பாதுகாப்பு செய்திகள்
மினுவாங்கொடை கொரோனா கொத்தனியில் 16 பேர் குணமடைவு
வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 74 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,244 பதிவாகியுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு சட்டங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை கட்டாயப்படுத்தும் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகள் தொடர்பாக நேற்று நள்ளிரவு (ஒக்.14) முதல் அமுலுக்கு வரும்வகையில் சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்காக அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்
2021ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காணி அபகரிப்புகளை தடுக்க சட்ட நடவடிக்கைகள் - பாதுகாப்புச் செயலாளர்
எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நிலைமைகள்; 9,974 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு
நேற்றைய தினம் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது.
சிறைச்சாலைகளில் நெரிசலை குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே பாதுகாப்பு செயலாளரை இன்று சந்தித்தார்.
பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இன்று காலை 5.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அவசர நிலைமைகளுக்காக 100 படுக்கைகளுடன் தயாரான நிலையில் வடக்கு இராணுவ வைத்தியசாலை
அவசர நிலைமைகள் ஏற்படுமாயின் அவற்றை எதிர் கொள்ளத் தக்க வகையில் நூறு படுக்கைகளுடன் இராணுவ வைத்திய சாலை தயார் படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தொழிற்சாலை உரிமையாளர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்
அனைத்து ஆடை தொழிற்சாலை உரிமையாளர்களும், நிறுவன நிர்வாக பிரதிநிதிகளும் தங்கள் ஊழியர்கள் மூலம் சமூகத்தில் வெளி நபர்களுக்கு தொற்று தொற்று ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நிலைமைகள்; 6,190 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது 194 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,038 பதிவாகியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் சுனாமி ஒத்திகை நிகழ்வு
28 நாடுகளின் தொழில்நுட்ப பங்களிப்புடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இன்றைய தினம் (ஒக்டோபர். 13) பிராந்திய சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டின் சில பாகங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.