பாதுகாப்பு செய்திகள்
ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கம்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (ஜூன், 28) முதல் அமுலுக்கு வரும் வகையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துபாய் மற்றும் பெலாரஸ் நாடுகளிலிருந்து இலங்கையர்கள் தாயகம் வருகை
துபாய் மற்றும் பெலாரஸ் நாடுகளிலிருந்து இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 226 மற்றும் UL 1206 விமானங்கள் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜனித் விதாரண தெரிவித்தார்.
10 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 10 கிலோ கஞ்சாவை எடுத்துச்செல்லும் போது கைதுசெய்யப்பட்டார்.
சிகிச்சையின் பின் பூரணமாக குனமடைதோரின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1,619பேர் சிகிச்சையின் பின் பூரணமாக குனமடைத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பங்ளாதேஷிலிருந்து 230 இலங்கையர்கள் தாயகம் வருகை
பங்ளாதேஷ் நாட்டில் இருந்த சுமார் 230 இலங்கையர்கள் இன்று மாலை (26) தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL1190 எனும் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கடமைக்கப்பால் தம் திறமையை வெளிக்காட்டிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணப்பரிசு
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன கடமை நேரத்தில் தமது திறமையை சிறப்பாக செயல்படுத்திய நான்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவிலியன் ஒருவருக்கும் பணப்பரிசு உட்பட பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்.
இலங்கையில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதாக பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு
ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் என்பவற்றினூடாக பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்படும் மற்றும் உதவி புரியும் சிறைச்சாலை, சட்ட அமலாக்க மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
171 இலங்கையர்கள் லெபனானிலிருந்து தாயகம் வருகை
லெபனான் பேரூட்நகரிலிருந்து 171 இலங்கையர்கள் இன்றைய (26) தினம் தாயகம் திரும்பியுள்ளனர்.
கொழும்பில் கப்பம் கோரிய ஐவர் கைது
கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் கப்பம்கோரல் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த ஐவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்த சந்தேக நபர் கைது
பூகொடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குறுந்தூர துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த 41 வயது சந்தேகநபர் ஒருவரை பூகொடை போலீசார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 26) ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாதாள உலக போதைப்பொருள் வியாபாரி பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி
பாதாள உலக போதைபொருள் வியாபாரியான ரன்கொத் படிகே சஞ்சீவ சம்பத் என அழைக்கப்படும் கெடவளபிட்டிய சம்பத் கம்பஹா பகுதியில் பொலீஸார் இன்று காலை (ஜூன் 26) மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.
மக்கள் நலன் கருதி கடற்படையினரால் நடமாடும் பற்சிகிச்சை பிரிவி ஆரம்பிப்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டீ சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படை உயர்தரம் வாய்ந்த நடமாடும் பற்சிகிச்சை பிரிவி ஒன்றை வைபவரீதியாக இன்று (ஜூன், 25) ஆரம்பித்துள்ளது.
சீ எஸ் டீ கைவிடப்பட்ட 500 வீடுகளை தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றியமைப்பு
சிவில் பாதுகாப்பு திணைக்களம் அம்பாறை தீகவாபிய பிரதேசத்தில் கைவிடப்பட்ட 500 வீடுகளை புதிய தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றும் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக அதன் ஊடக பணிப்பாளர் கேணல். நிலந்த ரத்னசிங்ஹ இன்று (ஜூன் 25) தெரிவித்தார்.
ரணவிரு சேவா அதிகாரசபை படை வீரரின் மகனுக்கு கிரிக்கட் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
நாட்டுக்காக தனதுயிரை தியாகம் செய்த படை வீரரின் மகனுடைய விளையாட்டு திறமைகளை மேலும் ஆர்வமூட்டும் வகையில் ஒரு தொகை கிரிக்கட் விளையாட்டு உபகரணங்களை ரணவிரு சேவா அதிகாரசபை அன்பளிப்பு செய்துள்ளது.
பிரதம சிறைச்சாலை அதிகாரிகள் ஆறுபேர் புதிதாக நியமனம் பெற்ற அதேவேளை , 19 அதிகாரிகளுக்கு இடமாற்றம்
சிறைச்சாலை சேவைகளின் தேவைகருதி உடனடியாக செயற்படும் வண்ணம் 19 சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதேவேளை, பிரதம சிறைச்சாலை அதிகாரிகள் ஆறுபேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8,400 க்கும் அதிகமன சந்தேகநபர்கள் கைது
இம்மாதம் (ஜூன்) 06ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாற்றுடன் தொடர்புடைய சுமார் 8,400 க்கும் அதிகமன சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை காகித ஆளையை மீளமைக்க கடற்படை ஒத்துழைப்பு
அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமைய இலங்கை கடற்படை மட்டக்களப்பில் அமைந்துள்ள வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை தொர்டந்தும் வழங்குவதுடன் அதன் பெருமையை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க உள்ளதாகவு கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.
154 இலங்கையர்கள் லண்டனிலிருந்து தாயகம் வருகை
லண்டனிலிருந்து 154 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் யூ எல் 504 இலக்க இலங்கை எயாலைன்ஸ் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் ஜனித் விதானபத்திறன தெரிவித்தார்.