பாதுகாப்பு செய்திகள்
ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம்
ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம் எனவும், ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியினால் தளபதிகளுக்கான
தெற்காசிய சர்வதேச மாநாடு - 2023
ஐக்கிய இராச்சியத்தின் கூட்டுப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியுடன் இணைந்து சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியினால் பெப்ரவரி 14-15 திகதிகளில் இரண்டாவது ‘தெற்காசிய சர்வதேச தளபதிகள் மாநாடு’ நடாத்தப்பட்டது. பல்வேறு துறைகளில் தொழில்முறை இராணுவக் கல்வியின் தற்போதைய சூழல்கள் மற்றும் எதிர்காலம் என்பன பற்றிய ஒரு தனித்துவமான இங்கு கலந்துரையாடல் இடம்பெற்றது.
சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் வருடாந்த ஓட்டம் - 2023
பாதுகாப்புச் செயலர் கலந்து கொண்டார்
இலங்கை விமானப்படையால் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM) தின ஓட்டம் இன்று (பிப்ரவரி 18) காலை கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் போர்வீரர் நினைவுத் தூபியை
பிரதமர் திறந்து வைத்தார்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போர்வீரர் நினைவுத் தூபியை கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (பிப்ரவரி 17) திறந்து வைத்தார்.
ரக்னா ஆரக்ஷக லங்கா நிறுவனத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (பெப்ரவரி 17) பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள வரையறுக்கப்பட்ட ரக்னா ஆரக்ஷக லங்கா நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.
அமெரிக்கா உதவிப் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை சந்தித்தார்
இந்து- பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி றொயல் தலைமையிலான தூதுக்குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று (பெப்ரவரி 16) இருவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தனர்.
சிறந்த கடற்படைக் கப்பலாக ‘சிந்துரல’ தெரிவு செய்யப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையின் வருடாந்த சிறந்த கப்பல் போட்டியில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் ‘சிந்துரல’ தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களுக்கு இராணுவத்தின்
ஏற்பாட்டில் கடற்கரை கரப்பந்து பயிற்சி
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் (SLA) படையினர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி - கிழக்கில் உள்ள இளைஞர்களுக்காக அண்மையில் தலைடி கடற்கரையில் கடற்கரை கரப்பந்து பயிற்சியை நடத்தினர்.
4வது சிஐஎஸ்எம் (CISM) சர்வதேச இராணுவ கடற்கரை கரப்பந்து விளையாட்டுச் சாம்பியன் 2023 கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் ஆரம்பமானது
சர்வதேச நாடுகளின் இராணுவ வீரர்கள் பங்குபற்றும் 4வது சிஐஎஸ்எம் (CISM) சர்வதேச இராணுவ கடற்கரை கரப்பந்து விளையாட்டுச் சாம்பியன் 2023 சுற்றுப்போட்டி கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை உடற்பயிற்சி கூட வளாகத்தில் இன்று (12 பெப்ரவரி 2023) சம்பிரதாயபூர்வமாக இலங்கை விமானப்படையின் பிரதித் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கட்டானவில் ஏட்பட்ட தீயை அணைக்க விமானப்படை உதவி
கட்டானாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று (பெப்ரவரி 12) ஏற்பட்ட தீயை கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின் இலங்கை விமானப்படை தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்.
சட்டவிரோதமாக சுறா மீன் மற்றும் துடுப்புகளை வைத்திருந்த நபர் கரையோர பாதுகாப்பு படையினரால் கைது
இலங்கை கரையோர பாதுகாப்பு படையினர் நேற்று (12) டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட சுறா மீன் மற்றும் துடுப்புகளை வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள இராணுவப் பண்ணைகளில் மரக்கறிகள் மற்றும் நெல் அறுவடை
இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் நாடு முழுவதும் உள்ள இராணுவப் விவசாய பண்ணைகளில் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல மாதங்களுக்கு முன்னர் அந்தந்தப் பண்ணைகளில் பயிரிடப்பட்ட பெரும்போக நெல் அறுவடை மற்றும் பருவகால மரக்கறிகளை அறுவடைசெய்யும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோத ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க விஷேட காலஅவகாசம் அறிவிப்பு
பாதுகாப்பு அமைச்சின் எழுத்துமூல அனுமதிப்பத்திரமின்றி தன்வசம் வைத்திருக்கும் அனைத்துவிதமான சட்டவிரோத ஆயுதங்களையும் அரசிடம் ஒப்படைப்பதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தொடர்ச்சியான பயிற்சி உதவிகளை வழங்க பாகிஸ்தான் இராணுவ கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி உறுதி
இலங்கையின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என பாக்கிஸ்தான் கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, NI (M) உறுதியளித்துள்ளார்.
இராணுவத்தினரால் வறிய மாணவர்களுக்கு நிவாரண உதவிகள்
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினரால் வட பிராந்தியத்தில் உள்ள உடையார் கட்டில் உள்ள மாணவர்களுக்கு புதிய காலணிகள் அண்மையில் (பெப்ரவரி 05) வழங்கப்பட்டது.
அத்தனகலு ஓயாவில் ஏற்பட்ட அடைப்பு இராணுவ உதவியுடன் நீக்கப்பட்டது
அத்தனகல்ல பிரதேச செயலக அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இலங்கை இராணுவத்தினர் வடிகால் நீரின் அடைப்பை நீக்குவதற்கு தங்களின் உதவியை வழங்கினர். மரக்கிளைகள், இலைகளை நீக்கி மங்கலதிரிய பிரதேசத்தில் இருந்து மண் மேடுகளை கொண்டுவந்து அத்தனகல ஓயவின் அணைக்கட்டின் அடைப்பை நீக்கும் பணிகளை மேற்க்கொண்டனர்.
பாதுகாப்பு தொடர்பான புதிய முன்னேற்றங்களை அடையாளம் காண தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் களம் அமைத்துள்ளது - பாதுகாப்பு செயலாளர்
ஆய்வு, கல்வி மற்றும் வலையமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதன் மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையின் தேசிய பாதுகாப்பு சிந்தனைக் குழுவாக தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) நடத்திய ஆய்வுகள் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு கற்கைகள் இலங்கை அரசாங்கத்திற்கான தேசிய பாதுகாப்பு அணுகுமுறைகளை உருவாக்குவதில் சமீபத்திய பாதுகாப்பு முன்னேற்றங்களை அடையாளம்காண வழிவகுத்துள்ளது.