பாதுகாப்பு செய்திகள்
கடும் மழை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கொழும்பு அவசர செயற்பாட்டு மையத்தில் விசேட கலந்துரையாடல்
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்பான அவசரகால நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தனர்.
இலங்கை உயர் மட்டத்தை நோக்கிய நம்பிக்கையான பயணத்தில் உள்ளது - பாதுகாப்பு செயலாளர்
இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் எமது ஆயுதப் படைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்த நாட்டின் வரலாற்றில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நீடித்த கொடூரமான பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டத்தில், வெற்றிகரமான இராணுவத் தலைமைகளிலும் சில சமயங்களில் போர்க்களத்தில் பலவீனமான சூழ்நிலைகளிலும் பல அனுபவங்களை பெற்றுள்ளோம்.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.
73வது 'கடற்படை தினத்தை' கொண்டாடும் இலங்கை கடற்படையினருக்கு வாழ்த்துகள்
இலங்கை கடற்படை தனது 73வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது. நாட்டின் முதல் தற்காப்பு வரிசையாக அறியப்படும் இலங்கை கடற்படையானது, சமாதானத்தின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதில் இன்றியமையாத பங்கை ஆற்றியுள்ளது.
நாட்டின் இளைஞர்களை இணையத் தீவிரமயமாக்களிலிருந்து பாதுகாக்க ஒன்றுபட்ட முயற்சி தேவை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன்
தெற்காசிய பிராந்தியத்தில் இளைஞர்களின் இணையத்தள தீவிரமயமாக்கல் என்பது ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ளது. முறையான கல்வி, ஒத்துழைப்பு, சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் மேம்படுத்துவதன் மூலம், தீவிரவாத சிந்தனைகளை எதிர்க்க நமது இளைஞர்களை வலுப்படுத்த முடிவதுடன் பிராந்தியத்தில் அமைதியும் இணக்கப்பாடும் நிலவ வழிகோலும்.
ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான உறுதிமொழிகளை
இலங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது
அக்ரா கானாவின் '2023 ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் அமைச்சர்கள்' கூட்டம் 2023 டிசம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறப்புப் பிரதிநிதி/விசேட தூதுவர் கௌரவ ரோஹித போகொல்லாகம ஆகியோர் கலந்துகொண்டு, ஐ.நாடு அமைதி காக்கும் பணியில் இலங்கையின் கூட்டு அர்ப்பணிப்பு, இலங்கையின் நாட்டு அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான உறுதிமொழிகளை வழங்கினர்.
மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் சரிம் அஸீஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 07) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இராணுவத்தினரால் வடக்கில் சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
இலங்கை இராணுவத்தின் யாழ். 4வது இலங்கை இராணுவ மருத்துவப் படையனியின் 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் முகாம் வளாகத்தில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர்.
இலங்கைக்கான செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி செவரீன் ஷப்பாஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து கொழும்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது
மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து 13 மாவட்டங்களை உள்ளடக்கிய 39 பிரதேச செயலாளர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டமொன்று தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் ஏற்பாட்டில் நேற்று (டிசம்பர் 04) கொழும்பு ரமடா ஹோட்டலில் ஆரம்பமானது.
இலங்கையின் இளம் வீரர்களை கௌரவிக்கும் வகையில் 'தேசிய இளைஞர் வீரர்கள் விருது'தேசிய மாணவர் படையணியின் ஊடாக வழங்கப்படவுள்ளது
– பதில் பாதுகாப்பு அமைச்சர்
இலங்கையின் வளர்ந்து வரும் இளம் வீரர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய மாணவர் படையணியின் (NCC) மூலம் 'தேசிய இளைஞர் வீரர்கள் விருது' அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
9 வது மித்ர சக்தி பயிற்சி புனேவில் ஆரம்பம்
இந்திய இராணுவத்தின் 120 படையினர், இலங்கை இராணுவத்தின் 123 படையினர், இந்திய விமானப்படையின் 15 படையினர், இலங்கை விமானப்படையின் 05 படையினர் இணைந்த கூட்டு இராணுவப் பயிற்சியான 9வது 'மித்ர சக்தி-2023' புனேவில் உள்ள அவுந்த் நகரில் வியாழக்கிழமை (நவம்பர் 16) ஆரம்பமானது.
மத்திய பாதுகாப்பு படையினரால் ஓயியவில் ரயில் பாதை சீரமைப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காலை கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் மலையக ரயில் பாதை ஓயியவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் மண் சரிவு காரணமாக தடைப்பட்டது.
மலையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும்
நிலவும் மழையுடனான வானிலை இன்று (நவ. 27) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை அவதானிப்பு நிலையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா - 2022/2023 சம்பிரதாயபூர்வமாக நிறைவடைந்தது
"விளையாட்டு மக்களின் தேசியம், மதம் அல்லது நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைக்கிறது" என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.