--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா ஜனாதிபதியின் பங்கேடுப்புடன் நடைபெற்றது

13வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (மே 19) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்கேடுப்புடன் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவிடத்தில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி அவர்களின் தேசிய படைவீரர்கள் தினச் செய்தி…

தாய் நாட்டின் சுதந்திரத்தையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த, வீரமிக்க படைவீரர்களை நாம் என்றும் மறக்க மாட்டோம். அவர்களின் தியாகத்தின் உயிர்ச்சக்தியை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம் என்பதே அதற்குக் காரணம். எனவே, இந்த ஆண்டும் தேசிய நோக்கத்திற்காக படைவீரர்கள் ஆற்றிய மகத்தான தியாகங்களை நினைவுகூர்ந்து தேசிய படைவீரர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நோயாளிகளின் நலனுக்காகப் படை வீரர்கள் இரத்த தானம்

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை இராணுவத் துருப்புக்கள் தங்களின் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக இரத்ததான முகாம்கள்களை அண்மையில் நடத்தினர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாரிஸ் குத்துச்சண்டை போட்டியில் இலங்கை ராணுவ வீரர் தங்கம் வென்றார்

பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற  ‘லெஸ் செண்சுரீஸ் குத்துச்சண்டை சுற்றுப்போட்டி பாரிஸ்-2022’ இல் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர் லான்ஸ் கோப்ரல் பி.ஏ.ஆர் பிரசன்ன, வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மோசமடையும் கடல் வானிலை- வானிலை மையம்

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17) விடுத்துள்ள கடல்சார் வானிலை முன்னறிவிப்பிற் கமைய அடுத்த 24 மணித்தியாலங்களில் பின்வரும் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதுகாப்பு செயலாளர் ஆய்வு செய்தார்

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (மே 16) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் நோயுற்ற மீனவர் கரைக்கு கொண்டு வர உதவி

கடலில் வைத்து சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், நேற்று மாலை (மே 15) இலங்கை கடற்படையினரால் சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்படை ஊடகங்களின்படி, உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு ‘சிந்தூர் 04’ ல் இருந்த மீனவர் ஒருவர் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் இருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் விதவை ஒருவருக்கு இலங்கை இராணுவத்தினரால் புதிய வீடு

யாழ்ப்பாணத்தில் விதவை ஒருவருக்காக புதிய வீடொன்ரை நிர்மாணிக்க வேண்டி அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இலங்கை இராணுவத்தின் சமூகநல திட்டத்தின் ஒரு அங்கமாக


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெல்ல அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்க கடற்படை நிவாரண குழுக்கள் தயார்நிலையில்

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ள நிலையில், வெல்ல அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்குமுகமாக இலங்கை கடற்படையினர் 10 நிவாரண குழுக்களை மேட்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் ஈடுபடுத்தியுள்ளது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தென்மேற்கு பகுதிக்கு 150 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யும் - வானிலை மையம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மன்னாரில் இராணுவப் படையினர் இரத்ததானம்

மன்னார் வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னார் மாத்தோட்ட ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற இரத்த தான முகாம் ஒன்றின் போது, இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (மே 12) பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன் எச்சரிக்கையை விடுத்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கனுகஹவெவ மாதிரி கிராமத்தை பாதுகாக்க யானை வேலி

கனுகஹவெவ மாதிரி கிராமத்தில் இலங்கை விமானப்படையினரால்  அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட 14 கிலோமீற்றர் நீளமான யானை வேலி மே மாதம் 10 ம் திகதியன்று  அம்மக்களுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்ட விரோத செயல்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் தீ வைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக எந்தவொரு அரசியல் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனக்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, செவ்வாய்கிழமை (மே 10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்களை மீண்டும் நியமித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊடக அறிக்கை

கொழும்பு, காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்தல் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பைப் உறுதி செய்யும் நோக்குடன் பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் பூங்கா அன்பளிப்பு

யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கோப்பாய் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் அன்பளிப்பாக வழங்கிய சிவில்-இராணுவ ஒத்துழைப்பு (CIMIC) பூங்கா நேற்று (மே 8) பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சர்வதேச கடற்பரப்பில் பெருமளவான போதைப் பொருட்களை கடற்படையினரால் பைப்பற்று

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோ கிராம் போதைப் பொருட்கள் இலங்கை கடற்படையினரால் (SLN) தெற்கு பிராந்தியத்திற்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் அண்மையில் கைப்பற்றப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடலோர காவல்படை JICA மற்றும் JCG உடன் பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் இலங்கை கடலோர காவல்படை (SLCG) இடையே, பேரிடர் தணிப்பு மற்றும் கடல் சூழல் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு மேம்பட்ட எண்ணெய் கசிவு சம்பவ மேலாண்மை பயிற்சி திட்டத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல் பதிவு சமீபத்தில் இலங்கை கடலோர காவல்படை நிலையம் வருணா வில் கைச்சாத்திடப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் யாழ்ப்பாண மாணவ படையணியினருக்கு தலைமைத்துவப் பயிற்சி

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 50 யாழ்ப்பாண பாடசாலை மாணவ படையணியினருக்கு தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சி ஒன்று அண்மையில் தல்செவன விடுமுறை விடுதியில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒரு தொகை சட்டவிரோத சுறா மீன் பாகங்கள் கடலோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்று

இலங்கை கடலோர காவல்படையினர், நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட சுறா மீன் பாகங்களுடன் ஆறு மீனவர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி படகொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வத்தளையில் மூன்று கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்க இலங்கை கடற்படை உதவி

வத்தளை, எலகந்தவில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மூன்று ஜவுளிக் கடைகளில் இன்று (மே 06) காலை ஏற்பட்ட தீயை இலங்கை கடற்படையினர் அணைத்துள்ளனர்.