பாதுகாப்பு செய்திகள்
பாதாள உலக போதைப்பொருள் வியாபாரி பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி
பாதாள உலக போதைபொருள் வியாபாரியான ரன்கொத் படிகே சஞ்சீவ சம்பத் என அழைக்கப்படும் கெடவளபிட்டிய சம்பத் கம்பஹா பகுதியில் பொலீஸார் இன்று காலை (ஜூன் 26) மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.
மக்கள் நலன் கருதி கடற்படையினரால் நடமாடும் பற்சிகிச்சை பிரிவி ஆரம்பிப்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டீ சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படை உயர்தரம் வாய்ந்த நடமாடும் பற்சிகிச்சை பிரிவி ஒன்றை வைபவரீதியாக இன்று (ஜூன், 25) ஆரம்பித்துள்ளது.
சீ எஸ் டீ கைவிடப்பட்ட 500 வீடுகளை தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றியமைப்பு
சிவில் பாதுகாப்பு திணைக்களம் அம்பாறை தீகவாபிய பிரதேசத்தில் கைவிடப்பட்ட 500 வீடுகளை புதிய தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றும் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக அதன் ஊடக பணிப்பாளர் கேணல். நிலந்த ரத்னசிங்ஹ இன்று (ஜூன் 25) தெரிவித்தார்.
ரணவிரு சேவா அதிகாரசபை படை வீரரின் மகனுக்கு கிரிக்கட் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
நாட்டுக்காக தனதுயிரை தியாகம் செய்த படை வீரரின் மகனுடைய விளையாட்டு திறமைகளை மேலும் ஆர்வமூட்டும் வகையில் ஒரு தொகை கிரிக்கட் விளையாட்டு உபகரணங்களை ரணவிரு சேவா அதிகாரசபை அன்பளிப்பு செய்துள்ளது.
பிரதம சிறைச்சாலை அதிகாரிகள் ஆறுபேர் புதிதாக நியமனம் பெற்ற அதேவேளை , 19 அதிகாரிகளுக்கு இடமாற்றம்
சிறைச்சாலை சேவைகளின் தேவைகருதி உடனடியாக செயற்படும் வண்ணம் 19 சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதேவேளை, பிரதம சிறைச்சாலை அதிகாரிகள் ஆறுபேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8,400 க்கும் அதிகமன சந்தேகநபர்கள் கைது
இம்மாதம் (ஜூன்) 06ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாற்றுடன் தொடர்புடைய சுமார் 8,400 க்கும் அதிகமன சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை காகித ஆளையை மீளமைக்க கடற்படை ஒத்துழைப்பு
அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமைய இலங்கை கடற்படை மட்டக்களப்பில் அமைந்துள்ள வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை தொர்டந்தும் வழங்குவதுடன் அதன் பெருமையை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க உள்ளதாகவு கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.
154 இலங்கையர்கள் லண்டனிலிருந்து தாயகம் வருகை
லண்டனிலிருந்து 154 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் யூ எல் 504 இலக்க இலங்கை எயாலைன்ஸ் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் ஜனித் விதானபத்திறன தெரிவித்தார்.
இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிப்பு
யாழ் பாதுகாப்பு படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு வீடு கோப்பாய் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பத்திடம் நேற்றையதினம் (ஜூன்,23) கையளிக்கப்பட்டது.
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய முக்கியஸ்தர் விஷேட அதிரடிப்படையினரால் கைது
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவர் விஷேட அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன், 23) கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய மூவர் கைது
தெஹிவளை, முகத்துவாரம் மற்றும் முல்லேரியா பகுதிகளில் வெவ்வேறாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது தம்வசம் போதைப்பொருள் வைத்திருந்ததன்பேரில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறுந்தூர துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மல்லாவி பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த சந்தேக நபர் தம்வசம் வைத்திருந்த துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இடுகம கொவிட் – 19 நிதியத்தின் மீதி ரூபா 1, 392 மில்லியனையும் தாண்டுகிறது
'இடுகம' கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு நேற்றுடன் (ஜூன், 23) மீதி 1,392 மில்லியனாக அதிகரித்துள்ளது.
ரணவிரு சேவா அதிகாரசபைக்கு சீன தூதரகத்தினால் 2.7 மில்லியன் ரூபா நிதியுதவி
படை வீரர்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக சீன தூதரகத்தினால் ரணவிரு சேவா அதிகாரசபைக்கு 2.7 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீரவின் வேண்டுகோளுக்கமைய இந்த நிதியுதவி அளிக்கப்பட்டது.
வெலிசர கடற்படை முகாம் 59 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறப்பு
கொரோனா வைரஸ் பரவல் காராணமாக மூடப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் வெலிசர முகாம் 59 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அதன் நடவடிக்கைகளை இன்று (23) ஆரம்பித்துள்ளது.
போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூவர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை, கிண்ணியா மற்றும் தம்பலகமம் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூவர் நேற்றைய தினம் (ஜூன், 22) கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 4.5கிலோ கிராம் எடையுள்ள வெடிமருந்துகளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 4.5கிலோ கிராம் எடையுள்ள டீ என் டீ ரக வெடிமருந்துகளை கடத்திச் செல்ல முற்பட்ட இரு சந்தேகநபர்கள் பளை பொலிஸாரால் நேற்று (ஜூன், 22) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட சந்தேக நபர்கள் இன்று நீதமன்றத்தில் ஆஜர்
யக்கலமுல்ல, வாத்தஹென பகுதியை சேர்ந்த 33 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு குறுந்தூர துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட இருவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக காலி நீதவான் நீதி மன்றத்தில் இன்று (ஜூன் 23) ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.