பாதுகாப்பு செய்திகள்
விசேட அறிவித்தல்
எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி தீகவாபி வளாகத்தில் நடைபெறவிருந்த தீகவாபி தூபிக்கான அடிக்கல் நாட்டும் விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது.
அவசர நிலைநிலைமைகளை சமாளிக்க இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் கண்டக்காடு வைத்தியசாலை
அவசர நிலைநிலைமைகள் மேலும் தீவிரமடைந்தால் சுகாதார திணைக்களத்திற்கு வழங்குவதற்காக 400க்கும் அதிகமான படுக்கைகளைக் கொண்ட வைத்தியசாலை ஒன்றை கண்டக்காடு பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுக்காப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் என்னின்னிகை 2342 ஆக உயர்வு
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் புதிதாக தொற்றுக்குள்ளான மேலும் 120பேர் அடையாளங்காணப்பட்டதையடுத்து அந்த கொத்தணியில் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் என்னின்னிகை 2342 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகள் நாளை ஆரம்பம்
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை (ஒக்டோபர், 22) தீகவாபி விகாரையின் பிரதம விகாராதிபதி வண. மஹாஓயா சோபித்த தேரரின் வழிகாட்டுதலுக்கமைய விகாரை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
குளியாப்பிட்டிய உட்பட பல பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குளியாப்பிட்டிய, பண்ணல, கிரிஉல்ல, நாரம்மல , தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
200கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா பறிமுதல்
மன்னார் ஒலுத்துடுவை பகுதியில் இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 200 கிலோ மற்றும் 825 கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
100,000 வேலைவாய்ப்புக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்
ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக குறைந்த வருமானங்ககளைப் பெரும் குடும்பங்களிலிருந்து 34,818 பேர் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரிப்பு
மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,041 ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களும் அவர்களுடன் நேரடி தொடர்பைப் பேணிய 1036 பேரும் அடங்குவதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்
களுத்துறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள மூன்று பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தினால் கடற்படைக்கு 04 பிசிஆர் இயந்திரங்கள்
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை வலுப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு 04 பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களுக்காக 1999 எனும் துரித அழைப்பு தொலைபேசி இலக்கம் சுகாதார அமைச்சினால் அறிமுகம்
கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து தகவல்களையும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் துரித அழைப்பு தொலைபேசி இலக்கமான 1999 ஐ அழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3397 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்ததையடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3397 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள இலங்கை படையினர் APC மற்றும் MPMG ஆயுதங்களுடன் கூட்டுப் பயிற்சி
லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் பணியாற்றும் இலங்கை படையினர் அண்மையில் ‘எக்ஸ்-ஸ்டீல் ஸ்ரோம் - 2020’ எனும் ஐந்து நாட்களை கொண்ட நேருக்கு நேர் துப்பாக்கிச் சூட்டு பயிற்சியில் பங்கேற்றது,
இதுவரை மொத்தம் 373,534 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 110 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,354 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.