பாதுகாப்பு செய்திகள்
மன்னார் கடற்பரப்பினூடாக இடம்பெற்ற மஞ்சள் கடத்தல் முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு
மன்னார் வடக்கு கடற்பரப்பினூடாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய 17 சாக்குப் பைகளில் பொதி செய்யப்பட்ட உலர் மஞ்சளினையும் அதனை நாட்டுக்குள் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட டிங்கி படகினையும் கடற் படையினர் கைப்பற்றினர்.
வீதி ஒழுங்கை சட்டத்தினை அமுல்படுத்த விமானப்படையின் ட்ரோன் கருவிகள் பொலிஸாருக்கு உதவி
கொழும்பு புறநகர் பகுதிகளில் நேற்றைய தினம் முதல் (15) அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டத்திற்கேற்ப வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க பொலிஸாருக்கு உதவும் வகையில் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம் விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ராஜகிரிய, நுகேகொடை, பொரல்லை, காலி வீதி ஆகிய பிரதான வீதிகளில் விமானப் படையினரின் ட்ரோன் கருவிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பட்டதாரிகளை ஒருநிலைப்படுத்தும் பயிற்சி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக இராணுவ தளபதி மதிப்பீடு
நாடு முழுவதிலும் உள்ள 51 இராணுவ பயிற்சி மையங்களில் திங்கட்கிழமை ஆரம்பமான பட்டதாரிகளை ஒருநிலைப்படுத்தும் பயிற்சித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பனாகொடை இராணுவ வளாகத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி மையத்திற்கு நேற்றைய தினம் (15) விஜயமொன்றை மேற்கொண்டார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கஞ்சா மற்றும் மஞ்சள் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது
புதுக்குடியிருப்பு, உயிலங்குளம் பகுதியில் கேரள கஞ்சா மற்றும் உலர் மஞ்சள் என்பவற்றை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல முற்பட்ட நால்வரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் இருந்து லொரி மற்றும் உழவு இயந்திரம் என்பவற்றின் மூலம் கொண்டு செல்லப்படவிருந்த 52 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா மற்றும் 920 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் என்பன விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடினமான காலங்களில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாகிஸ்தான் பாராட்டு
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மத் ஸப்தார் கான் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர்,15) சந்தித்தார்.
சேதமடைந்த கப்பல் தொடர்பில் கடல்சார் பங்குதாரர்கள் தமது கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
சேதமடைந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் தொடர்பாக தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து கடல்சார் பங்குதாரர்களுக்கும் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக இன்று (14) இடம்பெற்ற கடல்சார் பங்குதாரர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் (MEPA) தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 13 ஆக பதிவு
வெளிநாட்டில் இருந்து வருகைதந்த இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக சிலாபம் தள வைத்தியசாலையில் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
பொலிஸாாினால் நாளை முதல் வீதி ஒழுங்கு அமுலில்
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டம் நாளை (14) முதல் மேல் மாகாணத்தில் அமுல்படுத்துவதற்கு, பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
2,996 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
இறுதியாக 13 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து,
திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு அரசு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்கிறது
திட்டமிட்ட குற்றச்செய்லகளை தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பான தேசம் மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் அரசின் தூரநோக்கு கொள்கையில் இதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (செப்டம்பர் , 11) சந்தித்தார்.
ஒருங்கிணைந்த அரச பொறிமுறை இன்றியமையாததாக காணப்படுகிறது - பாதுகாப்பு செயலாளர்
ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பொது நிர்வாகம், திட்டமிடல் சேவைகள், கணக்கியல் சேவை, முப்படைகள், பொலிஸ், சிறைச்சாலைகள், சுங்கத் திணைகளங்கள் என்பன ஒரு தனித்துவமான அரச நிர்வாக பொறிமுறை அமைப்பின் பிரகாரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என பாதுகாப
கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை எம் ரீ நியூ டயமன் கப்பலின் நிலைமை குறித்து ஆராய்வு
இலங்கை கடற்படையினருடன் இணைந்து அதன் மீட்பு நடவடிக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு சுழியோடல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி தர்ஷனி லஹண்டபுற இன்று (11) தெரிவித்தார்.
லான்ஸ் கோப்ரல் அபேகோன் தெற்காசிய போட்டியில் சாதனை
ஜேர்மன் நாட்டின் டிசாசு நகரில் இம்மாதம் (செப்டம்பர்) 8ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச தடகள போட்டியில் இலங்கை இராணுவ வீரரான லான்ஸ் கோப்ரல் யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியினை 10.16 செக்கன் வேகத்தில் ஓடி முடித்து தேசிய ரீதியில் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் -கடற்படை தெரிவிப்பு
நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் கல்முனை துறையில் இருந்து 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இழுத்துச்செள்ளப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா இன்று (10) தெரிவித்துள்ளார்.