பாதுகாப்பு செய்திகள்
மஹர சிறைச்சாலையில் நேற்று 2020 நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலைமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் நேற்று 2020 நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலைமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நாட்டில் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளான 13,594 பேர் குணமடைவு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 496 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 23,483ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம்
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் இலங்கையின் தலைமையில் இடம்பெற்றது. கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முதலாவது சந்திப்புக் கூட்டம் 2011ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் முன் முயற்சியினால் இடம்பெற்றது. தொடர்ச்சியான முறையில் வெற்றிகரமாக இடம்பெற்று வந்த இந்த கூட்டம், இறுதியாக ஆறு வருடங்களுக்கு முன் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றது.
கடத்தலுக்கு தயாராக இருந்த உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
புத்தளம் குதிரை முனை கடற்பரப்பில் சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சளினை கடத்த முற்பட்ட ஐந்து இந்திய பிரஜைகள் சந்தேகத்தின் பேரில் கைது கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களிடமிருந்து 1372 கிலோ 300 கிராம் உலர்ந்த மஞ்சளும் கைப்பற்றப்பட்டது.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 430 பேர் குணமடைவு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 487 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22,988 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இணைந்த ஊடக அறிக்கை
இலங்கை, இந்திய மற்றும் மாலைத்தீவுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம், கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (28, நவம்பர்) நடைபெற்றது. இதன்போது குறித்த நாடுகள் வெளியிட்ட இணைந்த ஊடக அறிக்கை பின்வருமாறு.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் ஆரம்பம்
இலங்கை, இந்திய மற்றும் மாலைத்தீவுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் சற்று முன் கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமானது.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 410 பேர் குணமடைவு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 473 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22,500 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (27) சந்தித்தார்.
மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு
இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.
மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கொழும்பு வருகை
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் பொருட்டு மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி இன்றைய தினம் கொழும்புக்கு வந்தடைந்தார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வருகை
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.
35வது பொலிஸ் மா அதிபராக சந்தன விக்ரமசிங்க நியமனம்
பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சந்தன விக்ரமசிங்க 35வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளர். அவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
வடமேல் கடற்படை கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது புத்தளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு 1067 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
நாட்டில் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளான 15,815 பேர் குணமடைவு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 559 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22,027 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.