வழங்கிவைத்தார்.
இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க சாரணியம் ஊக்குவிக்கப்படல் வேண்டும் - பாதுகாப்பு செயலாளர்
சாரணியத்தினால் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை உணர்ந்து, இலங்கை சமூகத்தினுள் சாரணியம் உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய யுனிபஃபெல் மாலியில் பரீட்சாத்த நடவடிக்கையில்
இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது நவீன யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் உட்பட ஒரு புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்கள் ஆகியன, மாலி நாட்டில் உள்ள (மினுஸ்மா) ஐக்கிய நாட்டு சமாதான அமைதிகாக்கும் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், அவை அந்நாட்டிலுள்ள கடினமான நிலப்பரப்புகளில் பரீட்சாத்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
ரூ. 21 மில்லியன் பெறுமதியான மஞ்சள் மற்றும் கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கை இராணுவத்தினரால் முறியடிப்பு
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 205 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 104 கிலோகிராம் கேரள கஞ்சா என்பவற்றை இராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர்.
கின் கங்கையின் அடைப்புகள் கடற்படையினரால் நீக்கம்
காலி கின் கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள தொடங்கொடை மற்றும் வக்வெல்ல பாலங்களுக்கு அடியில் தேங்கியுள்ள குப்பைகளினால் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்கும் பணியினை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.