பாதுகாப்பு செய்திகள்
217 இலங்கையர்கள் அமெரிக்காவிலிருந்து தாயகம் வருகை
அமெரிக்காவிலிருந்து 217 இலங்கையர்கள் இன்றைய தினம் தான் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் எமிரேட்ஸ் ஆன்லைன் விமான சேவைக்குச் சொந்தமான EK 2528 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன்ரம்புக்கனையில் இருவர் கைது
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் 1.527 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது
பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'இந்திர' என அறியப்படும் இந்துனில் குமாரவின் நெருங்கிய சகாக்கள் என நம்பப்படும் மூன்று சந்தேக நபர்களைபொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் விநியோகத்தவர்களுக்கு உதவிய சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
மாத்தறை மற்றும் மகர சிறைச்சாலைகளில் உள்ள போதைப்பொருள் விநியோகஸ்தர்களுடன் தொடர்புகளைப் பேணிய இரு சிறைச்சாலை அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 785 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றுகுள்ளான மேலும் 12 கடற்படை வீரர்கள் குணமடைந்ததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது.
படைவீரரின் ஆயுதத்தை பறிக்க முயன்ற நபர் பலி
யாழ்ப்பாணம், கிளாலி பகுதியில் கடமையிலிருந்த படைவீரரின் ஆயுதத்தை கைப்பற்றி தப்பிச்செல்ல முயற்சித்த நபர் நேற்று மாலை 1.30 மணியளவில் பலியாகியுள்ளார்.
கருணாவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பணிப்புரை.
கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னால் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி யுத்த காலத்தில் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,498 பேர் குனமடைதுள்ள அதேவேளை, 441 தொடர்ந்தும் சிகிச்சையில்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,950ஆக உள்ள நிலையில், இன்று (ஜூன், 22) காலை 6 மணியுடனான கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிதாக எவ்வித கொரோனா நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை.
புதிதக வைரஸ் தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை - கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம்
கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதக வைரஸ் தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 6,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது
பொலிஸ் விஷேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவு ஆகியோரினால் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும்தேடல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது சுமார் 6,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறையிலிருந்தவாறு போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் முன்னெடுப்பு ; மூவர் கைது
நீர்கொழும்பு சிறையிலிருந்தவாறு முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட சந்தேக நபர்களில் கட்டுநாயக்கவைச் சேர்ந்த விமானப்படை வீரர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிசர கடற்படை தளத்தின் செயல்பாடுகள் வழமைக்கு
வெலிசர கடற்படைத் தளம் நாளை (ஜூன் 22) முதல் நாளாந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.
எட்டு அடி உயரமான புத்தர் சிலை முல்கிரிகல ரஜமகா விகாரைக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ - 17 ஹெலிகொப்டர் மூலம் 3.5 டொன் எடைகொண்ட எட்டு அடிகள் உயரமான புத்தர் சிலையானது, வீரகெட்டிய மந்தாதுவ விளையாட்டு மைதானத்திலிருந்து முல்கிரிகல ரஜமகா விகாரைக்கு நேற்றைய தினம் எடுத்துச்செல்லப்பட்டது.
71 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 71 இராணுவ அதிகாரிகளுக்கு இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 335 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
பேரமடு நிலையம், ஈடன் கார்டன் ஹோட்டல் மற்றும் மௌண்ட் லவினிய ஹோட்டல் ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தமது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 335 பேர் இன்றைய தினம் (ஜூன்,20) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை மற்றும் மும்பை நகரிலிருந்து 194 இலங்கையர்கள் தாயகம் வருகை
இந்தியாவின் சென்னை மற்றும் மும்பை நகரில் இருந்து 150 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்கள் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் ஜனித் விதானபதிரன தெரிவித்தார்.
தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது
ராகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட, கொலை மிரட்டல் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்ககளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் வெளிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வடக்கு கடல் பிராந்தியங்களில் 58 கிலோ கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றினர்
யாழ் காரைதீவு கடற்பரப்பில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மெல்போர்னிலிருந்து 98 இலங்கையர்கள் தாயகம் வருகை
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 98 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 605 விமானத்தின் மூலம் மெல்பேர்ன் நகரில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,421ஆக அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 1,421 பேர் சிகிச்கையின் பின் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.