--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தற்போது நாட்டில் நிலவும் பருவமழை மேலும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையானது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் ஃபஹீம்-உல்-அஸீஸ் (ஓய்வு) அவர்கள் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையான விடயம் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்

காலநிலை தொடர்பான அவசரகால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தவதே எமது அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் முதன்மையான விடயமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக தற்போது நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலை மேலும் தொடரும்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பான சம்பவங்களை எதிர்கொள்ளும் வகையில் அனர்த்த முகாமைத்துவ ஏற்பாடுகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இன்று (மே 27) கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்த வருடத்தின் விஷேட வெசாக் கொண்டாட்டங்களில் ஒன்றான ‘தியவன்னா வெசாக் வலயம் 2024’ வெற்றிகரமாக நிறைவடைந்தது

பாதுகாப்பு அமைச்சினால் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024ஆம் ஆண்டுக்கான தியவன்னா வெசாக் வலயம் நிகழ்வுகள் மே 23 முதல் மூன்று நாட்கள் நடைபெற்று நேற்று மாலை (மே 25) நிறைவடைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இவ்வருட தியவன்னா வெசாக் வலயம் 2024யினை பெருமளவிலான மக்கள் கண்டுகளித்தனர்

தியவன்னா வெசாக் வலயம் 2024 இன்று (மே 25) தொடர்ந்து மூன்றாவது நாளாக டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்ல பாதுகாப்பு அமைச்சின் வீதியை உள்ளடக்கி இன்று மாலை ஆரம்பமானது. கடந்த இரண்டு நாட்களாக வெசாக் வலயத்திற்கு பெருமளவான மக்கள் வருகை தந்துள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு நிலையத்தில் இன்று (மே 24) விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளரினால் தியவன்னா வெசாக் வலயம் 2024 திறந்து வைப்பு

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் திரு.சுதர்ஷன குணவர்தன ஆகியோரினால் இன்று (மே 23) மாலை 'தியவன்னா வெசாக் வலயம் 2024' ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'புத்த ரஷ்மி' வெசாக் பண்டிகையை ஒட்டி இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெசாக் தின செய்தி

வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் புதிய தலைமையக கட்டிடத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க திறந்து வைத்தார்

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலைமையக கட்டிடம் இன்று (மே 22) பத்தரமுல்ல அக்குரேகொடவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2024 புத்தரஷ்மி வெசாக் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு தியான நிகழ்ச்சி நடைபெற்றது

'புத்தரஷ்மி வெசாக் விழா 2024' முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு தியான நிகழ்ச்சி ஒன்று இன்று (மே 22) நடத்தப்பட்டது. அமைச்சின் நிர்வாகப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த சமய நிகழ்வு இடம்பெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஈட்டி எறிதலில் இலங்கை இராணுவ வீரர் உலக சாதனை படைத்தார்

ஜப்பானின் கோபி நகரில் நடைபெற்றுவரும்  பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பங்கேற்கும் இலங்கை இராணுவ வாரண்ட் அதிகாரி II K.A சமித துலான் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஓய்வுபெற்ற படைவீரர்கள் அரச வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்

எமது தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடி உயிர் தியாகம் செய்த ஆயுதப்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும், ஓய்வுபெற்ற பாதுகாப்பு ப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அரச மருத்துவமனைகளில் இருந்து சுகாதார வசதிகளைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிகிறது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

15ஆவது தேசிய போர்வீரர் ஞாபகார்த்த தின நிகழ்வு
பிரதமரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது

தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் 15வது தேசிய போர்வீரர் ஞாபகார்த்த தின பிரதான நிகழ்வு இன்று (மே 19)இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கெளரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் தூபிக்கு அருகில் நடைபெற்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் தென்னகோன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றார்

இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரும் உலக சமாதான தூதுவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (மே 18) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.