செய்திகள்
அமெரிக்க கடற்படையின் ‘யுஎஸ்எஸ் எங்கொரேஜ்’ கப்பலைப் பார்வையிட
பாதுகாப்பு செயலாளர் விஜயம்
கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘யுஎஸ்எஸ் எங்கொரேஜ்’ கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று (ஜனவரி 20) விஜயம் செய்தார்.
தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ்.பொன்சேகா இன்று (ஜனவரி 20) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
Tamil
Tamil
யாழ்ப்பாணம் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க கல்லூரியில்
கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன், யாழ்ப்பாணம் மண்டைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட றோமன் கத்தோலிக்க கல்லூரியின் கேட்போர் கூட கட்டிடம் 2023 ஜனவரி 19 ஆம் திகதி யாழ்ப்பாண ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
Tamil
Tamil
2,467 கிலோ பீடி இலைகளுடன் சந்தேகநபர்கள் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தொடுவாவ மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடலோரக் காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2,467 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகள் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு அமைச்சு பணியாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு
குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று இன்று (ஜனவரி 17) பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது.
கர்னல் நளின் ஹேரத்தின் புத்தகம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கர்னல் நளின் ஹேரத் எழுதிய " “STORY OF THE WORLD: Geopolitical Alliances and Rivalries Set in Stone” " என்ற புத்தகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாலர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களும் கலந்துக் கொண்டார்.
நாட்டில் பல இடங்கள் மலையுடன் கூடிய காலநிலை
பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன. 17) காலை வெளியிடப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கைக்கமைய, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
Tamil
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் டெல்லி' கப்பலானது திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான "ஐஎன்எஸ் டெல்லி" என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (ஜனவரி15 ) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Tamil
நாங்கள் முழு உலகத்திற்கும் நண்பர்கள் யாருடைய எதிரிகளும் அல்ல
- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
உலகளாவிய புவிசார் அரசியல் நலன்களின் சமீபத்திய முன்னேற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் ஒரு தீவு தேசமாக நமது நோக்கங்களை மறுவரையறை செய்வது இன்றியமையாதது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கைக;கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு காலித் நாசர் சுலைமான் அல்அமெரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கிரிக்கட் வீராங்கனைக்கு புதிய வீடு நிர்மாணிப்பு
அண்மையில் தேசிய மட்டத்தில் சாதனைகளை புரிந்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம் சுள்ளிபுரத்திலுள்ள விக்டோரியா கல்லூரியைச் சேர்ந்த செல்வராசா கிரிஸ்டிகாவுக்கு இராணுவத்தினரால் புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இராணுவத்தினரால் யால சரணாலயத்தில் 60,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் முன்னெடுப்பு
வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சினால் யால சரணாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மர நடுகை திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழுள்ள 121 வது பிரிகேடின் 20 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 18 வது கெமுனு ஹேவா படையினர் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
Tamil
அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தை ஆற்றிய மகத்தான சேவைகளை போற்றுமுகமாக மற்றும் அவரின் விண்ணேற்றத்தை குறிக்குமுகமாக இன்று (05 ஜனவரி) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பணித்துள்ளார்.
கடற்படையின் புதிய தலைமை அதிகாரி பதவி ஏற்றார்
ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன 2022 டிசம்பர் 23 முதல் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்காவில் நடைபெற்ற நான்காவது தெற்காசிய செபக் டக்ரா போட்டியில்
இராணுவ வீரர்கள் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்
அண்மையில் பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 4வது தெற்காசிய செபக் டக்ரா போட்டியில் இலங்கை தேசிய செபக் டக்ரா குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு 5 வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் இணையதளம் ஆரம்பித்து வைக்கப்பட்டது
பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கான www.disastermin.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களினால் கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (ஜன. 02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Tamil
இராணுவத்தினர் கும்புறுப்பிட்டி கிராமத்தில் புதிய நீர்
சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தனர்
கிழக்கு (SFHQ-E) பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 17 ஆவது இலங்கை தேசிய காவலர் (SLNG) படையினர்களினால் அண்மையில் கும்புறுப்பிட்டியில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.