பாதுகாப்பு செய்திகள்
5வது படைக்குழு அமைதி காக்கும் பணிக்காக மாலிக்கு
மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் மினுஸ்மா பணிகளில் பணியாற்றுவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 5 வது இலங்கை அமைதிகாக்கும் படைக்குழுவில் 243 இராணுவ வீரர்களில் 170 போர் கொண்ட குழு முதல் கட்டமாக சனிக்கிழமை (ஜூலை 01) மாலை மாலிக்கு புறப்பட்டு சென்றனர்.
இலங்கை விமானப்படை தளபதிக்கு பதவி உயர்வு
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களுக்கு "எயார் சீப் மார்ஷல் " எனும் பதவி உயர்வு 2023 ஜூன் 29ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
தனது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை வழியனுப்பு வைக்கும் முகமாக இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ.பிரமீத பண்டார தென்னக்கூன் அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 2023 ஜூன் 26ம் திகதி அமைச்சராகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கை விமானப்படையில் 38 வருட சேவையை நிறைவு செய்த விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பத்திரனவின் ஓய்வு நாளை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற நினைவு நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மூன்று தசாப்தங்களாக நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மனிதாபிமான நடவடிக்கைக்கு விமானப்படைக்கு தலைமை தாங்கி, நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்புவதில் எயார் மார்ஷல் பத்திரன சிறப்பாக செயற்பட்டார் என்று மேலும் தெரிவித்தார்.
தேசிய தொழில் கண்காட்சி நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (ஜூன் 25) கலந்து கொண்டார்.
தேசிய அவசரகால செயல்பாட்டுத் திட்டத்தை அபிவிருத்தி செய்யும் நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பங்குதாரர்களுடன் சந்திப்பு
2023-2028 ஆம் ஆண்டுக்கான தேசிய அவசரகால செயற்பாட்டுத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான செயலமர்வு இன்று (ஜூன் 23) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது எதிர்கால உயர் கல்வியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக விளங்குகிறது
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அதன் தொடக்கத்தில் இருந்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக மாறியுள்ளதுடன், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றுள்ளது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் பாதுகாப்பு கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் அவர்கள் இன்று (ஜூன் 22) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற குடும்பத்திற்கு இலங்கை
இராணுவத்தினால் புதிய வீடு அன்பளிப்பு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடைக்காடு பகுதியில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலங்கை இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு வீடு அண்மையில் (ஜூன் 18) பயனாளி குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது.
பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான 'Dupu de Lôme' கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான 'Dupu de Lôme' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று (ஜூன் 21) காலை வந்தடைந்தது.
சர்வதேச யோகா தினம் - 2023
யோகாவின் மூலம் கிடைக்கும் பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை மேம்படுத்தவும் இது ஒரு தளமாக செயல்படுகிறது.
இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் கொதாரி கட்சுகி அவர்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார். கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை பாதுகாப்பு படை குழு லெபனானில் ‘ஸ்டீல் ஸ்ரொம் I - 2023’ பயிற்சியில்
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைப் பிரிவுகள் மற்றும் லெபனான் ஆயுதப் படைகள் ஆகியன இருவருடத்துக்கு ஒருமுறை நடத்தப்படும் ஸ்டீல் ஸ்ரொம் பயிற்சி I – 2023 லெபனானில் உள்ள சவுத் நகோரா முகாமின் துப்பாக்கிச் சூட்டு பயிற்சி நிலையத்தில் ஜூன் 05-09 வரை ஐநா வழிகாட்டுதல்களுக்கு அமைய தீ ஆதரவு நடைமுறை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து பதில்
பாதுகாப்பு அமைச்சர் ஆசி பெற்றார்
பதில் பாதுகாப்பு அமைச்சர், கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் திங்கட்கிழமை (19) மாலை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vagir’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஜூன் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TIPPU SULTAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PNS TIPPU SULTAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
கதிர்காம பாத யாத்திரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கும் இலங்கையின் பாரம்பரிய கதிர்காமம் பாத யாத்திரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஐந்தாவது தடவையாக கடந்த ஞாயிறன்று (ஜூன் 11 ) கலந்துகொண்டார்.
இராணுவத்தினரால் நந்திக்கடல் பகுதியில் சதுப்புநில தாவரங்களை நடுகை செய்யும் திட்டம் முன்னெடுப்பு
அண்மையில் ‘உலக சமுத்திர தினத்தை’ ஒட்டி முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள நந்திக்கடல் களப்பை அண்டியுள்ள சதுப்புநிலங்களில் இலங்கை இராணுவப் படையினரால் சதுப்பு நில தாவரங்களை நடுகை செய்யும் திட்டம் சனிக்கிழமை (10) முன்னெடுக்கப்பட்டது.