பாதுகாப்பு செய்திகள்
சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் கடத்தல் நடவடிக்கை கடற்படையினரால் முறியடிப்பு
கடல்மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் 6,381 கிலோ மஞ்சளினை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்த 13 சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
பருத்தித்துறையில் 275கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
பருத்தித்துறை கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 275 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது.
தொல்பொருட்களை திருட மேற்கொண்ட முயற்சி பொலிசாரினால் முறியடிப்பு
ஹாலி-எல, உடுவர பிரதேசத்தில் தொல் பொருட்களை தோண்டி எடுப்பதற்கு முயற்சித்த ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். ஹாலி-எல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு அமைச்சு
பாதுகாப்பு அமைச்சினை தனது பொறுப்பின் கீழ் வைத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினை இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முப்பத்தைந்து அரச நிறுவனங்கள்
முப்பத்தைந்து அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
மெளஸாகல மண்சரிவினால் ஏற்பட்ட போக்குவத்து தடைகளை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர்
நுவரெலிய,மெளஸாகல, மோகினி எல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட போக்குவரத்து தடைகளை அகற்றும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் 19 வது தேசிய பாதுகாப்பு படைப் பிரிவு வீரர்கள் ஈடுபட்டனர்.
பேஸ்புக் விருந்துபசாரம்: 20 இளைஞர்கள் கைது
பேஸ்புக் நண்பர்களின் விருந்துபசார நிகழ்வு ஒன்றில் போதைப்பொருள் பாவித்ததன் பேரில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 20 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2, 579 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2,579 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையின் 13 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு
முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை களணி ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வைபவத்தின்போது, இலங்கையின் 13வது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக பனாம பிரதேசத்தில் உள்ள புராண போதிருக்காராம விஹாரையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
வெலிகடை சிறைச்சாலையில் விரைவில் 15 அடி உயரமுள்ள புதிய வேலி
வெலிகடை சிறைச்சாலையில் 15 அடி உயரமுள்ள புதிய பாதுகாப்பு வேலி அமைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
லெப்டினென்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் 28 வது ஆண்டு நினைவுதினம்:
இலங்கையர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் மாபெரும் ஒரு வீரனாக இலங்கையின் வரலாற்று ஏடுகளில் பொன்னான எழுத்துக்களில் எழுதப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, 28 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் (ஆகஸ்ட், 08) வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
பெய்ரூட் வெடிப்பு சம்பவம் காரணமாக காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மிதக்கும் சேதக்கட்டுப்பாட்டு மாதிரி அமைப்பு கடற்படையினரால் அறிமுகம்
திருகோணமலை கடற்படைத் தளத்தில் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக அதிவேக தாக்குதல் படகிற்கான சேதங்களை பழுது பார்க்கும் புதிய வடிவிலான சேதகட்டுப்பாட்டு தளம் ஒன்றினை இலங்கை கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது.