பாதுகாப்பு செய்திகள்
பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பக்மஹ உலேல’ புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (19) நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவில் கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்கும் வைகயில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் (RO) ஆலை ஒன்றை நிறுவியது
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது சமூக சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், சீகிரியா, அலகொலவெவ கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அலகொலவெவ ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்கும் ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் (RO) ஆலையை சமீபத்தில் நிறுவியது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பங்கேற்பு
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு அதன் பணிகளை ஆரம்பித்தது.
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைச் சந்தித்தார்
இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (ஏப்ரல் 12) சந்தித்தார்.
தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ஆம் ஆண்டுக்கான போட்டியில் இலங்கை விமானப்படை வில்வித்தை வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றனர்
அண்மையில் நடைபெற்ற 21வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ஆம் ஆண்டுக்கான போட்டியில் இலங்கை விமானப்படையின் பெண்கள் வில்வித்தை வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகஸ்தோட்டை மோட்டார் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் பதக்கங்கள் பெற்றனர்
அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மகஸ்தோட்டை மோட்டார் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதிப்படுத்திய மோட்டார் சைக்கிள் போட்டியாளர்கள் பல பதக்கங்களை வென்றெடுத்தனர்.
இலங்கைக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதுடன் பல மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுகின்றது
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது சிவில் பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல் 11) இடம்பெற்றது.
இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய
குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பு
யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இலங்கை இராணுவ துருப்புக்கள் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் துன்னாலை மற்றும் கட்டுடை ஆகிய இடங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துள்ளது.
சேவா வனிதா பிரிவினால் பாதுகாப்பு அமைச்சில்
“அவுருது பொல” விற்பனை கூடங்கள்
எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” புதுவருட சந்தை இன்று (ஏப்ரல், 10) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட சந்தையினை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று காலை வைபவரீதியாக திறந்துவைத்தார்.
தேசிய அபிவிருத்திக்காக நாட்டு மக்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வேண்டுகோள் விடுத்தார்
நாட்டின் அண்மைய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்த சிறந்த பொருளாதார முயற்சியின் பலன்களை நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இந்திய கடற்படை கப்பலை பார்வையிட்டார்
கொழும்பு துறைமுகத்தில் நடைபெறும் SLINEX-23 கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் 'ஐஎன்எஸ் கில்தான்' என்ற இந்திய கடற்படைக் கப்பலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் இன்று (ஏப்ரல் 05) பார்வையிட்டார்.
ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன (ஓய்வு) சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் (CSD) புதிய மேலதிக பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை - இந்திய கடற்படை பயிற்சி (SLINEX – 23) கொழும்பில் ஆரம்பம்
இலங்கை-இந்திய கடற்படை பயிற்சி (SLINEX)-23 இன் துறைமுக கட்டம் திங்கள் (ஏப்ரல் 3) தொடக்கம் (ஏப்ரல் 5) புதன் வரை கொழும்பு துறைமுகத்தில் நடைபெற உள்ளது. இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்களான 'ஐஎன்எஸ் கில்தான்' (INS Kiltan) மற்றும் 'ஐஎன்எஸ் சாவித்ரி' (INS Savitri) ஆகியவை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை (SLN) ஊடகம் தெரிவித்துள்ளது.
முப்படையின் அணிநடை பயிற்றுவிப்பாளர்கள்
இங்கிலாந்து நிபுணர்களுடன் அறிவைப் புதுப்பிப்பு
முப்படைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 அணிநடை பயிற்றுவிப்பாளர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் மார்ச் 20 முதல் 30 வரை பத்து நாள் கொண்ட அடிப்படை அணிநடை பயிற்றுவிப்பாளர் புத்துணர்ச்சி பாடநெறி சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தின் நிபுணர்களின் உதவியிடன் நடைபெற்றது.