செய்திகள்
அமெரிக்கா உதவிப் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை சந்தித்தார்
இந்து- பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி றொயல் தலைமையிலான தூதுக்குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று (பெப்ரவரி 16) இருவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தனர்.
சிறந்த கடற்படைக் கப்பலாக ‘சிந்துரல’ தெரிவு செய்யப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையின் வருடாந்த சிறந்த கப்பல் போட்டியில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் ‘சிந்துரல’ தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களுக்கு இராணுவத்தின்
ஏற்பாட்டில் கடற்கரை கரப்பந்து பயிற்சி
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் (SLA) படையினர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி - கிழக்கில் உள்ள இளைஞர்களுக்காக அண்மையில் தலைடி கடற்கரையில் கடற்கரை கரப்பந்து பயிற்சியை நடத்தினர்.
4வது சிஐஎஸ்எம் (CISM) சர்வதேச இராணுவ கடற்கரை கரப்பந்து விளையாட்டுச் சாம்பியன் 2023 கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் ஆரம்பமானது
சர்வதேச நாடுகளின் இராணுவ வீரர்கள் பங்குபற்றும் 4வது சிஐஎஸ்எம் (CISM) சர்வதேச இராணுவ கடற்கரை கரப்பந்து விளையாட்டுச் சாம்பியன் 2023 சுற்றுப்போட்டி கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை உடற்பயிற்சி கூட வளாகத்தில் இன்று (12 பெப்ரவரி 2023) சம்பிரதாயபூர்வமாக இலங்கை விமானப்படையின் பிரதித் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கட்டானவில் ஏட்பட்ட தீயை அணைக்க விமானப்படை உதவி
கட்டானாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று (பெப்ரவரி 12) ஏற்பட்ட தீயை கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின் இலங்கை விமானப்படை தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்.
சட்டவிரோதமாக சுறா மீன் மற்றும் துடுப்புகளை வைத்திருந்த நபர் கரையோர பாதுகாப்பு படையினரால் கைது
இலங்கை கரையோர பாதுகாப்பு படையினர் நேற்று (12) டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட சுறா மீன் மற்றும் துடுப்புகளை வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள இராணுவப் பண்ணைகளில் மரக்கறிகள் மற்றும் நெல் அறுவடை
இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் நாடு முழுவதும் உள்ள இராணுவப் விவசாய பண்ணைகளில் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல மாதங்களுக்கு முன்னர் அந்தந்தப் பண்ணைகளில் பயிரிடப்பட்ட பெரும்போக நெல் அறுவடை மற்றும் பருவகால மரக்கறிகளை அறுவடைசெய்யும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Tamil
இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தொடர்ச்சியான பயிற்சி உதவிகளை வழங்க பாகிஸ்தான் இராணுவ கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி உறுதி
இலங்கையின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என பாக்கிஸ்தான் கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, NI (M) உறுதியளித்துள்ளார்.
இராணுவத்தினரால் வறிய மாணவர்களுக்கு நிவாரண உதவிகள்
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினரால் வட பிராந்தியத்தில் உள்ள உடையார் கட்டில் உள்ள மாணவர்களுக்கு புதிய காலணிகள் அண்மையில் (பெப்ரவரி 05) வழங்கப்பட்டது.
அத்தனகலு ஓயாவில் ஏற்பட்ட அடைப்பு இராணுவ உதவியுடன் நீக்கப்பட்டது
அத்தனகல்ல பிரதேச செயலக அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இலங்கை இராணுவத்தினர் வடிகால் நீரின் அடைப்பை நீக்குவதற்கு தங்களின் உதவியை வழங்கினர். மரக்கிளைகள், இலைகளை நீக்கி மங்கலதிரிய பிரதேசத்தில் இருந்து மண் மேடுகளை கொண்டுவந்து அத்தனகல ஓயவின் அணைக்கட்டின் அடைப்பை நீக்கும் பணிகளை மேற்க்கொண்டனர்.
பாதுகாப்பு தொடர்பான புதிய முன்னேற்றங்களை அடையாளம் காண தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் களம் அமைத்துள்ளது - பாதுகாப்பு செயலாளர்
ஆய்வு, கல்வி மற்றும் வலையமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதன் மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையின் தேசிய பாதுகாப்பு சிந்தனைக் குழுவாக தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) நடத்திய ஆய்வுகள் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு கற்கைகள் இலங்கை அரசாங்கத்திற்கான தேசிய பாதுகாப்பு அணுகுமுறைகளை உருவாக்குவதில் சமீபத்திய பாதுகாப்பு முன்னேற்றங்களை அடையாளம்காண வழிவகுத்துள்ளது.
Tamil
இலங்கை கடலோரப் பாதுகாப்புபடை அதிக கடலாமை குஞ்சுகளை கடலில் விடுவித்தது
இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை மிரிஸ்ஸ மற்றும் பலபிட்டியவில் இருந்து 140க்கும் மேற்பட்ட கடலாமை குஞ்சுகளை அண்மையில் கடலுக்கு விடுவித்தது. இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினர் 13569 ஆமை முட்டைகளை பாதுகாத்து 1153 குஞ்சுகளை 2023 இல் கடலில் விடுவித்ததாக கடலோரப் பாதுகாப்புபடை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamil
Tamil
75ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நடைபெற்றது.
75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (04) முற்பகல் காலிமுகத்திடலில் நடைபெற்றது.
சிறப்பாக நடைபெற்ற தேசிய சுதந்திர தின அணிவகுப்புக்கு
பாதுகாப்பு அமைச்சு பாராட்டு
இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “நமோ நமோ மாதா-நூற்றாண்டை நோக்கி ஒரு படி” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (பெப்ரவரி 04) கொழும்பு, காலி முகத்திடலில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சேர்வெட் ஒகுமுஸ் மரியாதை நிமிர்த்தம் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
நேபாள பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
புது டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ராம் சந்திரா காத்ரி மரியாதை நிமிர்த்தம் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஐவரி கோஸ்ட் தூதுவருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஐவரி கோஸ்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமேதகு Eric Camille N'dry இன்று (பெப்ரவரி 03) கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
உணவுப் பாதுகாப்பு துறைக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவை முக்கியமானது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவை மிகவும் முக்கியமானதாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது.
விபத்தில் சிக்கிய உள்ளூர் மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்
திருகோணமலை கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு பாறையுடன் மோதி விபத்துக்குள்ளான நான்கு (04) உள்ளூர் மீனவர்களை கடற்படை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.