செயலாளர் செய்திகளைப் பாதுகாக்கவும்
பொதுமக்களின் பணத்திலிருந்து பராமரிக்கப்படும் சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறல் அவசியம் - பாதுகாப்புச் செயலாளர்
நீங்கள் இணைந்து கொண்டுள்ள இந்த துறையில் உங்களின் திறன்களை அதிகரித்துக் கொள்வதும் அதற்கேற்ப செயற்படுவதும் அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலாளர் கடற்படை தளத்திற்கு விஜயம்
திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்ன இன்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
ஆயுதப் படையினர்; தேசத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை வழங்க வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
மூன்று தசாப்தங்களாகக் காணப்பட்ட பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை பாதுகாப்புப் படையினர் வழங்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்தார்.
Tamil
Tamil
Tamil
தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வரும் பாதுகாப்பு திணைக்களம் - பாதுகாப்பு செயலாளர்
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம்
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் இலங்கையின் தலைமையில் இடம்பெற்றது. கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முதலாவது சந்திப்புக் கூட்டம் 2011ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் முன் முயற்சியினால் இடம்பெற்றது. தொடர்ச்சியான முறையில் வெற்றிகரமாக இடம்பெற்று வந்த இந்த கூட்டம், இறுதியாக ஆறு வருடங்களுக்கு முன் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் ஆரம்பம்
இலங்கை, இந்திய மற்றும் மாலைத்தீவுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் சற்று முன் கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமானது.
காடழிப்பைக் கட்டுப்படுத்த விமானப்படையினரால் வான்வழி கண்காணிப்பு - பாதுகாப்பு செயலாளர்
சட்டவிரோத காடழிப்பு பெருமளவில் பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக கவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் இதுவரை இல்லாதவாறு இலங்கை பெரும் பங்கு வகிக்கும் - பாதுகாப்புச் செயலாளர்
கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் முக்கிய "கடல் வழி" தொடர்புகளை இந்து சமுத்திரமானது ஏழு கடல்களின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இந்து சமுத்திரத்தின் ஒரு கூறாக உள்ள இலங்கை, இந்து சமுத்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும் என குறிப்பிட்டார்.
சீனக் குடாவில் இடம்பெற்ற விமானப்படையின் அணிவகுப்பில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
சீனக்குடாவில் உள்ள விமானப்படை அகடமியில் கலா சாலையில் இன்று காலை நடைபெற்ற இலங்கை விமானப்படையின் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.
தீகவாபி தூபியின் மீள் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்
தீகவாபி தூபியை மீள் நிர்மாண செய்வதற்கான அடிக்கள் நாட்டும் வைபவம் இன்று இடம் பெற்றது. அம்பாறையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ தூபியை மீள் நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதாக பாதுகாப்பு செயலாளர் உறுதிமொழி
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நீண்ட காலம் சேவையாற்றியவர் என்ற வகையில் அங்கு பௌத்த மத வழிபாட்டுக்கான புனித தலங்கள் அழிவடைந்து செல்வதை நான் கண்கூடாக கண்டுள்ளேன் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
விமானப் படைத்தளபதி பாதுகாப்பு செயலருடன் பிரியாவிடை சந்திப்பு
சேவை காலத்தைப் பூர்த்தி செய்து சேவையில் இருந்து வெளியேறிச் செல்ல உள்ள இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.
இராணுவ தலைமையகத்தில் இராணுவ அணிகலன் விற்பனைக் கூடம் பாதுகாப்புச் செயலாளரினால் திறந்து வைப்பு
பத்தரமுல்லவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் இராணுவ அணி கலன்களை விற்பனை செய்யும் விற்பனைக் கூடத்தினை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ரானி குணரத்ன ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
Tamil
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் விகாஷ் சூட், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஒக்டோபர்,09) சந்தித்தார்.
Tamil
இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க சாரணியம் ஊக்குவிக்கப்படல் வேண்டும் - பாதுகாப்பு செயலாளர்
சாரணியத்தினால் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை உணர்ந்து, இலங்கை சமூகத்தினுள் சாரணியம் உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
'பாதாளயோ' மற்றும் ' கோட்டாபய' புத்தகத்தின் ஆங்கில பதிப்பு ஜனாதிபதியிடம் கையளிப்பு
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் 59வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரினால் எழுதப்பட்ட 'கோட்டாபய' என்னும் சிங்கள புத்தகத்தின் ஆங்கில பதிப்பும், பாதாள உலக செயற்பாடுகளின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிங்கள நாவல் வடிவிலான 'பாத்தாளயோ' எனும் நாவலும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் நிறுவப்படும் - பாதுகாப்பு செயலாளர்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளங்களில் உள்ளடங்கும் புராதன பௌத்த விகாரையான தீக்கவாப்பி ஸ்தூபத்தின் புனர்நிர்மானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
அனர்த்தங்களை முற்கூட்டியே அடையாளம் காணும் முறைமை விரைவில் செயல்படுத்தப்படும்- பாதுகாப்பு செயலாளர்
மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் பேரனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயல்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு இன்று முதல் விஷேட அதிரடிப்படையினர் – பாதுகாப்பு செயலாளர்
கொழும்பு விலக்கமறியல் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இன்று முதல் (24) பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த ப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ( ஒய்வு ) கமல் குணரத்ன தெரிவித்தார்.
மீண்டும் தீவிரவாதத்திற்கு இடமில்லை – பாதுகாப்பு செயலாளர்
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிரிவினைவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்து பயங்கரவாதத்தை மீள உருவாக்கமுயல்பவர்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.