பாதுகாப்பு செய்திகள்
வைரஸ் தொற்றிலிருந்து 420 கடற்படை வீரர்கள் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 420ஆக உயர்வடைந்துள்ளது.
11,709 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்தனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மேலும் இருவர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய இதுவரை 11,709 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.
மனநலம் குன்றிய சிறுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை.
அலுத்கம பிரதேசத்தில் அண்மையில் மனநலம் குன்றிய சிறுவன் ஒருவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடுகளில் பணிபுரிவோர் அனைவரும் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் – ஜனாதிபதி உறுதியளிப்பு
வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மன்னாரில் கடற்படையினரால் மீட்பு
மன்னார் அச்சனகுள பிரதேசத்தில் புதரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பான நாட்டுத் துப்பாக்கி ஒன்று இலங்கை கடற்படையினரால் நேற்றய தினம் (ஜூன் 3)மீட்கபட்டுள்ளது.
சொய்சாபுர சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (ஜூன், 04) ஆஜர் படுத்தப்பட்டார்.
'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1,243 மில்லியன்
'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு மக்கள், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நேரடி நன்கொடைகளின் மூலம், ரூ. 1,243 மில்லியனைக் கடந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 424 கடற்படை வீரர்கள் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 424ஆக உயர்வடைந்துள்ளது என கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
செயலணிகள் இரண்டின் தலைவராக பாதுகாப்பு செயலாளர்
ஒழுக்க நெறியுள்ள, குணநலன் கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்துடன் கூடிய பாதுகாப்பான தேசமொன்றை கட்டி எழுப்பும் வகையில் 13 அங்கத்தவர்கள்ளை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சொய்சபுற உணவக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது
ரத்மலானை மற்றும் அங்குலான பகுதிகளில் தலைமறைவாகியிருந்த சொய்சபுற உணவக துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் கல்கிஸ்சை பொலிஸாரினால் கைது நேற்றைய தினம் செய்யப்பட்டனர்.
மாளிகாவத்தை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மற்றுமொரு சந்தேக நபர் கைது
மாளிகாவத்தை லக்செத செவென தொடர்மாடி குடியிருப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் இன்று (ஜூன், 03) மாளிகாவத்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
11,669 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி
முப்படையினரால்நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 11,669 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் தாயகம் வருகை
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூர் நாட்டில லிருந்து நாடு திரும்ப முடியாத நிலையிலிருந்த 291 இலங்கையர்கள் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸிலிருந்து மேலும் பல கடற்படை வீரர்கள் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 418 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக (ஜூன் 3) அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.